கடல் போன்ற கடன் சுமையும் கண்ணுக்கு தெரியாமல் போக, இந்த ஒரு ரூபாய் போதும். கோடிக் கணக்கில் கடன் இருந்தாலும், அதை இல்லாமல் செய்து பண வரவை அதிகரிக்க இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது.

- Advertisement -

ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் மிக மோசமான சூழ்நிலை என்பது ஒருவரிடம் வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமல் அந்த மனிதரின் முன் தலை குனிந்து நிற்பது தான். இதை சந்திக்காமல் வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றவர் மிகவும் குறைவு தான் இன்னமும் பல பேர் இது போன்ற துயரத்தை தினமும் அனுபவித்துக் கொண்டே இருக்கிறார்கள். கடன் என்பது மிகப் கொடிய நோயைப் போன்றது இந்த கடன் பிரச்சனை மட்டும் வீட்டிற்குள் நுழைந்து விட்டால் இருக்கும் கொஞ்சம் சந்தோஷமும் கூட தொலைந்து விடும். இப்படி கடனால் பெருமளவு பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் அந்த கடனை விரைவில் அடைக்க இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்து பாருங்கள் நிச்சயம் உங்கள் கடன் விரைவில் அடைந்து விடும். அந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

கடனை அடைக்க நாம் முயற்சி செய்து கொண்டே இருந்தாலும் சிலரிடம் வாங்கிய கடனை நாம் எப்பொழுதுமே அடைக்கவே முடியாது அவருக்கு கொடுக்க வேண்டும் என்று பணத்தை புரட்டி வைத்திருந்தாலுமே கூட, ஏதாவது ஒரு சூழ்நிலை அவரிடம் அதை திருப்பிக் கொடுக்க முடியாத சூழ்நிலை ஆளாக்கி விடும். அதனால் தான் பணத்தை வாங்கும் பொழுது நேரம் காலம் பார்த்து வாங்க வேண்டும் அப்படி நாம் வாங்கக்கூடாத நேரத்தில் குளிகை காலம் மிகவும் முக்கியமான ஒன்று இந்த நேரத்தில் வாங்கிய கடனை நீங்கள் எந்த பாடுபட்டாலும் அடைப்பது மிக மிக சிரமம். இந்த பரிகாரமே அப்படி வாங்கிய கடனைக் கூட விரைவில் அடைக்க முடியும் என்பது தான் . சரி இந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

இந்தப் பரிகாரத்தையும் குளிகை நேரத்தில் தான் செய்ய வேண்டும். குளிகை நேரத்தில் ஆறு வெற்றிலை எடுத்துக் கொள்ளுங்கள். (ஆறு எண்ணிக்கை சுக்கிரனுக்கு உரியது). வெற்றிலை கொஞ்சமும் வாடாமல் பூச்சி இல்லாமல் கருப்பு புள்ளிகள் இல்லாமல் நல்ல வெற்றிலையாக காம்புடன் இருப்பதாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள் இது மிகவும் முக்கியம் அத்துடன் இரண்டு கொட்டைப்பாக்கையும் வைத்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்து அதை ஒரு பிங்க் நிற பேப்பர் (நகைக்கடைகளில் நகையை வைத்து மடித்து கொடுக்கும் பேப்பர் )அதில் இந்த வெற்றிலையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் பாக்கையும் வைத்து மடித்து கொள்ளுங்கள். (இந்த பரிகாரம் செய்ய நாள் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை நேரம் மட்டும் குளிகையாக இருக்க வேண்டும்).

இதை உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து தீபமேற்றி உங்கள் குலதெய்வத்திடம் மனதார வேண்டி நீங்கள் யாரிடம் கடன் வாங்கினீர்களோ அந்த நபரின் பெயரை சொல்லி அவர்களிடம் வாங்கிய இந்த கடனை அடைய வேண்டும் என மனதார வேண்டிக் கொண்டு, மடித்து வைத்த இந்த வெற்றிலை காகிதத்தை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் குளிகை நேரம் முடிவதற்குள் வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்த சில நாட்களிலே உங்களால் நம்பவே முடியாத அளவிற்கு ஆச்சர்யம் நடக்கும். உங்களின் பண வரவு அதிகரித்து நீங்கள் இதுவரை அடைக்க முடியாமல் திணறிய அந்த கடனை அடைத்து நிச்சயமாக அந்த கடனிலிருந்து மீண்டு விடுவீர்கள்.

இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் தெய்வத்தை வேண்டிக் கொண்டு செய்து பாருங்கள் உங்களின் பல நாள் கடனும் அடைந்து, நல்ல பண வரவை பெற்று வாழ்க்கையில் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் வாழ இந்த பரிகாரம் நிச்சயம் பலன் தரும்.

- Advertisement -