கடன் தீர முருகர் கோயில் பரிகாரம்

kadan thera
- Advertisement -

கடன் தீர எண்ணற்ற வழிபாடுகள் பரிகாரங்கள் இருந்தாலும் கடன் என்னும் பிரச்சனையிலிருந்து முழுவதுமாக வெளிவர வேண்டும் எனில் அது முருகப்பெருமானை சரணடைவது தான். ஆகையால் தான் கடன் தொடர்பான எந்த ஒரு காரியமும் செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இந்த செவ்வாய் ஆனது முருகருக்குரியது. அந்த நாளில் கடனுக்காக செய்யப்படும் எதுவும் சிறப்பு வாய்ந்தது.

ஆனால் இந்த பதிவில் நாம் செவ்வாய்க்கிழமையில் எந்த பரிகாரத்தையும் செய்யப் போவதில்லை. மாறாக முருகருக்கு உகந்த நட்சத்திர நாளில் முருகரை நினைத்து செய்யப் போகிறோம். அது என்ன தந்திரீகம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கடன் தீர முருகர் வழிபாடு

இந்த வழிபாட்டை முருகர் பிறந்த விசாக நட்சத்திரத்தன்று தான் செய்ய வேண்டும். அது மட்டும் இன்றி இந்த பரிகாரத்தை நாம் வீட்டில் செய்யக் கூடாது. முருகன் உடைய ஆலயத்தில் தான் செய்ய வேண்டும். இந்த ஆலயம் எது என்பது மட்டும் தான் இங்கு கொஞ்சம் கடினம். அது முருகருடைய அறுபடை வீடுகளில் ஏதேனும் ஒன்றில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

திருத்தணி, பழனி, திருச்செந்தூர் , திருப்பரங்குன்றம், சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு இடங்களில் மட்டும் தான் செய்ய வேண்டும். காலம் முழுவதும் கடனால் நொந்து கொண்டு இருப்பதற்கு பதிலாக ஒரே ஒரு முறை சிரமப்பட்டு இந்த ஒரு தாந்திரீக பரிகாரத்தை செய்வதால் நம் வாழ்வில் கடன் இல்லாமல் நிம்மதியாக வாழலாம் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இப்போது இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். நீங்கள் விசாக நட்சத்திரம் அன்று இந்த ஆலயங்கள் ஏதேனும் ஒன்றிற்கு செல்ல முடிவு செய்து விட்டால் அதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு வீட்டில் இதை செய்து விடுங்கள். அதாவது விசாக நட்சத்திரத்துக்கு மூன்று நாட்களுக்கு முந்தைய நாள் விடியற்காலையில் பிரம்ம முகூர்த்த வேளையில் எழுந்து கொள்ளுங்கள். ஒரு வெள்ளை துணியை மஞ்சளில் நனைத்து ஆற வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

அதில் ஒரு நூறு ரூபாயையும் சிறிதளவு கல் உப்பையும் வைத்து முடிச்சாக கட்டி பூஜை அறையில் வைத்து விடுங்கள். இந்த முடிச்சு அங்கேயே இருக்கட்டும். இந்த முடிச்சு கட்டிய மூன்றாவது நாளில் வரும் விசாக நட்சத்திரம் அன்று இந்த முடிச்சை கொண்டு சென்று நீங்கள் செல்லும் முருகரின் அறுபடை ஆலயத்தின் உண்டியலில் காணிக்கையாக போட்டு விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு முருகரை தரிசனம் செய்து விட்டு கோவிலில் அரை மணி நேரம் அமர்ந்து உங்களுடைய பிரார்த்தனையை மனதார வைத்து விட்டு வந்து விடுங்கள். இந்த தாந்த்ரீக பரிகாரத்தை செய்து முடித்த உடனே உங்கள் கடன் அடைப்பதற்கான வாய்ப்புகளை முருகன் நிச்சயம் தருவார். நீங்கள் அந்த வாய்ப்பினை தவற விடாமல் சரியாக பயன்படுத்தி பண வரவை பெருக்கி கடன் அடைவதற்கான முயற்சிகளை மேற் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற விருட்ச வழிபாடு

கடனடைய செய்யப்படும் இந்த தாந்த்ரீக பரிகாரம் மிகவும் சக்தி உள்ளதாகவும் பயனுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் முருகனை மனதார பிரார்த்தனை செய்து கொண்டு நம்பிக்கையுடன் இதை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -