கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர குலதெய்வ பரிகாரம்

mangalyam4
- Advertisement -

எவ்வளவு பெரிய பண பிரச்சனையாக இருந்தாலும், எவ்வளவு பெரிய கடன் பிரச்சனையாக இருந்தாலும், அதிலிருந்து வெளிவர முடியும். ஆனால் அதற்கு முழு நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். இந்த நம்பிக்கையோடு சேர்த்து நம்முடைய நேர காலத்தையும் கொஞ்சம் பார்க்க வேண்டும். ரொம்பவும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி உள்ளவர்கள், உங்களுடைய தனிப்பட்ட ஜாதகத்தை கொண்டு போய் ஜோதிடரிடம் காண்பியுங்கள்.

ஏதாவது கிரஹச்சார சூழ்நிலை சரியில்லை என்றால், அதற்கு தகுந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம். ஜாதகம் எல்லாம் பார்க்க முடியாது எங்களுக்கு ஜாதகமும் இல்லை, என்பவர்கள் பொதுப்படையாக சொல்லப்பட்டிருக்கும் குலதெய்வம் சார்ந்த இந்த பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயமாக 9 வாரத்தில் உங்களுடைய பணப் பிரச்சனை கடன் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைக்கும்.

- Advertisement -

கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர குலதெய்வ பரிகாரம்

இந்த பரிகாரம் மகாலட்சுமியின் அம்சம் கொண்ட கல் உப்பை வைத்து தான். வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணியில் இருந்து 7:00 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். வெள்ளிக்கிழமை என்றால் நம் வீட்டு பூஜை அறை சுத்தபத்தமாக புது பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு பார்ப்பதற்கு, மங்களகரமாக இருக்கும்.

ஆகவே இந்த பூஜைக்காக நீங்கள் பிரத்தியேகமாக எந்த ஒரு வேலையையும் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. பூஜை அறையில் குலதெய்வ திருவுருவப்படத்திற்கு முன்பாக மட்டும் ஒரு மண் அகல் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தின் முன்பாக ஒரு கண்ணாடி டம்ளரில் தண்ணீர் வையுங்க. அடுத்து ஒரு மஞ்சள் துணியை எடுத்து உங்கள் முன்பாக ஒரு தட்டின் மேல் விரித்து வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய கையில் 1 கைப்பிடி அளவு கல் உப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். கல் உப்பை உள்ளங்கைகளில் வைத்து இறுக்கமாக பிடிச்சுக்கோங்க. அந்த கல் உப்பு லேசாக உங்க உள்ளங்கைகளில் குத்தட்டும். அந்த கல்லுப்பின் அச்சு உங்கள் கைகளில் விழும் அளவுக்கு இந்த அழுத்தம் இருக்க வேண்டும். பிறகு உங்களுடைய கடன் சம்பந்தப்பட்ட பிரச்சனையை குலதெய்வத்திடம் சொல்லி அந்த பிரச்சினையில் இருந்து சீக்கிரம் வெளி வருவதற்கான வழியை காட்ட வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

பிரார்த்தனையை முடித்துவிட்டு கையில் இருக்கும் கல் உப்பை அப்படியே அந்த மஞ்சள் துணியில் வைத்து அதற்கு மேலே ஒரு ரூபாயை வைத்து முடிச்சு போட்டு, இதை அப்படியே குலதெய்வத்தின் திரு உருவப்படத்திற்கு முன்பாக வைத்து விட்டு, கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இதே போல, அடுத்து எட்டு வாரம் வெள்ளிக்கிழமை இந்த பூஜையை செய்ய வேண்டும்.

- Advertisement -

முதல் வாரம் பூஜை செய்ததோடு சேர்த்து மொத்தம் ஒன்பது முடிச்சுகள் உங்கள் வீட்டு பூஜை அறையில் இருக்கும். ஒன்பது வாரம் முடிந்தவுடன் குலதெய்வ கோவிலுக்கு சென்று இந்த கல்லுப்பை குலதெய்வ கோவிலுக்கு தானம் கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இந்த கல்லுப்பை குலதெய்வ கோவிலில் இருக்கும் நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தீராத நோய் தீர முருகன் வழிபாடு

சில குலதெய்வ கோவில்களில் கல்லுப்பு கொட்டுவதற்காகவே ஒரு இடம் இருக்கும் அந்த இடத்திலும் இந்த கல் உப்பை கொட்டலாம். உங்களுக்கு குலதெய்வமே தெரியாது என்பவர்கள் ஏதாவது ஒரு பிரபல்யமான முருகன் கோவிலுக்கு இந்த கல்லுப்பை தானம் வழங்கலாம். எளிமையான வழிபாடு தான் ஒன்பது வாரங்களில் நிச்சயம் உங்களுடைய கடன் பிரச்சனைக்கு ஒரு தீர்வை காட்டிக் கொடுக்கும் பரிகாரம். ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -