பத்து ரூபாயை வைத்து உங்களின் பல நாள் பண பிரச்சனைகளை காணாமல் செய்து விடலாம். பல கோடி கடனும் தீர்ந்து பண மழையை பொழிய செய்யும் சக்தி வாய்ந்த பரிகாரம்.

lashmi ten rupees
- Advertisement -

ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைகள் இருந்து கொண்டே தான் இருக்கிறது. கடன் பிரச்சனை, வீட்டு பொருளாதாரத்தில் நெருக்கடி, வியாபாரத்தில் முன்னேற்றம் இல்லாதது, வேலை கிடைக்காதது இப்படி தேவைகள் பல வகையாக இருந்தாலுமே, அதற்கான அடிப்படை பணம் தான். அந்த பணம் நம்மை தேடி வர இந்த பரிகாரம் பெரிதும் உதவி செய்யும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பரிகாரத்தை சனிக்கிழமைகளில் செய்வது மிகவும் உத்தமம். அதற்கு முதலில் ஒரு சின்ன மண் குடுவை வாங்கிக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் வெள்ளை சர்க்கரையை போட்டு விடுங்கள். அதன் பிறகு பத்து ரூபாய் நாணயத்தை எடுத்து உங்கள் தலையை ஆண்டி கிளாக் வைசில் ஏழு முறை சுற்றி அந்த நாணயத்தையும் இந்த மண் குடுவையில் போட்ட பிறகு, ஒரு மஞ்சள் துணி வைத்து குடுவையை இறுக்கமாக மூடி விடுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு இந்த குடுவையை அரச மரம் இருக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்று அங்கு வைத்து விட்டு உங்களின் பணம் தேவைகள், கடன் தொல்லைகள் அனைத்தையும் தீர வேண்டும் என்று மனதார வேண்டிய பிறகு, இந்த குடுவையை அங்கேயே வைத்து விட்டு வந்து விடுங்கள். இதே போல 11 சனிக்கிழமைகள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

கடன் தீர்ந்து பணம் பெருக பரிகாரம்
ஒவ்வொரு வாரமும் புதிய மண் குடுவை புதிய மஞ்சள் துணி, காயின் வைத்து இதே போல செய்ய வேண்டும். இதை தொடர்ந்து செய்து வரும் பொழுது நீங்கள் என்ன வேண்டுதலுக்காக இந்த பரிகாரத்தை செய்கிறீர்களோ அது முழுமையாக நடந்திருக்கும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்த பரிகாரத்தை தொடங்கும் முதல் வாரத்தில் நாட்டு மருந்து கடைகளில் சந்தன குச்சி என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். அதையும் ஒரு மஞ்சள் துணியில் சுற்றி நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இந்த குச்சியை ஒரே ஒரு முறை மட்டும் வைத்து விட்டால் போதும். அதை அடிக்கடி மாற்ற வேண்டிய அவசியம் கிடையாது. இது உங்களுக்கு பணப் பெருக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

இந்தப் பரிகாரத்தை செய்து வரும் பொழுது உங்கள் கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து, பண வரவானது பல மடங்கு பெருகி, உங்களின் பண தேவைகள் பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்வதோடு நல்ல வேலை, குடும்ப ஒற்றுமை, போன்ற பல நல்ல சுப நிகழ்வுகளும் நடக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: உங்க வீட்டு பீரோவில் தங்கம் கிடுகிடுவென சேர சனிக்கிழமையில் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? இதை செய்தால் ஸ்வர்ணம் பெருகுமாம்!

இந்தப் பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து உங்களின் தேவைகள் அனைத்தையும் பரிபூரணமாக நிறைவேற்றி, கடன் இல்லாத ஒரு செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

- Advertisement -