கடன் தீர மார்கழியில் சொல்ல வேண்டிய மந்திரம்

mahalshmi9
- Advertisement -

வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்க ஒரு வழி தெரியாமல் இன்று கஷ்டப்பட்டு வருகின்றோம். உங்களுடைய கடன் பிரச்சனையை தீர்க்க, கடன் பிரச்சனையிலிருந்து எளிமையாக வெளிவர, ஒரு அற்புதம் வாய்ந்த வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. அதுதான் இந்த மார்கழி மாதம். தினமும் மார்கழி மாதம் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த வழிபாட்டை செய்தால் கோடிக்கணனும் ஓடிப் போகும் என்பது நம்பிக்கை.

தொடர்ந்து பதினாறு நாட்கள் உங்கள் கடன் தீர, சிரமம் பார்க்காமல் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து இந்த மந்திரத்தை சொல்லிடுங்க. எவ்வளவு பெரிய கடனாக இருந்தாலும் அது காணாமல் போகும். கடன் தீர்க்கப் போகும் அந்த மந்திரம் என்ன. ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

முதலில் இந்த மந்திரத்தை படிப்பதற்கு நீங்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து கொள்ள வேண்டும். மார்கழி மாதம் காலை 4.30 லிருந்து 5:30 மணிக்குள் இந்த மந்திரத்தை 16 முறை சொல்லி முடித்திருக்க வேண்டும். அதன் பிறகு நீங்க தூங்க சென்றாலும் பரவாயில்லை. சுத்த பத்தமாக இருக்கும் பட்சத்தில், உடல்நிலை சரியில்லாதவர்கள் பல் தேய்த்து முகம் கை கால்களை அலம்பி கொண்டு, இந்த மந்திரத்தை படிக்கலாம்.

குளிக்க முடியும் என்பவர்கள் கட்டாயமாக குளித்து விடுங்கள். அதுதான் சரியான முறையும் கூட. பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இறைவனைப் பார்த்தவாறு அமர்ந்து கொண்டு, குலதெய்வத்தை வேண்டிக் கொள்ளுங்கள். மகாலட்சுமியை வேண்டிக் கொள்ளுங்கள். பின் சொல்லக் கூடிய இந்த மகாலட்சுமி மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

கடன் தீர்க்கும் மகாலட்சுமி மந்திரம்

ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி மஹாலக்ஷ்மி
ஏஹ்யேஹி ஏஹ்யேஹி சர்வ சௌபாக்கியம் மே தேஹி சுவாஹா

பதினாறு முறை எண்ணிக்கை வைத்துக் கொள்ளுங்கள். பதினாறு மஞ்சள், பதினாறு பதினாறு மொச்சை, எதில் வேண்டுமென்றாலும் நீங்கள் எண்ணிக்கையை கணக்கு செய்யலாம். இப்படி மனம் உருகி, உங்கள் கடன் பிரச்சனை தீரனும் என்ற வேண்டுதலை முழு மனதோடு பிரார்த்தனை செய்து, பிரம்ம முகூர்த்த நேரத்தில் மகாலட்சுமிக்கு இந்த மந்திரத்தை சொன்னால் எவ்வளவு பெரிய கடன் சுமையும் சீக்கிரம் தீரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இடைவிடாமல் சொல்லணும்.

- Advertisement -

ஆண்களும் இந்த மந்திரத்தை சொல்லலாம் பெண்களும் இந்த மந்திரத்தை சொல்லலாம். பிறகு உங்கள் கடனை திருப்பி அடைப்பதில் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளில் எந்த சிரமமும் இருக்காது. பணவரவு அதிகரிக்க தொடங்கிவிடும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை படிப்படியாக குறையும்.

இதையும் படிக்கலாமே: பொருளாதார நிலை உயர சொல்ல வேண்டிய பதிகம்

கடனை திருப்பிக் கொடுக்கக்கூடிய பணமும் உங்கள் கைக்கு வந்து சேர்ந்துவிடும். எளிமையான பரிகாரம். எளிமையான மந்திரம். கடனை அடைக்க நல்லதொரு வாய்ப்பு இருக்கு. இந்த மார்கழி மாதத்தை தவற விடாதீங்க. நல்லதே நடக்கும் என்ற கருத்துடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -