பண வரவிற்கு மிளகு பரிகாரம்

indian cash milagu
- Advertisement -

இன்று பணத்தின் பின்னால் ஓடாத மனிதர் ஒருவர் கூட இருக்க முடியாது.பணமே இல்லாதவரும் பணம் பணம் என்று ஓடுகிறார்கள். பெட்டி பெட்டியாய் பணத்தை அடுக்கி வைத்தவர்களும் இன்னும் மேலும் மேலும் பணத்தை சேர்க்க ஓடிக்கொண்டிருக்கிறார்கள். ஆக மொத்தத்தில் பணத்தை நாடி ஓடாதவர்கள் ஒருவர் கூட இல்லை என்றே சொல்லலாம். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பணத்தை நியாமான முறையில் சம்பாதிக்க வேண்டும.

அப்படி சம்பாதிக்கும் பணம் நம்மிடம் தங்குகிறதா? நமக்கு வர வேண்டிய பணம் நமக்கு வருகிறதா என்பதை எல்லாம் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சம்பாதிக்கும் பணம் கையில் நிலைகிறதா என்றால் உடனே அனைவரின் பதிலும் இல்லை என்று தான் இருக்கும். அப்படியானால் பணம் கையில் தங்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பண வரவிற்கு மிளகு பரிகாரம்

பணத்தை சம்பாதித்தால் மட்டும் போதாது. சம்பாதிக்கும் பணம் நம் கையில் தங்க வேண்டும். பணம் நம் கையில் தங்க வேண்டும் எனில் பணம் தங்குவதற்கான ஈர்ப்பு நம்மிடம் இருக்க வேண்டும். அப்போது தான் பணமே நம்மை தேடி வரும். பணம் நம்மை தேடி வர வேண்டும் என்றால் நீங்கள் ஓரிடத்தில் அமைதியாக உட்கார்ந்து கொண்டு இருந்தால் உங்களைத் தேடி வராது. பணத்தை சம்பாதிப்பதற்கான முயற்சியை நீங்கள் எடுக்க வேண்டும். இந்த பரிகாரங்கள் அதற்கான வழியையும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

இந்த பரிகாரத்தை செய்ய காலையில் எழுந்து குளித்து, பல் துலக்குவது போன்ற எந்த காரியத்தையும் செய்ய வேண்டிய அவசியம் கூட கிடையாது. காலையில் தூங்கி எழுந்ததும் நான்கு மிளகாய் கையில் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வெளியில் வந்து விடுங்கள். உங்கள் வீட்டின் வெளியில் நிலை வாசலுக்கு வெளியே கிழக்கு பார்த்தவாறு நில்லுங்கள். உங்களின் நான்கு திசையிலும் திசைக்கு ஒரு மிளகை தூக்கி போட்டு விடுங்கள். அதன் பிறகு உள்ளே வந்து எப்பொழுதும் போல் உங்கள் வேலையை தொடங்குங்கள். அவ்வளவு தான் பரிகாரம்.

- Advertisement -

இதே போல் எட்டு மிளகை வைத்தும் செய்யலாம். நான்கு மிளகை திசைக்கு ஒவ்வொன்றாக போட்ட பிறகு மீதமிருக்கும் நான்கு திசைக்கு ஒவ்வொரு மிளகாய் போட வேண்டும். இதில் 8 மிளகை நாம் தூக்கி போட போகிறோம் அவ்வளவு தான். இந்த மிளகை தூக்கி போடும் போது நமக்கு அருகிலே விழுந்தாலோ அல்லது வீட்டிற்குள் நம் மேலோ விழுந்தாலும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் தூக்கிப் போடுவது மட்டும் தான் கணக்கு. அது எங்கு விழுகிறது என்பதெல்லாம் கணக்கில் கொள்ள வேண்டாம்.

மிளகை தூக்கிப் போட்டால் பணம் வருமா? என்றால் மிளகாய் தூக்கி போட்டால் நிச்சயம் பணம் வராது தான். ஆனால் இந்த மிளகிற்கு கெட்டதை அழித்து நல்லதை கொண்டு வந்து சேர்க்கும் தன்மை இருக்கிறது. ஆகையால் வீட்டில் இருக்கும் எதிர்மறையை நீக்கி பணம் வரதற்கான ஆற்றலை அதிகரித்து பணம் நமக்கு வருவதற்கான வாய்ப்புகளை இந்த பரிகாரம் ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க கார்த்திகை சஷ்டி தீப வழிபாடு

இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -