கடன் தீர நரசிம்மர் வழிபாடு

narachimar Cash
- Advertisement -

இன்றைய பல குடும்பங்கள் துன்பத்தில் வாடுவது இந்த கடனால் தான். கடனை வாங்க கூடாது என்று நினைப்பவர்கள் கூட ஒரு கட்டத்தில் ஏதோ ஒரு சூழ்நிலைக்காக கடன் வாங்கி சிக்கிக் கொள்வார்கள். ஒரு மனிதன் கடனால் துன்பப்படுவதே அவனுடைய கர்ம வினை தான் என்று சொல்லப்படுகிறது.

இது எல்லா வகையான கடனுக்கும் பொருந்தாது. அவசர தேவைக்கு சூழ்நிலை காரணமாகவோ கடன் வாங்கி அவதியில் சிக்கி தவிப்பர்களை இப்படி கர்மாவின் தாக்கத்தால் செய்வதாக எண்ணிக் கொள்ளலாம். பேராசையின் காரணமாக ஆடம்பர செலவு செய்து கடன் வாங்கிக் கொள்பவர்களை இந்த ஒரு விஷயத்தில் நாம் கருத்தில் கொள்ள முடியாது.

- Advertisement -

இந்த கர்மாவினாலும், சூழ்நிலையாலும் கடனால் அவதிப்படுபவர்கள் நரசிம்மரை இப்படி வழிபாடு செய்தால் கடன் அடையும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

கடன் தீர நரசிம்மர் வழிபாடு

கடன் தீர பல தெய்வங்களை நாம் வணங்கினாலும் குறிப்பாக பைரவர் முருகர் போன்றவரை வணங்குவோம். ஆனால் இந்த கடனை தீர்ப்பதில் நரசிம்மரும் முக்கியமான பங்கு வகிக்கிறார். கடனே கர்மாவால் ஏற்படக்கூடியது என்று சொல்லப்படுகிறது. அத்தகைய கர்மாவை நீக்கி பலன் அளிப்பதில் நரசிம்மர் முக்கியமான கடவுள்.

- Advertisement -

கடன் தீர நீங்கள் நரசிம்மரை வணங்குவதாக இருந்தால் உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் அன்று வணங்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நட்சத்திரம் இருக்கும். மாதத்தில் ஒரு நாள் அந்த நட்சத்திரம் வரும். அன்றைய தினத்தில் நரசிம்மரை வணங்க வேண்டும். அது எப்படி என்று பார்க்கலாம்.

உங்களுடைய ஜென்ம நட்சத்திரம் வரும் நாளன்று நரசிம்மரை ஆலயத்தில் சென்று தரிசனம் செய்து 9 நெய் தீபம் ஏற்ற வேண்டும். அதன் பிறகு நரசிம்மரை 9 முறை வலம் வந்த பிறகு நரசிம்மரின் ஸ்ரீ நரசிம்ம ருண விமோசன மந்திரத்தை ஒன்பது முறை அவர் முன் அமர்ந்து பாராயணம் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த தீபம் ஏற்றி வழிபடும் நாளில் அசைவத்தை தவிர்த்து விட வேண்டும். விரதம் இருந்து இந்த வழிபாடு மேற்கொள்ளும் போது கடன் விரைவில் அடைவதற்கான வாய்ப்பு பெருகும். கடன் தொல்லையால் தினமும் அவதிப்படுபவர்கள் நரசிம்மரை இந்த முறையில் வழிபாடு செய்து வாருங்கள்.

இதையும் படிக்கலாமே: காரிய தடை உடைக்கும் பச்சை பயிறு பரிகாரம்

கடலளவு கடனும் காணாமல் போவதுடன் செல்வ வளத்துடன் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழலாம். இந்த வழிப்பாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையோடு செய்து கடன் இல்லாத வாழ்க்கையை வாழுங்கள்.

- Advertisement -