சங்கடம் தரும் கடன் தீர சனிக்கிழமை பெருமாள் வழிபாடு

perumal2
- Advertisement -

நீங்க யாருக்காவது கடனை சீக்கிரம் திருப்பி கொடுக்கனும், நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கி உள்ளீர்கள் என்றாலும், இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அல்லது யாருக்கோ நீங்க கடன் கொடுத்துட்டீங்க. அந்த பணத்தை வசூல் செய்து, அந்த பணத்தின் மூலம் உங்கள் வீட்டில் ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றாலும், இந்த வழிபாட்டை செய்யலாம்.

பணம் சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு மோசடியில் நீங்க சிக்கிட்டிங்க, அந்த பிரச்சனையிலிருந்து வெளிவர வேண்டும் என்றாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். நியாயம் உங்க பக்கம் இருக்கும் பட்சத்தில் வழிபாடு உடனடியாக பலனை கொடுக்கும். பண பிரச்சனை தீர்க்கும் சனிக்கிழமை பெருமாள் வழிபாடு.

- Advertisement -

கடன் சுமை நீங்க பெருமாள் வழிபாடு

பொதுவாகவே சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளையும் மகாலட்சுமி தாயாரையும் வழிபாடு செய்தால் செல்வ வளம் அதிகரிக்கும் என்று சொல்லுவார்கள். அதிலும் குறிப்பாக, சனிக்கிழமை சந்திர ஹோரையில் பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்தால் கடன் பிரச்சனை தீரும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். சனிக்கிழமை சந்திர ஹோரையில் பெருமாளுக்கு தாமரை பூ அல்லது மல்லிப்பூ மாலை கட்டி போட வேண்டும்.

தாமரைப் பூவை 1, 3, 5 என்ற கணக்கில் பெருமாள் கோவிலுக்கு கொண்டு போய் கொடுக்கலாம். மொட்டாக இருக்கும் மல்லி பூவை வாங்கி மாலையாக தொடுத்து பெருமாளுக்கு சாத்தினால் பணப்பிரச்சினை உடனே தீரும். இரண்டு பூவையும் ஒன்றாக கிடைத்தாலும் சரி எடுத்துட்டு போகலாம். அல்லது இரண்டில் ஏதாவது ஒரு பூ கிடைத்தாலும் அதை கொண்டு போய் சுவாமிக்கு கொடுக்கலாம். 

- Advertisement -

சனிக்கிழமை மதியம் 12:00 மணியில் இருந்து 1:00 மணி வரை சந்திர ஹோரை இருக்கிறது. சனிக்கிழமை இரவு 7:00 மணியிலிருந்து 8:00 மணி வரை சந்திர ஹோரை நேரமாக சொல்லப்பட்டுள்ளது. ஹோரை அட்டவணையை பார்க்கும் போதே உங்களுக்கு இந்த ஹோரைகளின் கணக்கு தெளிவாகப் புரியும். நம்பிக்கை உள்ளவர்கள் ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். தீராத பண கஷ்டத்திற்கு நிச்சயம் பெருமாள் ஒரு விமோசனத்தை காட்டி கொடுப்பார்.

சரி இந்த பரிகாரம் ஒரு பக்கம் இருக்கட்டும். இதோடு சேர்த்து இன்னொரு அரிதான ஆன்மீகம் சார்ந்த தகவலையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். சொந்த பந்தங்களிடம் இருக்கக்கூடிய கடன் பிரச்சனை, சொத்து பிரச்சனை, ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றால் என்ன செய்வது. வெளியாக்களிடம் கடன் வாங்கினால் அது வேறு.

இதையும் படிக்கலாமே: பெண்களுக்கு அரசாங்க வேலை கிடைக்க வழிபாடு

ஆனால் சொந்த பந்தங்களிடம் கடன் வாங்கினால் அதில் வரக்கூடிய பிரச்சினையை வேறு. இக்கட்டான சூழ்நிலையில் உங்கள் பணம், உங்கள் அண்ணன் தம்பி கிட்ட, அல்லது அக்கா தங்கைகளிடம் சிக்கியிருந்தாலோ அல்லது நிலம் சம்பந்தப்பட்ட தகராறுகள், சொந்த பந்தங்களோடு இருந்தாலும் சரி, செவ்வாய்க்கிழமை 1 கிலோ வெல்லம் வாங்கி ராகவேந்திர ஸ்வாமி மடத்திற்கு தானமாக கொடுங்கள். உடனடியாக அந்த பிரச்சனை சரியாகிவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன எளிமையான இந்த இரண்டு ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தையும் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -