திருப்பிக் கொடுக்கவே முடியாத கடனைக் கூட கூடிய சீக்கிரமே திருப்பிக் கொடுக்க நேரமும் காலமும் கைகூடி வரும். இந்தச் செடியை உங்கள் வீட்டு வாசலில் வளர்த்து வந்தால்.

mahalakshmi2
- Advertisement -

கடன் சுமை பாரத்தை சுமக்காதவர்களே இந்த உலகத்தில் இல்லை என்று சொல்லலாம். பெரிய பெரிய பணக்காரர்களுக்கு கோடிக்கணக்கில் கடன் இருந்தால், சாதாரணமாக வாழும் நடுத்தர மக்களுக்கு ஆயிரக்கணக்கில் லட்சக்கணக்கில் கடன்சுமை இருக்கத்தான் செய்கின்றது. இந்த கடன் சுமையை விட்டு வெளியில் வருவதற்கு ஒரு சுலபமான சின்ன பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கடன் சுமையில் இருந்து வெளிவர வேண்டும் என்றால் அந்த மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை நம் மீது விழ வேண்டும்.

மகாலட்சுமியின் அருள் நமக்கு கிடைக்க வேண்டுமென்றால், நம்முடைய வீட்டில் மருதாணி செடியை வளர்த்து வர வேண்டும். மருதாணி செடி லட்சுமிகடாட்சம் கொண்ட செடி என்பது நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். இன்றளவும் கிராமப்புறங்களில் நிறைய பேர் தங்களுடைய வீட்டு வாசலில் மருதாணி செடியை வைத்து வளர்க்க கூடிய வழக்கத்தை வைத்துள்ளார்கள். காரணம் மருதாணி செடி என்பது மிகவும் மகத்துவம் வாய்ந்த செடியாக கருதப்படுகிறது.

- Advertisement -

முதலில் ஒரு சிறிய தொட்டியிலாவது உங்களுடைய வீட்டில் மருதாணி செடியை வைத்து தண்ணீர் ஊற்றி செழிப்பாக வளரச் செய்யுங்கள். உங்கள் வீட்டில் வைத்து வளர்த்த மருதாணி செடியின் இலையில் இந்த பரிகாரத்தை செய்தால் கைமேல் உடனடியாக பலன் கிடைக்கும். உங்கள் வீட்டு மருதாணி செடியில் இருக்கும் ஒரு சில இலைகளை செடியில் இருந்து பறித்து கொள்ளுங்கள்.

அந்த இலைகளை ஒரு சிறிய டப்பாவில் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு காகிதத்தில் உங்களுக்கு எவ்வளவு கடன் இருக்கிறதோ அந்த கடன் தொகையை எழுதி, அந்தக் கடனை சீக்கிரமே திருப்பி கொடுப்பதற்கான நேரம் காலமும் வருமானமும் எனக்கு கிடைக்க வேண்டும் என்று குல தெய்வத்தை நினைத்து அந்த பேப்பரில் எழுதி, அந்த பேப்பரை மடித்து மருதாணி இலைகள் உள்ள டப்பாவில் போட்டு அப்படியே வைத்து விடுங்கள். டப்பாவை மூடிவைக்க வேண்டும் என்று அவசியமில்லை. லேசாக அதன் மேலே ஒரு பேப்பரைப் போட்டு மூடி வைத்து விட்டால் கூட போதும். பூஜை அறையில் ஏதாவது ஒரு அலமாரியில் இந்த டப்பா அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

மருதாணி இலைகள் காய்ந்து வாடிப் போய்விடும். இருந்தாலும் பரவாயில்லை. வாரத்தில் ஒருநாள் உள்ளே இருக்கும் இலைகளை மட்டும் எடுத்து கால் படாத இடத்தில் போட்டுவிட்டு, மீண்டும் புதிய இலைகளை போட்டு அந்த டப்பாவை அப்படியே வைத்து விடுங்கள். இப்படி செய்யும்போது உங்களுடைய கடன் பிரச்சனை படிப்படியாக குறைவதை பார்க்கலாம்.

கடனை திருப்பிக்கொடுக்க தேவையான முயற்சிகளை நீங்கள் முழு மூச்சோடு முயற்சி செய்து வர வேண்டும். ஏதாவது ரூபத்தில் உங்களுக்கு இருக்கக்கூடிய கடன் தொகையைப் பொறுத்து கூடிய சீக்கிரத்தில் கடன் பிரச்சனை குறையும். இதேபோல மருதாணி செடி உங்கள் வீட்டில் எவ்வளவுக்கு எவ்வளவு தழைத்து வளர்கிறதோ அந்த அளவிற்கு நிம்மதியும் வருமானமும் பெருகும். வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை வீட்டிலிருக்கும் பெண்கள் கையில் மருதாணி இலையை அரைத்து வைத்துக்கொள்வது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை நிறைவாக கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்து பாருங்கள்.

- Advertisement -