கழுத்தை நெறிக்கும் தீராத கடன் தீர வெள்ளிக்கிழமையில் நாணயங்களை இப்படி செய்யலாமே!

lakshmi-coins
- Advertisement -

ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசம் பார்க்காமல் எல்லோருக்குமே இருக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது கடன் பிரச்சனை தான். மாதம் 10,000 சம்பளம் வாங்குபவன் முதல் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குபவன் வரை நிச்சயம் அனைவருக்குமே அவரவர் தகுதிக்கு ஏற்ப கடன்களும் இருக்கிறது. எப்பொழுதும் தகுதிக்கு மீறி கடன் வாங்கினால் அதன் விளைவுகளையும் சந்தித்து தான் ஆக வேண்டும். இப்படி கழுத்தை நெறிக்கும் அளவிற்கு தீராத கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமிக்கு நாணயங்களை இப்படி செய்தால் போதும்! நிச்சயம் பணப் பிரச்சினை தீர்ந்து, கடன் தொல்லையிலிருந்து விரைவில் விடுபடலாம். அப்படி நாம் நாணயங்களை வைத்து என்ன செய்ய வேண்டும்? என்பதை அறிய தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

mahalakshmi

பொதுவாக வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி பூஜை செய்து வந்தால் குடும்பத்தில் செல்வச் செழிப்பிற்கு குறைவிருக்காது என்பார்கள். வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி வழிபாடு என்பது அதீத சக்தி வாய்ந்த வழிபாடாகும். காமாட்சி அம்மன் விளக்கு அல்லது குத்து விளக்கு இரண்டினை ஏற்றி மகாலட்சுமிக்கு பிடித்த தாமரை மலர் அல்லது மணம் மிக்க மலர்களால் அலங்காரம் செய்து குங்குமப் பொட்டிட்டு நைவேத்தியம் படைக்க நெய் அதிகம் சேர்த்த சர்க்கரை பொங்கல் வைக்கலாம்.

- Advertisement -

இப்படி அனைத்தையும் தயார் செய்துவிட்டு ஒரு சிறிய பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தை எடுத்து அதற்கு சுத்தமாக மஞ்சள், குங்குமம் வைத்து தயார் செய்து கொள்ள வேண்டும். பின்னர் மகாலட்சுமி 108 போற்றி அல்லது மகாலட்சுமிக்கு உரிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். நீங்கள் மந்திரங்களை உச்சரிக்கும் பொழுது உங்களுடைய கைகளில் நாணயங்கள் இருக்க வேண்டும். உங்கள் கைகள் கொள்ளும் அளவிற்கு நாணயங்களை வைத்து கொண்டால் போதும்.

counting-coins

பின்னர் அந்த பாத்திரத்தில் நாணயங்களை போட்டுவிட்டு உங்கள் கைகளால் கொஞ்சமாக குங்குமத்தை எடுத்து அதில் போட வேண்டும். இதே போல நீங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து 12 வெள்ளிக் கிழமைகள் செய்து வர வேண்டும். இந்த 12 வாரங்களுக்குள் ஏதாவது ஒரு பிரசித்தி பெற்ற கோவிலுக்கு சென்று அங்குள்ள குளத்தில் இருக்கும் மீன்களுக்கு பொரி வாங்கி தானம் செய்ய வேண்டும்.

- Advertisement -

மீனுக்கு பொரி வாங்கிக் கொடுத்தால் எத்தகைய கடன்களும் அடையும் என்பது சூட்சும ஆன்மீக குறிப்பாகும். மேலும் மகாலட்சுமிக்கு உரிய மந்திரங்களை உச்சரித்து நாணயங்களை நீங்கள் சேகரித்து வந்தால் செல்வ செழிப்பும் பன்மடங்கு உயரும் என்பது ஐதீகம். 12 வாரங்கள் இதே போல் செய்துவிட்டு பின்னர் அதில் இருக்கும் நாணயங்களை ஒரு மஞ்சள் நிற துணியில் மூட்டையாகக் கட்டி அம்மன் கோவிலுக்கு சென்று அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்தி விட வேண்டும்.

fish-pori

இவ்வாறு செய்ய நிச்சயம் எவ்வளவு சிரமமான சூழ்நிலையில் நீங்கள் இருந்தாலும் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து வருமான தடை அகன்று, பணப்புழக்கம் அதிகரிக்கும். மேலும் செல்வச் செழிப்பிற்கு பஞ்சமில்லாமல் உங்களுக்கு மகாலட்சுமி ஆனவள் சகல, சௌபாக்கியங்களையும் வாரி வழங்குவாள். பூஜை அறையில் எப்பொழுதும் செம்பு பாத்திரத்தில் நாணயங்களைப் போட்டு வைப்பது மிகவும் நல்ல விஷயம் ஆகும் எனவே பரிஹாரம் முடிந்தாலும் நீங்கள் இந்த பழக்கத்தை தொடர்ந்து செய்து வாருங்கள், நல்ல நிலைக்கு நிச்சயம் செல்லலாம்.

- Advertisement -