பிரச்சனைகளை தீர்க்கும் ஆஞ்சநேயர் வழிபாடு

hanuman2
- Advertisement -

எல்லா ராசிக்காரர்களும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்யலாம். தவறு கிடையாது. ஆஞ்சநேயர் எல்லோருக்கும் பொதுவான கடவுள். இந்து சாஸ்திரத்தில் ஆஞ்சநேயரை கும்பிடுபவர்கள் ரொம்பவும் பலசாலியாக இருப்பார்கள் மன உறுதியோடு இருப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. நீங்களும் இன்று முதல் ஆஞ்சநேயரை வழிபாடு செய்து பாருங்கள். தேவையற்ற மன பயம் நீங்கும்.

உங்களுடைய மனதில் ஒரு உறுதி பிறக்கும். வெற்றி உங்கள் பக்கத்திலேயே இருக்கும். சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும். இதை தவிர ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை போடுவது, வெண்ணெய் காப்பு போடுவது, செந்தூரம் பூசுவது, போன்ற வேண்டுதல்கள் எல்லாம் நம்மிடத்தில் இருக்கிறது. இதில் எந்த ராசிக்காரர்களுக்கு எந்த வழிபாடு உடனடியாக பலனை பெற்றுத் தரும் என்பதையும் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவில் தொடர்ந்து தெரிந்துகொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

ஆஞ்சநேயர் வழிபாடு

மிதுன ராசிக்காரர்கள், கன்னி ராசிக்காரர்கள் இரண்டு பேருமே புதனின் ஆதிக்கம் கொண்டவர்கள். இவர்கள் அனுமனுக்கு செந்தூரக் காப்பு போட்டால் மனதில் நினைத்தது உடனே நிறைவேறும். உங்களுக்கான வெற்றி கூடிய சீக்கிரம் உங்களைத் தேடி வரும். அடுத்ததாக வெற்றிலை மாலை. சிம்ம ராசிக்காரர்கள், கன்னி ராசிக்காரர்கள் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையை கட்டி போட்டு வேண்டுதல் வைத்தால் உங்கள் மனதில் நினைத்த வேண்டுதல் உடனே பலிக்கும்.

இந்த வெற்றிலை மாலையும் செந்தூர காப்போம் ஆஞ்சநேயருக்கு யார் வேண்டுமென்றாலும் போடலாம். தவறு கிடையாது. 12 ராசிக்காரர்களுக்கும் இந்த வழிபாடு பொதுவானதாக இருந்தாலும், மேலே குறிப்பிட்டுள்ள இந்த ராசிக்காரர்களுக்கு இந்த பரிகாரம் உடனடியாக பலனை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

வடை மாலை சாத்துவது. அனுமனுக்கு யார் வேண்டுமென்றாலும் வடை மாலை சாத்தலாம். அதிலும் குறிப்பாக கருப்பு உளுந்தில் வடை செய்து ஆஞ்சநேயருக்கு சாத்தி வேண்டுதல் வைத்தால் ராகு கேது தோஷத்தால் பிரச்சனையே வராது. ராகு கேது உங்களை அதிகமாக தொல்லை பண்ண மாட்டாங்க. 12 ராசிக்காரர்களுக்கும் இது பொருந்தும்.

வடமாநிலத்தில் உளுந்தில் செய்யப்பட்ட ஜிலேபியை மாலையாக சாத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஞ்சநேயருக்கு உளுந்தில் பிரசாதம் வைக்கணும். அதில் என்ன செய்து சாத்தினாலும் சரிதான்.

- Advertisement -

அடுத்ததாக வெண்ணெய் காப்பு. உங்களுக்கு கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் அதிகமாக இருக்கிறார்கள். உங்களை பற்றி மற்றவர்களிடம் தப்பான வதந்திகளை பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள். உங்களை வாழ்க்கையில் முன்னேற விடாமல் செய்கிறார்கள். இந்த எதிரி தொல்லையில் இருந்து தப்பிக்கணும்.

கண்ணுக்குத் தெரியாத எதிரிகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளனும் என்பவர்கள் ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வெண்ணெய் காப்பு சாத்தனும். ஒரு பாக்கெட் வெண்ணெய் வாங்கி கொண்டு போய் அவருக்கு நெய்வேத்தியம் செய்து வழிபாடு செய்தாலும் உங்களுக்கு இருக்கும் எதிரிகள் விலகுவார்கள். இந்த வெண்ணெய் காப்பும் 12 ராசிக்காரர்களுக்கும் பொருந்தும்.

இதையும் படிக்கலாமே: அணையா தீப வழிபாடு

இலங்கையில் ஹனுமனின் வாலில் நெருப்பை மூட்டி அவரை கோபப்படுத்திட்டாங்க. அவர் இலங்கைக்கு தீயை வைத்து விட்டார். அந்த சமயத்தில் அவரை குளிர்ச்சி செய்ய சாந்தப்படுத்த, பயன்படுத்திய பொருள்தான் இந்த வெண்ணெய். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகார முறைகளை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -