கடன் கட்டுக்கடங்காமல் கடன் தொல்லை வாட்டி எடுக்கிறதா? மகாலட்சுமியை இல்லம் தேடி வரச் இப்படி மட்டும் செய்யுங்கள்!

murugan-malli-elakkai
- Advertisement -

இந்த உலகத்தில் கடன் வாங்காத மனிதனே இல்லை என்று கூறலாம். ஏழை, பணக்காரன் என்கிற எந்த ஒரு வித்தியாசமும் இன்றி இருக்கும் ஒரு மிகப் பெரிய பிரச்சனை கடன் தான். என்ன! அவரவர் தகுதிக்கு ஏற்ப கடன்கள் மாறுபடுகிறது அவ்வளவுதான். இப்படி தீராத கடன் பிரச்சனை, கட்டுக்கடங்காத கடன் பிரச்சனைகளை எளிதாக தீர்க்கும் மகாலட்சுமியை ஆன்மீக ரீதியாக இப்படி வழிபாடு செய்து பாருங்கள் நிச்சயம் உங்களுடைய பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். கடன் தீர செய்ய வேண்டிய சக்தி வாய்ந்த எளிய பரிகாரங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

neideepam

முதலாவதாக மகாலட்சுமிக்கு வெள்ளிக்கிழமையில் நெய் தீபம் ஏற்றி வர வேண்டும். நீங்கள் என்னதான் விதவிதமான விளக்குகளை வைத்து தீபம் ஏற்றி வழிபட்டாலும், ஒரு அகல் விளக்கிற்கு இணையாக எதுவும் வந்து விட முடியாது. சுத்தமான மண்ணால் செய்யப்பட்ட இந்த அகல் விளக்கு தனித்துவம் வாய்ந்தது. அகல் விளக்குகளில் சுத்தமான பசு நெய் விட்டு பஞ்சு திரி இட்டு மகாலட்சுமி படத்திற்கு இருபுறமும் இரண்டு அகல் விளக்குகளை வைத்து இவ்வாறு ஏற்ற குடும்பத்தில் இருக்கும் வறுமை நீங்கும். இதைத் தொடர்ந்து கடன் தீரும் வரை ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் செய்து வர வேண்டும்.

- Advertisement -

மகாலட்சுமி பூஜையில் மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான ஒரு பொருளாக இருக்கும் ஏலக்காயை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உங்கள் படத்திற்கு ஏற்ப எடுத்துக் கொள்ளுங்கள். மாலையாக அதனை ஊசி நூல் கொண்டு நீங்களே உங்கள் கைப்பட கோர்த்து மகாலட்சுமி படத்திற்கு போட்டு தீபம் ஏற்ற சகல சவுபாக்கியங்களும் உண்டாகும். மேலும் கட்டுக்கடங்காத கடனும் தீரும்.

elakkai-maalai

மகாலட்சுமி பூஜை மட்டுமல்லாமல் எப்போதும் நீங்கள் பூஜை செய்யும் பொழுது அனைத்து தெய்வத்திற்கும் உரிய மலர்களை அர்ச்சனை செய்து வழிபட்டால் விசேஷ பலன்கள் உண்டு. அதில் கடன் தீர்வதற்கு செவ்வரளி மலர்களால் முருகனுக்கு அர்ச்சனை செய்யலாம். அம்மனுக்கு அர்ச்சனை செய்ய மல்லிகைப் பூக்களை பயன்படுத்தலாம். பெருமாளுக்கு துளசியும், சிவனுக்கு வில்வ இலையாலும் அர்ச்சனை செய்து வழிபட்டால் கட்டுக்கடங்காத கடன்கள் காணாமல் போகும். இதை ஒரு நாள் இரண்டு நாள் செய்வது கிடையாது தொடர்ந்து உங்கள் கடன் தீரும் வரை ஒவ்வொரு முறை பூஜைகள் செய்யும் பொழுதும் தவறாமல் செய்து வர வேண்டும்.

- Advertisement -

இதே போல கிராம்புகளை ஒற்றைப்படை எண்ணிக்கையில் எடுத்து மாலையாக தொடுத்து மகாலட்சுமி, மகாவிஷ்ணு, லட்சுமி நரசிம்மர், குபேரன், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் ஆகியோர் படத்திற்கும் போட்டு அவர்களுடைய அருளைப் பரிபூரணமாகப் பெற்று கொள்ளலாம். வீட்டில் நீங்கள் பூஜைகள் செய்யும் பொழுது அந்தந்த தெய்வத்திற்குரிய மற்றும் பிடித்தமான விஷயங்களை செய்யும் பொழுது நமக்கு நம்முடைய வேண்டுதல்கள் எளிதாகப் பலிக்கின்றன.

இந்த வரிசையில் கட்டுக்கடங்காத கஷ்ட நிலை மாறி, சுபிட்சம் பெற, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வேல் அபிஷேகம் செய்து வரலாம். முருகன் கையில் வைத்திருக்கும் வேல் ஒன்றை நீங்கள் வாங்கி வைத்து அதனை பச்சரிசியில் சொருகி வைக்க வேண்டும். பின்னர் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமை அன்றும் அதற்கு அபிஷேகங்கள், ஆராதனைகள் செய்து முருக வழிபாடு செய்து வர எத்தகைய கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லையும் விரைவில் காணாமல் போகும்.

- Advertisement -