கனமான கஷ்டத்தை கொடுக்கும் கடன் பிரச்சனை கூட காற்றோடு காற்றாக கலந்து காணாமல் போகும். கஜமுகனுக்கு இந்த விளக்கை ஏற்றினால்.

vinayagar-vilakku
- Advertisement -

ரொம்பவும் பெரிய பாரமாக தலை மேல் கடன் நிற்கிறது. இந்த கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் விழிப்பிதிங்கி நிற்பவர்கள் இந்த ஒரு பரிகாரத்தை செய்யலாம். எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு தரக்கூடிய சக்தி அந்த கஜமுக பிள்ளையாருக்கு உண்டு. அதேபோலத்தான் கஷ்டத்தை கொடுக்கும் கடனையும் மிக மிக எளிமையாக தீர்த்து வைத்து விடுவார். விநாயகரை நினைத்து மனம் உருகி நம்பிக்கையோடு இந்த ஒரு விளக்கை ஏற்றினால். கடனை தீர்க்கக் கூடிய அந்த விளக்கு என்ன, எந்த நேரத்தில் எந்தக் கிழமையில் அந்த விளக்கை முறையாக எப்படி ஏற்றுவது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

கடன் அடைய விநாயகருக்கு ஏற்ற வேண்டிய விளக்கு:
விநாயகருக்கு வியாழக்கிழமை அன்று இந்த விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். வியாழக்கிழமை வரக்கூடிய எமகண்ட நேரத்தில் வீட்டின் அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு சென்று, மண் அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, அந்த எண்ணெய்க்கு உள்ளே கொள்ளு ஏழு என்ற கணக்கில் போட்டு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, மனதார உங்களுக்கு இருக்கும் கடன் கஷ்டம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

தொடர்ந்து 16 வாரம் வியாழக்கிழமை, எமகண்ட நேரத்தில் இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். 16-வது வாரம் வியாழக்கிழமை எமகண்டத்தில் இந்த கொள்ளு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு, 1 கிலோ கொள்ளு வாங்கி வெற்றிலை பாக்கு பூ பழம் எல்லாம் வாங்கி அங்கு இருக்கும் குருக்களுக்கு தாம்பல தட்டில் வைத்து ஒரு தட்சணை வைத்து தானமாக கொடுத்து விட வேண்டும்.

கூடவே சேர்த்து அருகம்புல் மாலையை உங்கள் கையால் கட்டி விநாயகருக்கு போட்டு ஒரு சிதறு தேங்காய் உடைத்து உங்கள் பெயரைச் சொல்லி ஒரு அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை முறையாக நம்பிக்கையோடு செய்தாலே வாழ்வில் இருக்கும் கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். மேலும் மேலும் கடன் வாங்காமல் இருப்பதற்கு உண்டான வழியையும் அந்த பிள்ளையார் காண்பித்துக் கொடுப்பார்.

- Advertisement -

அதேபோல ஒரு வியாழக்கிழமை எமகண்ட நேரத்தில் முடிந்தால் பிள்ளையார்பட்டியில் இருக்கும் பிள்ளையாரை சென்று தரிசனம் செய்வது ரொம்ப ரொம்ப நல்லது. உங்களால் முடிந்தால் பிள்ளையார்பட்டி விநாயகரை எமகண்ட நேரத்தில் தரிசனம் செய்வது நம் வாழ்வில் ஏராளமான நல்ல மாற்றத்தை கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் உங்க கையில் தங்கவில்லையா? உங்க பூஜை அறையில் இதை வையுங்க! இனி பணம் தடையில்லாமல் புழங்கும்.

பரிகாரத்திற்காக மட்டுமில்லை. தினமும் வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது விநாயகரை மனதார நினைத்து வழிபாடு செய்து விட்டு கிளம்பினால் நாம் செல்லும் காரியம் எந்த ஒரு தடையும் இல்லாமல் நடக்கும் என்பதும் நம்முடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது. மறக்காதிங்க கஷ்டம் தீர மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை செய்து அனைவரும் பலன் பெற வேண்டும் என்று விநாயகப் பெருமானை வேண்டிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -