கடன் தீர அதி சக்தி வாய்ந்த தேய்பிறை பஞ்சமி பரிகாரம்

varahi kal uppu
- Advertisement -

கடன் தீர எண்ணற்ற பரிகார முறைகள் இருந்தாலும் வாராகி அன்னையின் வழிப்பாடும் வாராகி அன்னை நினைத்து செய்யப்படும் பரிகாரங்களும் நல்ல பலன் தரக்கூடியதாக இருக்கும். அதிலும் தேய்பிறையில் வரக் கூடிய பஞ்சமி திதியில் செய்யக் கூடிய வழிபாடும் பரிகாரமும் நம்முடைய துன்பங்கள் துயரங்கள் அனைத்தையும் நீக்கக்கூடியதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த வருடத்தின் கடைசி தேய்பிறை பஞ்சமி நாளை 31.12. 2023 அன்று தொடங்கி 1.1.2024 அன்று மதியம் 2 வரை இருக்கிறது. அதாவது வருடத்தின் கடைசி நாளில் தொடக்கி புது வருடம் பிறக்கும் போதும் பஞ்சமி திதி இருக்கிறது. இது மிகவும் விசேசமானதாக அமைந்து இருக்கிறது.

- Advertisement -

இந்த நாளில் நாம் செய்யும் இந்த கல் உப்பு பரிகாரமானது நம் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கக் கூடியதாக அமையும். இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றிய தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடன் தீர பஞ்சமி திதி கல் உப்பு பரிகாரம்

இந்த பரிகாரத்தை நீங்கள் ஞாயிறு அல்லது திங்கள் இரண்டு தினங்களில் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஞாயிற்றுக்கிழமை செய்வதாக இருந்தால் இரவு 7 மணிக்கு மேல் செய்யுங்கள். திங்கட்கிழமையில் செய்வதாக இருந்தால் மதியம் 2 மணிக்குள் செய்து விடுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்ய மஞ்சள், வெள்ளை, சிவப்பு, இந்த மூன்று நிறத்தில் ஏதாவது ஒரு நிறத்திலான சிறிய துண்டு எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு சிறிய கிண்ணம் இதற்கு கண்ணாடி, சில்வர் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதே போல் புதிதாக கல்லுப்பை வாங்கிக் கொள்ளுங்கள்.

இப்போது உங்கள் கைகளால் முதலில் ஒரு கைப்பிடி கல்லுப்பை எடுங்கள். அந்த கல் உப்பை கையில் வைத்து அழுத்தமாக பிடித்துக் கொண்டு உங்களுடைய கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள். மற்ற பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதுவும் தீர வேண்டிக் கொள்ளலாம். ஆனால் ஏதாவது ஒரு சங்கல்பத்தை மட்டும் தான் வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்போது இந்த கல்லுப்பை அந்த கிண்ணத்தில் போட்டு விடுங்கள். அதே போல் இன்னொரு கைப்பிடி கல்லுப்பு எடுங்கள். முதலில் வேண்டிய அதே வேண்டுதலை இப்போதும் வேண்டுங்கள். அதன் பிறகு உப்பை அந்த கிண்ணத்தில் போட்டு விடுங்கள். இதே போல மூன்று கைப்பிடி கல் உப்பை கிண்ணத்தில் போட்டு விட வேண்டும்.

அதன் பிறகு இந்த கல் உப்பை பூஜை அறைக்கு கொண்டு சென்று வைத்து விடுங்கள். பூஜை அறையில் கிண்ணத்தில் இருக்கும் கல் உப்பை அதே போல் மூன்று முறை எடுத்து நீங்கள் வாங்கிய துணியில் போட்டு முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த முடிச்சை பூஜை அறையில் வைத்து வாராகி அம்மனை மனதார நினைத்து பிரார்த்தனை செய்து முடிச்சை பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

இது பூஜை அறையிலேயே மூன்று நாட்கள் வரை வைக்க வேண்டும்.இந்த முடிச்சு கட்டி வைத்த மூன்றாவது நாள் இதை கொண்டு சென்று ஓடும் தண்ணீரில் போட்டு விட வேண்டும் . ஓடை இல்லாத சமயத்தில் வீட்டில் சிங்கில் கல் உப்பை போட்டு கரைத்து விட்டு, துணியை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.. அவ்வளவு தான் பரிகாரம்.

இதையும் படிக்கலாமே: புது வருடம் மகிழ்ச்சியாய் அமைய செய்ய வேண்டிய தானம்

வருடத்தின் கடைசி நாளில் செய்யக் கூடிய இந்த பரிகாரம் வரக்கூடிய வருடத்தில் கடன் எல்லாம் அடைந்து நிம்மதியாக வாழ்க்கை வாழ வழி செய்யும் என்று நம்பப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் வாராகி அம்மனை நினைத்து நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -