கையில் இருக்கும் பணத்தையும், நகையையும் பிறரிடம் கொடுத்துவிட்டு திரும்ப கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள் இந்த தீபத்தை ஏற்றி வழிபட்டால், விரைவிலேயே கொடுத்த பணமும், நகையும் திரும்ப கிடைத்துவிடும்.

kalabhairavar deepam money jewel
- Advertisement -

நம்பிக்கை என்ற ஒன்றை வைக்க கூடாத நபரிடம் வைத்து விட்டோம் என்றால் அதனால் நமக்கு பிரச்சனைகள் ஏற்படும். வீட்டில் இருப்பவர்களும், வேலைக்கு செல்பவர்களும், தொழில் நடத்தி வருபவர்களும் தங்களுக்கு நம்பிக்கைக்குரியவர்கள் என்று இருப்பவர்களுக்கு தங்களுடைய பணத்தையோ அல்லது நகையோ கொடுத்து உதவி செய்வார்கள். அவ்வாறு கொடுத்த நபர் ஏதோ ஒரு சூழ்நிலையில் அதை திரும்ப தர முடியவில்லை என்றால் அதனால் நமக்கு மன கஷ்டமும், பணகஷ்டமும் ஏற்படும். அந்த சூழ்நிலையில் என்ன செய்தால் நம்முடைய பணமும், நகையும் திரும்பி வரும் என்றுதான் நாம் யோசிப்போம். இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் எந்த தீபத்தை ஏற்றி எப்படி வழிபட்டால் நாம் கொடுத்த பணமும் நகையும் நம்மிடம் திரும்ப வந்து சேரும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

நன்றாக பழக்கமான ஒரு நபர் நம்மை தேடி வந்து இக்கட்டான சூழ்நிலையை கூறி நம்மிடம் இருக்கும் பணத்தையோ, நகையோ ஒரு வாரத்தில் திருப்பி தருகிறேன் என்று கூறி வாங்கிவிட்டு, திரும்பத் தராமல் இருந்தால் அதனால் நமக்கு பிரச்சினைகளை ஏற்படும். சிறிய தொகையாக இருந்தால் அதை நாம் சமாளித்து விடுவோம். பெரிய தொகையாக இருக்கும் பட்சத்தில் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போய்விடும். இதேதான் ஜாமின் கையெழுத்து போடுபவர்களுக்கும் ஏற்படுகிறது. இந்த கடன் பிரச்சனையை தீர்ப்பதற்கு நமக்கு உதவி செய்பவரே கால பைரவர்.

- Advertisement -

காலபைரவரை நாம் வழிபட்டோம் என்றால் நாம் தரவேண்டிய கடனாக இருந்தாலும் சரி, நமக்கு வரவேண்டிய கடனாக இருந்தாலும் சரி அனைத்தையும் தீர்ப்பதற்கு அவர் அருள் புரிவார், அவரை எப்படி வழிபட வேண்டும் என்பதே குறிப்பிடத்தக்கது, அவரை வழிபடும் பொழுது அசைவம் சாப்பிடுவதையும் தவிர்த்து விட்டு வழிப்பட வேண்டும்.

நமக்கு வரவேண்டிய பணமும், நகையும் நம்மிடம் திரும்ப வருவதற்கு ஞாயிற்றுக்கிழமை அன்று ராகு காலத்தில் கால பைரவருக்கு நாம் இரண்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இந்த தீபம் நல்லெண்ணெய் தீபமாக இருக்க வேண்டும். மேலும் இதில் நாம் உபயோகப்படுத்தும் திரியை நாமே தயாரிக்க வேண்டும்.

- Advertisement -

இதற்கு ஒரு வெள்ளை துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சுத்தமாக துவைத்து காய வைத்துக் கொள்ளுங்கள். காய்ந்த பிறகு அதை பன்னீரில் மறுபடியும் அலசி காய வைக்க வேண்டும். காய்ந்த இந்த துணியை இரண்டு சதுரமாக வெட்டிக் கொள்ளுங்கள். அந்த துணிக்குள் 27 மிளகுகளை வைக்க வேண்டும். 27 என்ற எண்ணிக்கை நட்சத்திரங்களை குறிக்கும். பிறகு அதை வெள்ளை நிற நூலால் ஒரு மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். இப்பொழுது திரி தயாராகி விட்டது.

கால பைரவரின் சன்னதிக்கு சென்று இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி இந்த மிளகு மூட்டையை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். பிறகு நமக்கு யார் பணம் தர வேண்டுமோ அவர்களின் பெயரை உச்சரித்த வண்ணமோ அல்லது மனதில் நினைத்துக் கொண்டோ அந்த இரண்டு தீபங்களையும் சுற்றி குங்குமத்தை வட்ட வடிவில் தூவ வேண்டும். பிறகு காலபைரவரை மனதார வழிபட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இன்று ஆவணி மாத வளர்பிறை சோமவார பிரதோஷம்! வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய ஈசனை நினைத்து இந்த ஒரு வரி மந்திரத்தை சொன்னாலே போதும்.

இவ்வாறு நாம் தொடர்ந்து எட்டு ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் நமக்கு வரவேண்டிய பணமும், நகையும் விரைவில் வந்து சேரும்.

- Advertisement -