Kadan theera : நீண்ட நாள் கடன் தீர பரிகாரம்

kadan theera pariharam in tamil
- Advertisement -

கடன் என்ற வார்த்தையை கேட்டாலே உறவுகள் கூட பிரிந்துவிடும் சூழல் ஏற்படுகிறது. எவருமே கடன் வாங்க விரும்புவதில்லை. எனினும் சில சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒருவரை கடன் வாங்க செய்து விடும். அப்படி கடன் வாங்கியவர்கள் அதை திரும்ப அடைப்பதற்குள் படாத பாடு பட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்டவர்கள் தங்களின் கடன் தீர செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

கடன் தீர பரிகாரம்

தாங்கள் வாங்கிய கடன்களை எல்லாம் மிக விரைவில் அடைக்க விரும்புபவர்கள், துர்க்கை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். எந்த ஒரு மாதத்தில் வருகின்ற தேய்பிறை வியாழக்கிழமை தினத்தன்று இரவு நேரத்தில் துர்க்கை அம்மன் கோயிலுக்கு சென்று, துர்க்கை அம்மனுக்கு குங்குமம் நிவேதனமாக அளிக்க வேண்டும். இப்படி 11 வியாழக்கிழமைகள் தொடர்ச்சியாக செய்து வந்தால் விரைவிலேயே தாங்கள் வாங்கிய கடன் முழுவதும் அசல் மற்றும் வட்டியுடன் அடைத்து மன நிம்மதி பெறுவீர்கள்.

- Advertisement -

கடன் விரைவில் தீர நினைப்பவர்கள் மேற்சொன்ன பரிகாரத்தைப் போலவே வெள்ளிக்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். ஒரு தேய்பிறை வெள்ளிக்கிழமை அன்று தொடங்கி 5 வெள்ளிக்கிழமைகளுக்கு உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள மகாலட்சுமி தாயார் கோவிலில், மகாலட்சுமிக்கு மல்லிகை பூ மாலையை வாங்கி அணிவிக்க வேண்டும். இப்பரிகாரம் மகாலட்சுமி அருளை பெற்று தந்து, நமக்கு இருக்கின்ற பொருளாதார கஷ்டங்களை நீக்கி விரைவில் கடன் அடைய வழி உண்டாகும்.

அதிகளவு கடன் வாங்கி அதனால் பல சிக்கல்களை சந்திப்பவர்கள் மிக விரைவில் தங்களின் கடன்களை அடைத்து நிம்மதியான வாழ்க்கை வாழ தாங்கள் வைத்திருக்கும் பணப்பெட்டியில் சிறிய அளவு புளிய மரத்தின் கிளையை வைத்துக் கொள்ள வேண்டும். தெய்வீக ஆற்றல்களை தன்னகத்தே கொண்டுள்ள புளிய மரத்தின் கிளையை பண பட்டியல் வைப்பதால் உங்களுக்கு அதிகளவு பண ஈர்ப்பு ஏற்பட்டு அதன் மூலம் மிக விரைவிலேயே கடன்களை அடைத்து முடிக்கலாம்.

- Advertisement -

கடன் வாங்குபவர்கள் எக்காரணம் கொண்டும் செவ்வாய்க்கிழமைகளில் கடன் வாங்க கூடாது. அப்படி வாங்கினால் கடனை சுலபத்தில் அடைக்க முடியாத நிலை ஏற்படும். அதே நேரத்தில் வாங்கிய பழைய கடன்களை அடைப்பதற்கேற்ற கிழமையாக செவ்வாய்க்கிழமை உள்ளது. செவ்வாய்க்கிழமைகளில் பழைய கடனுகான சிறு தொகையை முதலில் செலுத்துவதால், மிக விரைவிலேயே கடன்களை அடைத்து விடலாம்.

கடன்களை விரைவில் அடைக்க முடியாமல் மன வருத்தப்படுபவர்கள் சனிக்கிழமைகளில் அனுமன் கோயிலுக்கு சென்று அனுமனுக்கு ஒரு மண் அகல் விளக்கில் திரி போட்டு கடுகு எண்ணெயை ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். அந்த தீப எண்ணையில் 5 லவங்கங்களை போட்டு அனுமனை வழிபாடு செய்ய வேண்டும். இந்த தீப வழிபாடு எப்படிப்பட்ட கடன் பிரச்சனையையும் மிக விரைவில் தீர்க்கக்கூடிய தாக கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: ஜென்ம சனி பரிகாரம்

உங்கள் வீட்டின் குளியல் அறையில் ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் கல் உப்பு நிரப்பி, அதை அந்த அறையின் ஏதாவது ஒரு மூலையில் வைத்து விடுவதால் அந்த வீட்டில் இருப்பவர்களுக்கு கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படாது. அப்படியே கடன் வாங்கி இருந்தாலும் விரைவில் அதை அடிக்கக்கூடிய அமைப்பு உண்டாகும்.

- Advertisement -