கடன் தீர குபேர பௌர்ணமி தீபம்

kadan theera
- Advertisement -

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற கூற்றுக்கேற்ப தை மாதத்தில் வரக் கூடிய ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு பண்டிகையும் நமக்கு ஒவ்வொரு வழியை காட்டுவதாய் அமையும். அந்த வகையில் நாளை வரக் கூடிய பௌர்ணமி குபேர பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. பொதுவாகவே பண வரவிற்கு பௌர்ணமி வழிபாடு உகந்ததாக சொல்லப்படுகிறது.

அத்துடன் வியாழக்கிழமை குபேர வழிபாட்டிற்கு உகந்ததாகவும் சொல்லப்படும். நாளைய தினம் இவை இரண்டும் ஒன்றாக சேர்ந்து வந்திருக்கிறது. அத்துடன் முருகருக்கு உகந்த தைப்பூச நன்னாளும் இணைந்து வந்திருப்பது இன்னும் சிறப்பை தருவதாக உள்ளது. இந்த பௌர்ணமி நாளில் நாம் செய்யக் கூடிய இந்த எளிய வழிபாடானது நம்முடைய கடனை தீர்த்து பண வரவை ஏற்படுத்தும். அந்த வழிபாட்டைத் பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பணவரவை ஏற்படுத்தக் கூடிய குபேர பௌர்ணமி
இன்று பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை எனில் அது பண பிரச்சனை தான். அதுவும் பணப்பற்றாக் குறையால் ஏற்பட்டிருக்கும் கடன் தொல்லை மிகவும் கொடியதாகவே இருக்கும். இந்த கடன் தொல்லை தீர்ந்தாலே ஓரளவிற்கு நாம் நிம்மதியாக வாழ்ந்து விடலாம். இத்தகைய கடன் தீர செல்வ வளம் வேண்டும். அந்த வளத்தை தரக் கூடியவர் தான் குபேரர்.

நாளைய தினம் வியாழக்கிழமை அதிலும் பௌர்ணமி திதி இணைந்து வந்திருப்பது மிகவும் விசேஷம். வியாழக்கிழமை குபேரருக்கு உகந்த நாள். அன்றைய தினத்தில் நாம் ஏற்றக் கூடிய இந்த தீபமும் செய்யக் கூடிய வழிபாடும் நம்முடைய செல்வ வளத்தை பெரும் அளவு அதிகரிக்கும். அந்த தீப வழிபாட்டை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இதற்கு நாம் பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்ற வேண்டும். வீட்டில் குபேரர் படம் இருந்தால் துடைத்து மஞ்சள் பூங்கமும் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள் இல்லாவிடில் மகாலட்சுமி தாயார் பெருமாள் போன்றோரின் படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் இந்த பூஜையை நாளை மாலை 7 மணிக்கு மேல் 10 மணிக்குள்ளாகத் தான் செய்ய வேண்டும். இந்த நேரம் தான் இதற்கு மிகவும் உகந்ததாக உள்ளது.

ஒரு சிறிய தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். தட்டில் முழுவதுமாக நல்ல வாசம் மிக்க மலர்களை பரப்பி விடுங்கள். அதன் நடுவில் ஒரு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். இந்த தீபம் கிழக்கு நோக்கி எறிய வேண்டும். நீங்கள் வடக்கு முகமாக அமர்ந்து கொள்ளுங்கள். இந்த தீப வழிபாட்டிற்கு ஏதேனும் ஒரு இனிப்பை நெய்வேத்தியமாக செய்து வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்போது இந்த விளக்கு முன்பாக அமர்ந்து நீங்கள் ஓம் குபேராய நமக என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இதை சொல்லும் போது உங்கள் கையில் சிறிது நாணயத்தை வைத்துக் கொள்ளுங்கள். இந்த வழிபாடு முடிந்த பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் கையில் வைத்து பூஜை செய்து அந்த நாணயத்தை ஒரு துணியில் வைத்து கட்டி உங்களுடைய பீரோவில் வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பிறவிப் பிணி நீக்கும் பூச நட்சத்திரம்

இது நல்ல பண வரவை ஏற்படுத்திக் கொடுக்கும் கடன் அடைவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த குபேர தீப வழிபாட்டு நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் சேர்த்து கடன் இல்லாத பெருவாழ்வை வாழுங்கள்.

- Advertisement -