பெண்களுக்கு அரசாங்க வேலை கிடைக்க வழிபாடு

govt job
- Advertisement -

அன்றைய காலத்திலும் சரி இன்றைய காலத்திலும் சரி அரசாங்க வேலை என்பது பலரின் கனவாகவும் லட்சியமாகவும் திகழ்கிறது. அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்களை இரண்டு விதங்களில் நாம் பிரிக்கலாம். கிடைத்த வேலையை செய்து கொண்டு அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்கள் ஒரு புறம் இருக்க எந்த வேலையும் செய்யாமல் அரசாங்க வேலைக்காகவே படித்து பரிச்சைகளை எழுதிக் கொண்டு இருப்பவர்களை மற்றொரு வகையாக நாம் பிரிக்கலாம்.

முழுமூச்சுடன் அரசாங்க வேலையே வேண்டும் என்று நினைத்து முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்னும் பட்சத்தில் அவர்கள் விரக்தி நிலைக்கு சென்று விடுவார்கள். அப்படி அரசாங்க வேலைக்காக முயற்சி செய்யும் பெண்கள் செய்யக்கூடிய ஒரு வழிபாட்டு முறையைப் பற்றி தான் இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

அரசாங்க வேலைக்கு செல்ல விரும்புபவர்கள் அதற்குரிய தேர்வுகளை எழுதி அதில் தேர்ச்சி பெற்று பிறகு நேர்காணல் என்று பல நிலைகளைக் கடந்து அரசாங்க வேலையில் சேர வேண்டும். எந்த அளவிற்கு முழு முயற்சியுடன் செய்கிறார்களோ அதே சமயம் தெய்வ வழிபாட்டையும் சேர்த்து செய்தால் அந்த முயற்சியில் வெற்றி என்பது உறுதியாக இருக்கும். காரணம் அரசாங்க வேலை கிடைக்க எந்த அளவுக்கு நாம் நம்முடைய முயற்சியை செய்கிறோமோ அதே அளவிற்கு நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் அமைப்பும் முக்கியமாகவே கருதப்படுகிறது. இந்த கிரகங்களின் அமைப்பு தவறுதலாக இருக்கும் பட்சத்தில் நாம் தெய்வீக வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது அதன் காரணமாக கிரகங்களும் நமக்கு சாதகமாக விளங்கும்.

இந்த வழிபாட்டை வளர்பிறை சதுர்த்தி, பஞ்சமி, தசமி இந்த மூன்று திதிகள் வரும் நாட்களில் ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை உச்சி கால வேளைக்குள் செய்து முடித்து விட வேண்டும். அதாவது பகல் 12 மணிக்கு முன்பாக செய்ய வேண்டும். அருகில் இருக்கக் கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

- Advertisement -

விநாயகருக்கு முன்பாக ஒரு வாழை இலையை விரித்து அதன் மேல் கோதுமையை பரப்பி பத்து அகல் விளக்குகளை வைத்து அதில் நெய் ஊற்றி சிவப்பு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். விநாயகப் பெருமானுக்கு பால் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பிரசாதத்தை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். பிறகு அவருக்கு நல்ல தேங்காயாக பார்த்து பத்து தேங்காய்களை எடுத்து மாலையாக கோர்த்து விநாயகருக்கு சாற்ற வேண்டும்.

அடுத்ததாக இந்த தீபங்களுக்கு முன்பாக அமர்ந்து விநாயகப் பெருமானை பார்த்தவாறு “ஓம் பாச கணபதயே ஐம் க்லீம் கம் கணபதயே சர்வ அனுக்கிரக ஸ்வதா” என்னும் மந்திரத்தை 28 முறை உச்சரிக்க வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபட்டு விட்டு எடுத்துச் சென்ற பிரசாதத்தை அங்கு வரும் பக்தர்களுக்கு தானமாக வழங்கி விட வேண்டும். இப்படி குறைந்தது ஐந்து முறை செய்து வந்தாலே அரசாங்க வேலை தொடர்பான நல்ல செய்தியும் நல்ல வாய்ப்பும் அவர்களை தேடி வரும்.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி, மனபயம் நீங்க பரிகாரம்

விடாப்பிடியாக முழு நம்பிக்கையுடன் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசாங்க வேலையில் சேர வேண்டும் என்ற முயற்சியில் இருப்பவர்கள் இந்த வழிபாட்டையும் நம்பிக்கையுடன் செய்து முழுமையான பலனை பெறலாம்.

- Advertisement -