கஷ்டங்கள் கொடுக்கும் கடன்கள் விரைவில் நீங்க 9 வாரம் இவருக்கு இந்த தீபம் ஏற்றினால் போதுமா?

lakshmi-narasimar
- Advertisement -

சாதாரண மிடில் கிளாஸ் மக்கள் மட்டுமல்லாமல் ஏனைய மக்களும் தனக்கு கடன் தொல்லை இல்லாமல் இருந்தால் மட்டும் போதும் என்கிற இந்த வாக்கியத்தை பலமுறை கூறியிருக்கக் கூடும். உழைக்கின்ற பணத்தை வைத்து திருப்தி கொள்ளும் மனிதன் நிம்மதியாக உறங்குகிறான். இன்னும் வேண்டும் வேண்டும் என்று நினைப்பவர்கள் தான், தேவையில்லாத கடன்களில் சிக்கித் தவிக்கின்றனர். இப்படி கஷ்டங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் கடன்கள் எளிதாக நீங்குவதற்கு ஒன்பது வாரம் இந்த தெய்வத்திற்கு, இப்படி விளக்கு ஏற்றினால் போதும்! அது என்ன தீபம்? எப்படி ஏற்ற வேண்டும்? என்கிற தகவல்களை தொடர்ந்து இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

அசுரன் இரண்யகசிபுவை கொல்வதற்கு அவதாரம் எடுத்த இந்த நரசிம்ம மூர்த்தி நம் வாழ்வில் இருக்கும் கடன் என்கிற இந்த அசுரனை அழிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளவர். ஒன்பது வாரம் செவ்வாய்க் கிழமையில் நரசிம்ம மூர்த்திக்கு இந்த தீபம் இட்டு வழிபட்டு வந்தால் வாழ்வில் இருக்கும் எத்தகைய கடன்களையும் நம் சுய சம்பாத்தியத்தின் மூலம் நாம் எளிதாக அடைத்து விட முடியும்.

- Advertisement -

கடனை எப்படியாவது அடைத்து விடுவோம் என்கிற நம்பிக்கையில் தான் ஒவ்வொருவரும் அந்த கடன் தொகையை பெறுகின்றனர். ஆனால் சூழ்நிலையும், சந்தர்ப்பமும் அந்த கடனில் இருக்கும் வட்டியை கூட கட்ட முடியாத நிலைக்கு நம்மை தள்ளி விடுவது உண்டு. இத்தகைய நிலை மாறி நம்முடைய பொருளாதாரம் உயர்ந்து, கடன்கள் அடைய செவ்வாய்க்கிழமை நரசிம்மருக்கு தீபம் ஏற்றி சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை உச்சரித்து வர வேண்டும்.

மந்திரம்:
உக்ரம் வீரம் மஹா விஷ்ணும், ஜ்வலந்தம்
சர்வதோ முகம் நரசிம்மம், பீஷணாம்
பத்ரம் ம்ருத்யம் ம்ருத்யம் நமாம் யஹம்

- Advertisement -

ஒன்பது செவ்வாய்க் கிழமைகளில் வீட்டிலிருக்கும் தெற்கு பகுதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். தெற்குப் பகுதியில் நரசிம்மர் படத்தை வடக்கே பார்த்தவாறு வைக்க வேண்டும். அதாவது நரசிம்மரின் பார்வை வடக்கு நோக்கி இருக்க வேண்டும். அவருக்கு முன்பு 9 அகல் விளக்குகளை வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு விளக்கும் ஒவ்வொரு கிரகங்கள் ஆட்சி செய்யும் வகையில் இருக்கின்றன.

இந்த ஒன்பது மண் அகல் விளக்கில் சிகப்பு நிறத்திலான திரியை போட்டுக் கொள்ள வேண்டும். சிகப்பு நிறத்திரி எப்பொழுதும் கடன் பிரச்சனைகளை தீர்க்கும் ஆற்றல் படைத்தது. சிகப்பு நிற திரி பிரத்தியேகமாக நாட்டு மருந்து கடைகள் அல்லது பூஜை பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கப் பெறுகின்றன. அல்லது நீங்களே வெள்ளை திரியை குங்குமத்தில் தோய்த்து சிகப்பு நிறமாகி உலர்த்தி வைத்துக் கொள்ளலாம். சிகப்பு நிற திரி இட்டு எல்லா விளக்குகளும் வடக்கு நோக்கி பார்த்தவாறு வைக்க வேண்டும். பின்னர் அதில் மல்லிகை எண்ணெயை ஊற்றிக் கொள்ள வேண்டும். மல்லிகை எண்ணெயில் மணம் மிக்க தெய்வீக வாசம் கமழ்கிறது.

மேலும் மல்லிகையில் மகாலட்சுமி வாசம் செய்வதால், மல்லிகை எண்ணெய் கொண்டு ஏற்றப்படும் தீபத்தின் மூலம் நமக்கு செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. மல்லிகை எண்ணெய் பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கப் பெறுகின்றன. பின்னர் மேற்க்கூறிய நரசிம்மர் ஸ்லோகத்தை 9 முறை உச்சரித்து விட்டு ஒவ்வொரு தீபத்தை ஏற்றி செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். செவ்வரளி மலர்கள் நரசிம்மருக்கு உகந்த மலராக கருதப்படுகிறது. மேலும் இந்த பரிகாரம் செய்யும் நாட்களில் அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். சைவ உணவை மட்டுமே உட்கொண்டு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

பரிகாரத்தை 6 மணியில் இருந்து 7 மணிக்குள்ளாக அல்லது மாலை 8 மணியிலிருந்து 9 மணிக்குள்ளாக செய்ய வேண்டும். ஒன்பதாவது செவ்வாய்க்கிழமையில் நீங்கள் நரசிம்மருக்கு பானகம் நிவேதனம் வைத்து பூஜையை நிறைவு செய்து அதனை வீட்டில் இருக்கும் அனைவரும் பிரசாதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வர நிச்சயம் கட்டுக்கடங்கா கஷ்டங்களைக் கொடுக்கும் கடன் பிரச்சினைகள் எளிதாக தீரும் என்பது ஐதீகம்.

- Advertisement -