கோடி ரூபாய் கடனையும் சுலபமாக அடைக்க இந்த ஒரு இலை உங்களிடம் இருந்தால் போதும். ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் கடன் தீர எளிமையான இலை பரிகாரம்.

- Advertisement -

கடன் என்பது எத்தகை பெரிய துயரம் என்பதை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. இந்த கடனை அடைக்க ஒவ்வொருவரும் எவ்வளவோ பாடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனாலும் கடன் அடைந்த பாடு இல்லை மேலும் மேலும் அது தொடர்ந்து கொண்டே தான் கொண்டிருக்கிறது. இப்படி எல்லாம் நினைத்து வருத்தப்படுபவர்கள் இந்த இலை பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் எவ்வளவு கடனாக இருந்தாலும் அதை அடைவதற்கான வழி பிறக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவு தெரிந்து கொள்ளலாம்.

கடனடைய செய்யப்படும் இந்த பரிகாரமானது வளர்பிறை அமாவாசைக்கு அடுத்து வரும் திங்கட்கிழமை செய்ய வேண்டும். வளர்பிறை அமாவாசை எந்த கிழமையில் வந்திருந்தாலும் பரவாயில்லை, ஒரு வேளை அது திங்கட்கிழமையே வந்திருந்தாலும் கூட அதற்கு அடுத்து வரும் திங்கட்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இப்போது இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

- Advertisement -

கடன் தீர பரிகாரம்:
இந்த பரிகாரத்தை திங்கட்கிழமை காலை முதல் மாலை 7 மணிக்குள்ளாக எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டில் செய்வதாக இருந்தால் நிச்சயமாக சிவலிங்கம் இருக்க வேண்டும். சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா? என்று கேட்டால் கட்டாயமாக வழிபடலாம். ஒரு அடி அளவு மட்டும் உள்ள லிங்கம், விக்ரகம் எதுவாக இருந்தாலும் நாம் வீட்டில் வைத்து வழிபடலாம். அதற்கு மேல் உள்ள விக்கிரகங்களை வைத்து வழிபடுவதாக இருந்தால் அதற்கான விதிமுறைகளின்படி வழிபடலாமே அன்றி விக்ரகங்களை வைத்து வழிபடக் கூடாது என்ற எந்த ஐதீகமும் கிடையாது.

இப்படி உங்கள் வீட்டில் சிவலிங்கம் வாங்கி வைத்து வழிபட முடியவில்லை என்றால், நிறைய சிவ ஆலயங்களில் தனியாக சிவலிங்கங்கள் ஆலயத்தை சுற்றி வைத்திருப்பார்கள். அங்கு யார் வேண்டுமானாலும் பூஜை செய்யலாம். அது போல கோவில்களை தேர்ந்தெடுத்து அங்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

இந்த பரிகாரம் செய்ய நமக்குத் ஊமத்தம் பூ இலை தேவை. இதில் பல வண்ணங்கள் உள்ளது அதில் நீங்கள் எந்த நிற ஊமத்த பூவின் இலைகளை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் 108 இலைகள் எடுத்து கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு சிவலிங்கத்தின் முன்பு ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அதன் பிறகு நீங்கள் எடுத்து வைத்திருக்கும் 108 ஊமத்த இலைகளையும் ஒவ்வொரு இலையாக எடுத்து லிங்கத்தின் மீது வைத்து வணங்க வேண்டும். அப்படி வணங்கும் போது இந்த ஒரு வரி மந்திரத்தை மட்டும் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.

ஓம் ருண முத்தேஸ்வர மகாதேவாய நமஹ
இந்த மந்திரத்தை ஒவ்வொரு இலையும் எடுத்து லிங்கத்தின் மீது வைக்கும் போதும் சொல்லிக் கொண்டே வைக்க வேண்டும். அதன் பிறகு லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும். இந்த பாலபிஷேகம் உங்களுக்கு எப்படி செய்ய தெரியுமோ அது போலவே செய்து கொள்ளலாம். இவையெல்லாம் செய்த பிறகு ஊமத்தம் இலைகளை எல்லாம் லிங்கத்தின் பாதத்திலே வைத்து கற்பூரம் ஏற்றி வணங்கி பரிகாரத்தை முடித்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: உங்களை வீழ்த்த நினைப்பவர்கள் முன் உயர்ந்து காட்ட வெற்றியைத் தரும் வெற்றிலையை இப்படி செய்யுங்கள்!

இந்த பரிகாரத்தை தொடர்ந்து பதினாறு திங்கட்கிழமை செய்ய வேண்டும். பரிகாரம் செய்த பிறகு இருக்கும் அந்த ஊமத்தம் இலைகளை அடுத்த நாள் யாரும் கால் படாத இடத்தில் எடுத்து போட்டு விடுங்கள். இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய தொடங்கிய உடனே கடன் அடைக்க கூடிய அந்த வாய்ப்புகள் உங்களை தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. இது வரை நீங்கள் அடைக்க எத்தனை முயற்சி எடுத்து தடை பட்டிருந்தாலும் இந்த பரிகாரம் அந்த தடைகளை நீக்கி கடனை அடைக்க வழி வகுக்கும் என்று நம்பப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து கடன் இல்லாத நிம்மதியான வாழ்க்கை வாழுங்கள்.

- Advertisement -