தொழில் தடை நீங்கி லாபம் பெருக வழிபாடு

pillaiyar deepam
- Advertisement -

ஒருவர் தன்னுடைய சொந்த காலில் நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அவர் கண்டிப்பான முறையில் ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பித்து நடத்த வேண்டும் என்று முடிவு எடுப்பார். அப்படி தொழிலை தொடங்கி நடத்துவது என்பது சாதாரண செயல் அல்ல. அதற்கு பண முதலீடு வேண்டும். அதே சமயம் செய்யக்கூடிய தொழிலில் அறிவு வேண்டும். முன் அனுபவம் வேண்டும். மேலும் அந்த தொழிலில் இருக்கக்கூடிய நுணுக்கங்களை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று பல இருக்கிறது.

இவை அனைத்தையும் கடந்து ஒருவர் ஒரு தொழிலை தொடங்கி நடத்த ஆரம்பித்து விட்டால் அந்த தொழிலில் லாபம் கிடைக்க வேண்டும். அந்த லாபம் கிடைப்பதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். கடுமையாக உழைத்தாலும் சிலரால் லாபத்தை பெற முடியாமல் ஏதாவது ஒரு தடை ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் விநாயகப் பெருமானை எந்த நேரத்தில் வழிபட்டால் தடைகள் நீங்கி லாபம் பெருகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

தடைகளை நீக்கக்கூடிய தெய்வமாக கருதப்படுபவர் விநாயகப் பெருமான் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நாம் சென்று வழிபடும் பொழுது தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீக்குவார் என்று கூறப்படுகிறது. மிகவும் சூட்சுமமான இந்த வழிபாட்டை தொடர்ந்து 48 நாட்கள் செய்து வர தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்துமே நீங்கும்.

பல தொழில் அதிபர்கள் ரகசியமாக செய்யக்கூடிய இந்த பரிகாரத்தை நாமும் தெரிந்து கொண்டு செய்ய ஆரம்பிப்போம். கௌரி பஞ்சாங்கம் என்று இருக்கிறது. இந்த கௌரி பஞ்சாங்கத்தை பார்த்து தான் பலரும் தங்களுடைய வேலைகளை செய்ய ஆரம்பிப்பார்கள். அப்படிப்பட்ட கௌரி பஞ்சாங்கத்தில் லாபம் என்று வரும் ஒன்றரை மணி நேரம்தான் நமக்கு கிடைத்த ஒரு அற்புதமான நேரமாக கருதப்படுகிறது.

- Advertisement -

அந்த நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு சென்று அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வைத்து அவரை மனதார வழிபட வேண்டும். அந்த ஒன்றரை மணி நேரமும் அவருடைய ஆலயத்தில் இருந்து வழிபாட்டை செய்து வர வேண்டும். நம்முடைய வேண்டுதலை வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும்.

இதே சமயத்தில் தொழில் நடத்துபவருடைய நட்சத்திரம் வரும் நாள் அன்று அதே விநாயகர் ஆலயத்திற்கு சென்று நல்ல தேங்காயாக ஒரு தேங்காயை வாங்கி வந்து அதை இரண்டாக உடைத்து அதில் இருக்கும் தண்ணீரை கீழே ஊற்றிவிட்டு செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயை அதில் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்யும் பொழுதும் தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்க வேண்டும். வியாபாரம் அதிகரிக்க வேண்டும். லாபம் பெருக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் இருக்கும் தரித்திரம் நீங்கி செல்வ நிலை உயர

இந்த இரண்டு எளிமையான வழிபாட்டு முறையை நாம் செய்யும்பொழுது நம்முடைய தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நீங்கும்.

- Advertisement -