காரிய தடை உடைக்கும் பச்சை பயிறு பரிகாரம்

hand Payiru
- Advertisement -

ஒரு காரியத்தை தொடங்கி அது நல்லபடியாக முடிய அதிக சிரத்தை எடுக்க வேண்டும். அப்படி எல்லோராலும் நினைத்த காரியத்தை உடனே செய்து விட முடியாது. அதற்கான நேரம் காலம் அமைய வேண்டும். முயற்சி செய்ய வேண்டும் இதையெல்லாம் வாஸ்தவம் தான். ஆனால் ஒரு சிலரால் எத்தனை முயற்சி செய்தும் எதையும் வெற்றியாக செய்து முடிக்க முடியாது. அவர்கள் எதை செய்தாலும் தோல்வியில் தான் முடியும்.

அவர்களுக்கென்று ஏதாவது செய்ய நினைத்தாலும் அது சரியாக அமையாது. இப்படியானவர்களை ராசி இல்லாதவர்கள் என்று ஒதுக்கி வைத்து விடுவார்கள். இது அவர்களை மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி விடும். அப்படியான சூழ்நிலையில் உள்ளவர்கள் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்தால் போதும். அவர்களுடைய காரியத்தடைகள் அனைத்தும் தூள் தூளாகும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

- Advertisement -

காரிய தடைகளை தகர்த்தெறியும் பச்சை பயிறு பரிகாரம்

இந்த பரிகாரத்தை நீங்கள் ஏதாவது ஒரு நல்ல காரியத்திற்காக வெளியில் செல்கிறீர்கள் என்றால் அப்போது செய்யலாம் அல்லது புதிதாக வேலை தேடி செல்கிறீர்கள் என்றால் அப்போதும் செய்யலாம். நீங்கள் எந்த ஒரு காரியத்தை தொடங்க வெளியில் சென்றாலும் இந்த பரிகாரத்தை செய்து விட்டு செல்லுங்கள் நினைத்த காரியம் நிச்சயமாக நிறைவேறும்

இந்த பரிகாரத்திற்கு ஒரு கைப்பிடி பச்சை பயிறு எடுத்துக் கொள்ளுங்கள். இதை வேக வைக்க தேவையில்லை அப்படியே எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் கொஞ்சம் துளசி இலை, கொஞ்சம் வில்வம் இந்த மூன்று பச்சை பொருளும் சேர்ந்து தான் நம் வாழ்க்கையை பசுமையாக மாற்றப் போகிறது என்றே சொல்லலாம். ஆனால் இந்த பரிகாரத்தை யாருக்கு காரிய தடை இருக்கிறதோ அவர்கள் செய்ய முடியாது அவர்களுக்கு மற்றவர் தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

நீங்கள் வெளியில் செல்லும் பொழுது உங்கள் வீட்டில் பெரியவர் யாராவது இருந்தால் அவர்களை செய்ய சொல்லுங்கள் அல்லது வேறு யாரு இருந்தாலும் செய்யலாம். உங்களை விட வயதில் சிறியவர்கள் செய்யக் கூடாது. இந்த மூன்று பொருட்களையும் கையில் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் வீட்டு வரவேற்பதில் கிழக்கு முகமாக நின்று கொள்ளுங்கள். இந்த பொருளை வைத்து உங்களை திருஷ்டி சுற்றுவது போல கிளாக் வைஸில் மூன்று முறை சுற்ற வேண்டும்.

அதன் பிறகு கையில் இருக்கும் இந்த பச்சை பயிறு, துளசி, வில்வத்தை உங்கள் நெற்றியில் அடித்து அப்படியே கீழே கொட்டி விட வேண்டும். அதாவது இது உங்கள் முகத்தில் தூக்கி எறிவது போல இருக்க வேண்டும். ஆனால் நெற்றியில் இது கொஞ்சம் வேகமாக பட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு இருக்கும் காரிய தடைகள் அனைத்தும் தகர்த்தெறியப்படும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

நம்முடைய இந்த பரிகார முறைகளும் சாஸ்திர சம்பிரதாயங்களும் நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்தது தான். அந்த போல ஒரு பரிகாரம் தான் இது. இந்த காரியத் தடை பரிகார முறையில் நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: பரம ஏழையையும் பணக்காரனாக மற்றும் பஞ்சமி தீப வழிபாடு

காலம் முழுவதும் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற வேதனையில் வாழ்வதை விட ஒரு முறை இந்த பரிகாரத்தை முயற்சி தவறில்லை தானே. ஆனால் இந்த பரிகாரத்தை செய்து விட்டு முயற்சிகளை எடுக்காமல் இருந்தால் நிச்சயம் பலன் இருக்காது. பரிகாரத்தோடு சேர்த்து முயற்சியும் அவசியம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -