ராஜயோக வாழ்க்கை அமைய அமாவாசை பரிகாரம்

vinayagar pariharam
- Advertisement -

அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்கள் மாதத்திற்கு ஒருமுறை வரக்கூடிய நாட்கள். இந்த இரண்டு தினங்களும் வழிபாட்டுக்குரிய தினங்களாகவே கருதப்படுகின்றன. அதிலும் குறிப்பாக அமாவாசை தினத்தன்று முன்னோர்களை வழிபடுவதன் மூலம் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட மிகவும் முக்கியமான தினமான அமாவாசை தினத்தன்று எந்த பரிகாரத்தை செய்தால் ராஜயோக வாழ்க்கை கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக எந்த ஒரு பரிகாரத்தை நாம் செய்வதாக இருந்தாலும் அந்த பரிகாரத்தை அமாவாசை, பௌர்ணமி போன்ற தினங்களில் செய்வதன் மூலம் அதற்குரிய பலன் நமக்கு மிகவும் அதிகமாகவே கிடைக்கும். அதே போல் வேண்டுதல், வழிபாடு என்று பார்த்தாலும் இந்த இரண்டு தினங்களில் செய்யும் பொழுது அதன் பலன் நமக்கு விரைவிலேயே கிடைக்கும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த பரிகாரத்தை அமாவாசை நாள் அன்று தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

அமாவாசை நாளன்று முன்னோர் வழிபாட்டை செய்து முடித்த பிறகு தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு முன்பு குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டு விட்டு பிறகு செய்வது நல்ல பலனை தரும். இந்த பரிகாரத்திற்கு ஒரு தாம்பாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு 9 அரச இலைகளை பறித்துக் கொள்ளுங்கள். இந்த அரச இலைகளை பறிக்கும் பொழுது முழுக்க முழுக்க தூய்மையாக இருக்க வேண்டும். விநாயகப் பெருமானின் மந்திரத்தையோ அல்லது பெயரையோ மனதிற்குள் மனதார உச்சரித்துக் கொண்டு பறிக்க வேண்டும்.

பறித்து வந்த இலைகளை மஞ்சள் கலந்த தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்து துடைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தாம்பாளத்தை சுற்றி 9 அரச இலைகளையும் வைக்க வேண்டும். இலையின் காம்பு உட்புறம் இருக்க வேண்டும். நுனி வெளிப்புறம் இருக்க வேண்டும். பிறகு தாம்பாளத்தின் நடுவில் பச்சரிசி ஒரு கைப்பிடி அளவு போட வேண்டும். அதற்கு மேல் ராஜ கனி என்று கூறக்கூடிய எலுமிச்சம் பழத்தை வைக்க வேண்டும்.

- Advertisement -

நாட்டு மருந்து கடைகளில் அரகஜா என்று கிடைக்கும். இது மிகவும் தெய்வம்சம் பொருந்திய ஒரு பொருளாக கருதப்படுகிறது. இதை நம்முடைய வலது கை மோதிர விரலில் எடுத்து ஒவ்வொரு அரச இலைக்கு நடுவிலும் தடவ வேண்டும். இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது முழுக்க முழுக்க விநாயகப் பெருமானின் மந்திரத்தை உச்சரித்த வாரே செய்ய வேண்டும்.

அடுத்ததாக அகலில் நெய் தீபம் ஏற்றி வைத்து சாம்பிராணி தூபம் போட்டு கற்பூர தீபாரதனை காட்ட வேண்டும். இந்த பூஜையை நிறைவு செய்த பிறகு இந்த தாம்பாளத்தை அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள்.
மறுநாள் காலையில் எழுந்து எப்போதும் போல் பூஜை செய்து முடித்துவிட்டு இந்த பொருட்கள் அனைத்தையும் எடுத்து அருகில் இருக்கும் ஓடுகின்ற நீரில் போட்டு விட வேண்டும்.

- Advertisement -

அவ்வாறு போடும் பொழுது அந்த எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி போட வேண்டும். ஓடுகின்ற நீர் இல்லாதவர்கள் கால்படாத இடமாக பார்த்து போட்டுவிட்டு வரவேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: அஷ்டலட்சுமிகளை வசமாக்கும் பொடி

இந்த நேர்மறை ஆற்றல்களின் உதவியாளும் விநாயகப் பெருமானின் அருளாலும் ராஜயோக வாழ்க்கை படிப்படியாக உங்களைத் தேடி வரும். நம்பிக்கையுடன் செய்து பயன் பெறுங்கள்.

- Advertisement -