புது வருடம் மகிழ்ச்சியாய் அமைய செய்ய வேண்டிய தானம்

sivan arul pera
- Advertisement -

ஒவ்வொருவரும் இன்றைய தேதியில் நாம் நினைப்பது இந்த வருடத்தில் நாம் பட்ட துன்பம் எல்லாம் மறைய வேண்டும் வரும் ஆண்டில் ஆவது நினைத்ததெல்லாம் நடந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தான். இந்த ஒரு விஷயத்திற்காக தான் வருடம் பிறக்கும் பொழுது ஆலயம் செல்கிறோம் வீட்டில் பூஜை புனஸ்காரங்கள் செய்கிறோம்.

இவற்றுடன் சேர்த்து இந்த வருடத்தின் கடைசி நாளாக 31.12. 2023 ஞாயிற்றுக்கிழமைக்குள் இந்த ஒரு செயலை செய்யும் போது நம்மை பிடித்த பீடை, தரித்திரம் எல்லாம் ஒழிந்து விடுவதோடு, ஈசனின் பரிபூரண அருளைப் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அதை பற்றிய தகவலை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கண் திருஷ்டி தீய சக்திகள் அழிந்து ஈசனின் அருளை பெற

ஆங்கில வருட பிறப்பை பலரும் பல வகையில் கொண்டாடுவார்கள். ஒரு சிலர் ஆலயம் சென்று வழிபாட்டுடன் அன்றைய நாளை தொடங்குவார்கள். இன்னும் சிலர் வீட்டிலே வழிபாடுகள் செய்து இந்த வருடத்தின் நாளை தொடங்குவார்கள். இன்னும் சிலரோ குடும்பத்துடனும் நண்பர்களுடனும் இன்றைய நாளை தொடங்குவார்கள்.

இவற்றையெல்லாம் செய்வதற்கு முன்பாக நாம் செய்யக் கூடிய இந்த ஒரு செயல் நம்முடைய வாழ்வையே மாற்றக் கூடியதாக அமையும் என்று சொல்லப்படுகிறது. அது அன்றைய தினத்தில் திருநங்கைகளுக்கு நாம் கொடுக்கும் தானம் தான். இதற்கு நாம் செய்ய வேண்டியது அன்றைய தினத்தில் திருநங்கைகளை தேடி சென்று தானத்தை செய்ய வேண்டியது தான்.

- Advertisement -

இவர்களுக்கு அன்றைய தினத்தில் புதிய உடைகள், உணவு, இனிப்பு போன்றவற்றை வழங்க வேண்டும். திருநங்கைகள் உங்களைவிட வயதில் மூத்தவர்களாக இருக்கலாம் அல்லது சிறியவர்களாகவும் இருக்கலாம். இந்த தானங்களை செய்த பிறகு அவர்களிடம் மனதார ஆசிர்வாதத்தை பெற வேண்டும். அதன் பிறகு அவர்கள் கையால் ஒரு ரூபாய் கேட்டு வாங்க வேண்டும்.

இந்த ஒரு ரூபாய் நாணயத்தை கொண்டு வந்து நீங்கள் வீட்டில் பத்திரப்படுத்தி கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி இந்த தானமானது உங்களை சுற்றி இருக்கும் அனைத்து கெட்டவைகளையும் அகற்றி விடும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

திருநங்கைகளை மதித்து அவர்களுக்கு தானங்களை வணங்கி அவர்களிடம் ஆசைகளை பெறுவது ஒரு சில இடங்களில் பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள். அவர்களைத் தேடி சென்று தங்கள் இல்லங்களுக்கு அழைத்து வந்து ஆசிகளை பெறுகிறார்கள். தங்கள் குழந்தைகளையும் ஆசீர்வதிக்க சொல்கிறார்கள். இவர்கள் ஆசிர்வாதத்திற்கு அத்தகைய சக்தி உள்ளதாக நம்பப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சகல செல்வமும் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்

இந்த வருடத்தின் கடைசி நாளில் நீங்களும் இந்த முறையில் திருநங்கைகளுக்கு தானத்தை வழங்கி ஆசிகளை பெற்றால், வரும் புத்தாண்டில் நீங்கள் மகிழ்ச்சியுடன் சந்தோஷத்துடனும் வாழ வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த பதிவில் உள்ள கருத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் பின்பற்றி பலன் அடையுங்கள்.

- Advertisement -