இந்த ஒரு மலரை வைத்து மகாலட்சுமி பூஜை செய்தால், தீர்க்க முடியாத கடனும் தீர்ந்துவிடும். வரவேண்டிய தொகையும் விரைவில் வந்துவிடும்.

mahalakshmi amount
- Advertisement -

அனைவரின் வாழ்க்கையிலும் நடக்கக்கூடிய ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் செல்வம் என்ற ஒன்று மறைந்து தான் இருக்கிறது. செல்வம் இல்லாமல் எந்தவித காரியத்தையும் செய்ய முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் குறிப்பாக பணம் இல்லாமல் இந்த உலகமே இல்லை என்று கூறலாம். ஒருவர் வாழ்க்கையில் முன்னேறுகிறார் என்றால் அவரிடம் பணம் அதிகரிக்கிறது என்று அர்த்தம். அதே போல் ஒருவரின் வாழ்க்கை சரிகிறது என்றார் அவரிடம் பணம் காலி ஆகி கொண்டே இருக்கிறது. பணத்தை தக்க வைத்துக் கொள்ளவும், நமக்கு ஏற்பட்டிருக்கும் கடன் பிரச்சனைகள் தீரவும் எந்த மலரை வைத்து மகாலட்சுமி பூஜை செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு தான் பார்க்க போகிறோம்.

ஒருவருக்கு மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக இருக்கிறது என்றால் அவரின் செல்வ செழிப்பு மேலோங்கி இருக்கிறது என்று அர்த்தம். எவர் ஒருவர் கடன் இல்லாமல் தன் வாழ்க்கையை மேற்கொள்கிறாரோ அவரிடம் மகாலட்சுமியின் அருள் இருக்கும். தீர்க்கவே முடியாத கடனை தீர்ப்பதற்கு முதலில் நாம் மகாலட்சுமி தாயாரை வணங்க வேண்டும். அவரை வணங்கினால் அவர் நமக்கு செல்வ செழிப்பை தருவார். அதோடு அந்த செல்வ செழிப்பை பயன்படுத்தி நம்முடைய கடன் பிரச்சினைகளையும் நம்மால் தீர்க்க முடியும்.

- Advertisement -

மேலும் நாம் யாரிடமாவது பணத்தை கொடுத்துவிட்டு ஏமாந்து போயிருந்தாலும், வரவே வராது என்று நினைத்த பணம் நம்மை தேடி வருவதற்கு மகாலட்சுமி பூஜை மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட மகாலட்சுமி பூஜையை மிகவும் எளிமையான முறையில் செய்வது எப்படி என்று பார்ப்போம்.

மகாலட்சுமிக்கு உகந்த கிழமையான வெள்ளிக்கிழமை அன்று காலை 6 மணிக்கு இந்த பூஜையை செய்ய வேண்டும். ஒரு தாமரை மலரை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த மலர் மகாலட்சுமி தாயார் வாசம் புரியும் மலர். ஆதலால் அந்த மலருக்கு நாம் பூஜை செய்வது மகாலட்சுமி தாயார் பூஜை செய்வதற்கு சமமாக கருதப்படுகிறது.

- Advertisement -

பூஜையை செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பாக மஞ்சளில் விநாயகரை பிடித்து வைத்து, அவருக்கு அருகம்புல்லால் “ஓம் லக்ஷ்மி கணபதியே நமஹ” என்று அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு தாமரை மலரின் நடுவில் குங்குமத்தை வைத்து “ஓம் மகாலட்சுமி தாயாரே போற்றி” என்று 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும்.

மகாலட்சுமி தாயாருக்கு பிடித்தமான நெய்வேத்தியத்தை வைத்து சாம்பிராணி தூபம் போட்டு வழிபட வேண்டும். கடைசியாக ஒரு அகல் விளக்கில் இரண்டு கிராம்பை வைத்து அதன் மேல் ஒரு கற்பூரத்தை வைத்து கற்பூரம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

கற்பூரம் எரியும் பொழுது நம்முடைய வேண்டுதலை நாம் மகாலட்சுமி தாயார் இடம் கூற வேண்டும். பிறகு தாமரை மலரில் நாம் அர்ச்சனை செய்த குங்குமத்தை எடுத்து வெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு நாம் தினமும் நம் நெற்றியில் இந்த குங்குமத்தை வைப்பதன் மூலம் தன ஆகர்ஷணம் ஏற்பட்டு நம்முடைய கடன் விரைவில் தீர்ந்து விடும்.

இதையும் படிக்கலாமே: வெறும் பத்து ரூபாய் செலவு செய்தால் போதும். தொழிலில் பல ஆயிரம் லாபத்தை சுலபமாக எடுத்து விடலாம்.

இந்த எளிமையான மகாலட்சுமி பூஜையை நாம் நம் இல்லங்களில் வெள்ளிக்கிழமை தோறும் மேற்கொள்வதன் மூலம் மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருளை பெற்று செல்வ செழிப்புடன் கடன் சுமையற்று நிம்மதியுடன் வாழலாம்.

- Advertisement -