கடன் தீர மிளகு தீப வழிபாடு

bhairavar deepam
- Advertisement -

பணம் ரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் பல இருக்கின்றன. அவற்றுள் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது தான் கடன் பிரச்சனை. கடனை கொடுத்தவராக இருந்தாலும் சரி வாங்கியவர் ஆக இருந்தாலும் சரி அந்த கடனால் பிரச்சனைகள் என்பது அவர்களுக்கு ஏற்பட்டு கொண்டுதான் இருக்கும். வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள் தங்களால் வெளியில் நிம்மதியாக நடந்து செல்ல கூட முடியாத சூழ்நிலைக்கு ஆளாகி இருப்பார்கள். கடனால் அவமானப்பட வேண்டிய சூழ்நிலையும் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்கள் காலபைரவரை எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட அவர்கள் கடன் பிரச்சினை தீரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவருடைய வாழ்க்கையை சீர்குலைக்க கூடிய விஷயங்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் கடன் பிரச்சனை. கடனால் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பலரும் தங்களுடைய வாழ்க்கையை இழந்து இருக்கிறார்கள். மனைவி, பிள்ளைகள், குடும்பம், வீடு, சொத்து, மரியாதை என்று அனைத்தையும் இழந்தும் கடன் பிரச்சனையில் இருந்து வெளியில் வர முடியாமல் கஷ்டப்படுபவர்கள் பலரும் இன்றைய காலத்தில் அதிக அளவில் இருக்கிறார்கள், பெரிய கோடீஸ்வரராக இருந்தவர் கூட கடன் பிரச்சினைக்காக பயந்து நாட்டை விட்டே ஓடிய நிலையும் ஏற்பட்டு தான் இருக்கிறது. அவ்வளவு கொடுமையான கடன் பிரச்சினையில் இருந்து வெளிவர செய்யக்கூடிய ஒரு எளிய வழிபாட்டு முறை.

- Advertisement -

இந்த வழிபாட்டை சனிக்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். அதுவும் குறிப்பாக தேய்பிறை சனிக்கிழமை அன்று ஆரம்பிக்க வேண்டும். இந்த வழிபாட்டை ஆரம்பிப்பதற்கு முதல் நாள் அதாவது வெள்ளிக்கிழமை அன்றே ஒரு வெள்ளை நிற துணியை சதுரமாக வெட்டி சுத்தமான பன்னீரில் நனைத்து காய வைத்துக் கொள்ளுங்கள். அதே போல் கடைக்கு சென்று வால்மிளகை வாங்கி வந்து அதில் சரியாக 48 வால்மிளகுகளை மட்டும் எண்ணி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த வால் மிளகை நாம் காய வைத்திருக்கும் வெள்ளை துணியில் வைத்து மூட்டையாக கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். சனிக்கிழமை அன்று காலையில் அருகில் இருக்கக் கூடிய சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கக்கூடிய காலபைரவரின் சன்னதிக்கு முன்பாக இரண்டு அகல் விளக்குகளை வைத்து அந்த இரண்டாக விளக்குகளில் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். அந்த அகல் விளக்குகளில் நல்லெண்ணையை ஊற்றி நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் மிளகு மூட்டியையும் அதில் வைத்து விட வேண்டும். பிறகு காலபைரவரை மனதார வேண்டி இந்த தீபத்தை ஏற்ற வேண்டும்.

- Advertisement -

கால பைரவருக்கு செவ்வரளி பூக்களால் ஆன மாலையை வழங்க வேண்டும். பிறகு காலபைரவரை 11 முறை சுற்றிவர வேண்டும். தொடர்ந்து 11 வாரங்கள் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இந்த வழிபாட்டை செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் தேய்பிறை அஷ்டமி நாளிலாவது இந்த வழிபாட்டை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: பிரச்சனைகளை தீர்க்கும் ஆஞ்சநேயர் வழிபாடு

இப்படி நாம் சனிக்கிழமை தோறும் காலபைரவரை வழிபாடு செய்து கொண்டே வந்தால் கண்டிப்பான முறையில் கடன் ரீதியான பிரச்சினையில் இருந்து நம்மை காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் இழந்த மதிப்பு மரியாதையும் மீட்டெடுத்து தருவார்.

- Advertisement -