கடன் பிரச்சனை தீர மிளகு பரிகாரம்

sevvai milagu cash
- Advertisement -

மனிதன் ஒரு புறம் பணம் பணம் என்று பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறான். மறுபுறம் கடன் கடன் என்று சம்பாதித்த பணத்தை கடனுக்கு செலுத்திக் கொண்டு இருக்கிறோம். அப்படியானால் எப்போது தான் நாம் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வது இந்த கேள்வி அனைவருக்கும் இருக்கிறது. கடனே வாங்காமல் வாழ்ந்தால் தான் இது நடக்கும் ஆனால் இன்றைய சூழ்நிலையில் அது சாத்தியம் இல்லை.

கடனை யாரும் விருப்பப்பட்டு வாங்குவது கிடையாது அவசர தேவைக்கு வேறு வழியில்லாமல் வாங்கி சிக்கிக் கொண்டு தவிக்கிறோம். ஒரு சிலர் ஆடம்பர தேவைக்காக அனாவசியமாக செலவு செய்வார்கள் அவர்களைப் பற்றி இங்கு நாம் சொல்லத் தேவையில்லை அவசர தேவைக்காக வாங்கி துன்பப்படுபவர்களுக்கு இந்த ஒரு எளிய பரிகாரம் நல்ல பலனை தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது அந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடன் தீர மிளகு பரிகாரம்

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் மட்டும் தான் செய்ய வேண்டும். இதை மற்ற நேரத்திலோ மற்ற தினங்களில் செய்யக் கூடாது. கடன் அடையவும் கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரவும் செவ்வாய்க்கிழமையும் செவ்வாய் ஹோரையும் மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. இந்த பரிகாரத்திற்கு சிறிய கண்ணாடி பவுல் அல்லது மண் குடுவை எடுத்து கொள்ளுங்கள். இவை இரண்டும் இல்லாத பட்சத்தில் கொஞ்சம் பெரிய அகல் இருந்தால் அதையும் பயன்படுத்தி கொள்ளலாம்.

இத்துடன் கொஞ்சமாக கல்லுப்பு 27 கரு மிளகு இரண்டையும் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு கல் உப்பு, கரு மிளகு இரண்டையும்புதிதாக வாங்கி பயன்படுத்துவது நல்லது. இந்த பரிகாரத்தை செவ்வாய் ஹோரையில் செய்ய வேண்டும் என்பதால் செவ்வாய் கிழமை காலை 6 லிருந்து 7, மதியம் 1றிலிருந்து 2, இரவு 8 லிருந்து 9 இந்த மூன்று நேரத்தில் உங்களுக்கு எந்த நேரம் வசதியாக இருக்கிறதோ அந்த நேரத்தில் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

அந்த நேரத்தில் நீங்கள் வாங்கி வைத்திருக்கும் பவுலில் கல் உப்பை உங்கள் கைகளால் எடுத்து முழுவதுமாக நிரப்பி விடுங்கள். அடுத்து 27 கருமிளகையும் ஒவ்வொன்றாக அந்த கல்லுப்பின் மீது வைக்க வேண்டும். இதை மொத்தமாக வைக்கக் கூடாது. ஒவ்வொன்றாக தான் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் நேரத்தில் நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீர்கள் எவ்வளவு வாங்கினீர்கள் என்பதை சொல்லி அந்த கடன் விரைவில் அடைய வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு வைக்க வேண்டும்.

அதன் பிறகு மீண்டும் இந்த கல்லுப்பையும் மிளகையும் உங்கள் கைகளில் எடுத்துக் கொண்டு உங்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு அறைக்கும் செல்லுங்கள். ஒவ்வொரு அறையிலும் சிறிது நேரம் நின்று உங்களுடைய கடன் தீர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு மறுபடியும் வந்து இந்த பவுலில் கல் உப்பையும் மிளகையும் கொட்டி அதை பூஜை அறையில் அப்படியே வைத்து விடுங்கள்.

- Advertisement -

இது 15 நாட்கள் வரை உங்களுடைய பூஜை அறையில் இருக்க வேண்டும் அதன்பிறகு இந்த கல்லுப்பையும் மிளகையும் கால்படாத இடத்தில் போட்டு விடுங்கள். இந்த 15 நாட்களுக்குள்ளாகவே நீங்கள் வாங்கிய கடனிலிருந்து ஒரு பகுதியாவது திருப்பி செலுத்துவதற்கான வாய்ப்பு நிச்சயம் வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரிகாரத்தை ஆண்கள் பெண்கள் அனைவரும் செய்யலாம. பெண்கள் மாதவிலக்கு சமயத்திலும் செய்யலாம் தவறில்லை. 15 நாள் கழித்து மறுபடியும் இதே போல் செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஹோரையில் இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: பண வரவிற்கு மிளகு பரிகாரம்

கல்லுப்பிற்கும் கருமிளகிற்கும் எதிர்மறை ஆற்றலை நீக்கக் கூடிய சக்தி உண்டு. இதனால் உங்களை சுற்றி இருக்கும் எதிர்மறை ஆற்றல் நீங்கி பணவரவை ஏற்படுத்தி உங்களுடைய கடனை விரைவில் அடையச் செய்யும். ஆகையால் இதை தொடர்ந்து செய்ய செய்ய உங்களுடைய கடன் விரைவில் நடந்து விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து நல்ல பலனை அடையுங்கள்.

- Advertisement -