வெறும் பத்து ரூபாய் செலவு செய்தால் போதும். தொழிலில் பல ஆயிரம் லாபத்தை சுலபமாக எடுத்து விடலாம்.

guberar
- Advertisement -

எவ்வளவு நாள் தான் வேலை செய்து மாத சம்பளத்திற்கு கஷ்டப்படுவது என்று நினைத்து, நிறைய பேர் சொந்த தொழிலை தொடங்கி விடுகிறார்கள். ஆரம்பத்தில் ஆர்வத்தோடு தொடங்கிய தொழில், போக போக மந்தமான பின்பு, அந்த தொழிலை தொடர்ந்து நடத்த வேண்டுமா என்று ஒரு எண்ணம் எழும். முதலீடு போட்டவரின் மனதில் பயம். போட்ட முதலை கூட எடுக்காமல் போய்விடுமோ என்று. அவ்வளவு சுலபமாக எல்லாராலும் சொந்த தொழிலில் ஜெயித்து விட முடியாது. சொந்தத் தொழிலில் ஜெயித்தவர்களுக்குப் பின்னால் ஒரு பெரிய சோக கஷ்டமான கதை இருக்கும். சரி, அதெல்லாம் போகட்டும். நஷ்டத்தில் போகும் தொழிலை லாபத்தில் மாற்ற என்ன வழி.

எதிலும் அதிர்ஷ்டம் தேவை. யோகம் தேவை. அதற்காக உழைக்க வேண்டாமா. அதிர்ஷ்டம் யோகம் மட்டும் இருந்தால் போதுமா என்று சில பேர் கேள்வி கேட்கலாம். எவ்வளவுதான் உழைத்தாலும், கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் மனிதர்கள், மேலும் மேலும் கஷ்டப்படுவதை, நாம் தினமும் பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றோம். ஆகவே, உழைப்போடு சேர்ந்து, அதிர்ஷ்டமும் நம் பக்கம் துணை இருந்தால் சொந்தத் தொழிலில் சீக்கிரம் முன்னேறி விடலாம்.

- Advertisement -

தொழிலில் நல்ல முன்னேற்றம் அடைய அந்த அதிர்ஷ்ட காற்றை நம் பக்கம் வீசவைக்க பணவசியம் ஜன வசியம் ஏற்பட நாம் செய்ய வேண்டிய சின்ன சின்ன தாந்திரீக பரிகாரங்களை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறைந்த செலவில் உங்கள் உழைப்போடு சேர்ந்து இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்யும் போது எதிர்பாராத அதிர்ஷ்டமும் எதிர்பாராத லாபமும் உங்க தொழிலில் வரும்.

சொந்தத் தொழிலில் அதிக லாபம் பெற செய்ய வேண்டிய தாந்திரீக பரிகாரம்:
இந்த பரிகாரத்தில் முதல் பரிகாரமாக நாம் பார்க்க இருப்பது குபேர தன ஆகர்ஷன யந்திரம். பெரும்பாலும் இது நாட்டு மருந்து கடைகளில் கூட செப்பு தகடில் வரைந்து விற்கப்படுகின்றது. இதை வாங்கி தொழில் செய்யும் இடத்தில் வைக்கலாம். பூஜை அறையில் இந்த எந்திரத்தை வைத்து தினமும் விளக்கு ஏற்றும் போது, ஊதுவத்தியை இந்த எந்திரத்திற்கும் காண்பித்து வர உங்கள் தொழிலில் பண வசியம் ஏற்படும். நொடிந்து போன தொழில் கூட ஓஹோ என லாபத்தை பெறுவதற்கு இந்த எந்திரம் நல்லதொரு வழியை காட்டிக் கொடுக்கும்.

- Advertisement -

ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்துக்கோங்க. அதில் கொஞ்சம் தண்ணீர், கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கலந்து வச்சுக்கோங்க. இந்த தண்ணீரில் வாசம் நிறைந்த பூக்களை போட்டு, அழகான அந்த கண்ணாடி டம்ளரை அப்படியே கல்லாப்பெட்டிக்கும் மேலே, அதாவது வரவேற்பு அறையில் இருக்கும் டேபிளுக்கு மேலே வைத்தாலும் பணவசியம் ஏற்படும். மல்லிகை பூ கிடைக்காத சமயத்தில் வாசம் நிறைந்த வேறு ஏதாவது பூக்களை இந்த தண்ணீரில் போட்டு வைக்கலாம். எதுவுமே கிடைக்கவில்லை என்றால் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம் பழம் போட்டு வையுங்கள்.

வாரத்தில் ஒரு முறையோ இரண்டு முறையோ தண்ணீரில் இருக்கும் பூக்கள் வாடியவுடன் தண்ணீர் அழுக்கான பிறகு அதையெல்லாம் கீழே கொட்டி விட்டு டம்ளரை கழுவி விட்டு மீண்டும் புதுசாக தண்ணீரையும் பூவையும் வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

சில பேருக்கு தொழில் செய்யும் இடத்தில் அமர்ந்து வேலை செய்ய முடியாது. கண் திருஷ்டி பட்டது போல ரொம்பவும் உடல் அசதி இருக்கும். இடுப்பு கைகால் நிக்காது என்று சொல்லுவார்கள் அல்லவா. அந்த மாதிரி சமயத்தில் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். தொழில் செய்யும் இடத்தில் ரொம்பவும் தூக்கம் வருவது போல இருந்தால், வேலையை சரியாக கவனிக்க முடியவில்லை என்றால். உங்களுக்கு கண் திருஷ்டி பட்டிருக்கலாம் அல்லது ஏதாவது காத்து கருப்பு போன்ற எதிர்மறை ஆற்றலின் தாக்கமாக இருக்கலாம்.

அதை உடம்பை விட்டு விரட்டி அடிக்க வேண்டும் என்றால், நீங்கள் குளிக்கும் தண்ணீரில் கொஞ்சமாக பன்னீர், கல் உப்பு, கோமியம், கலந்து அந்த தண்ணீரைக் கொண்டு குளிக்க வேண்டும். தொடர்ந்து மூன்று நாட்கள் இந்த தண்ணீரில் குளித்துவிட்டு தொழில் செய்யும் இடத்திற்கு செல்லுங்கள். உடல் அசதி இருக்காது. உடல் சோர்வு இருக்காது. சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை நீங்கள் பார்க்கத் தொடங்கி விடுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வத்தை இந்த நாளில் சென்று வழிபட்டால் திருமணத்தில் இருக்கும் தடைகள் அனைத்தும் விலகி விரைவில் திருமணம் நடைபெறும்.

தொழிலில் முன்னேற வேண்டும் என்று ஆசை கொண்டவர்கள் மேலே சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த சின்ன சின்ன எளிய பரிகாரங்களை செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.

- Advertisement -