உங்களுடைய கடன் நீங்க, 8 திக்கிலும் இருக்கும் பிரச்சனைகளை துரத்தியடிக்க 8 விளக்குகளை வீட்டில் இப்படி ஏற்றுங்கள்!

mahalakshmi-vilakku
- Advertisement -

மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் நிறையவே பிரச்சனைகள் இருக்கும். எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அதனை ஈஸியாக சமாளித்து விடலாம் ஆனால் கடன் பிரச்சனை என்பது மிகப் பெரிய பாரமாக இருக்கும். எப்பொழுது கடன் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ்வது? என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த வழிபாடு சிறந்த பலனை கொடுக்கும். கடன் நீங்க மற்றும் நம்மை சுற்றியிருக்கும் எட்டு திசைகளிலும் இருந்தும் வரக்கூடிய அத்தனை பிரச்சனைகளைக் களைய லக்ஷ்மி தந்திரம் எனும் நூல் கூறும் எளிய வழிபாடு என்ன? என்பதை நீங்களும் அறிய தொடங்கி இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

mahalakshmi1

ஒரு மனிதனுக்கு எட்டு திசைகளில் இருந்தும் ஏதாவது ஒரு பிரச்சனை தொடர்ந்து ஒன்று போய் இன்னொன்று என்று வந்து கொண்டே இருந்தால் அவர்களுக்கு மகாலட்சுமியின் அனுகிரகம் தேவை. லக்ஷ்மி வழிபாடு செய்பவர்களுக்கு எத்தகைய துன்பமும் நெருங்குவதில்லை, வந்த துன்பங்களும் தலைதெறிக்க ஓடி விடும்.

- Advertisement -

கடன்கள் நீங்கி, செல்வம் செழிப்பு பெற இந்த எளிய பரிகாரத்தை தொடர்ந்து வீட்டில் மகாலட்சுமிக்கு செய்து வாருங்கள் மேலும் எத்தகைய துன்பம் தரும் கடனும் காணாமல் போக, கோவிலுக்கு இந்த இரண்டு பொருட்களை தானம் செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல பலன்களை பெறுவீர்கள். லக்ஷ்மி தந்திரம் என்னும் ஆன்மீக நூல் கூறும் இந்த அற்புத வழிபாட்டை வேண்டியவர்கள் எளிமையான முறையில் செய்வது அனுகூல பலன் கொடுக்கும்.

vilakku

வீட்டில் மகாலட்சுமி படம் வைத்திருப்பவர்கள் அதற்கு சந்தனம் மற்றும் குங்குமத்தால் பொட்டு வைத்து லக்ஷ்மி தேவிக்கு முன்பு ஐந்து முக குத்து விளக்கு ஒன்றை வைத்து ஐந்து திரிகள் போட்டு தீபம் ஏற்றுங்கள். அதனை சுற்றிலும் எட்டு திசைகளில் இருந்து வரக்கூடிய பிரச்சனைகளைத் தீர்க்க கூடிய வகையில், எட்டு அகல் விளக்குகளை வைத்து நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். தொடர்ந்து இது போல் ஒன்பது வாரங்கள் செய்து வர எந்த விதமான பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தாலும் அவைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.

- Advertisement -

லக்ஷ்மி தந்திரம் எனும் நூலில் லட்சுமி தேவியின் அருள் பெற செய்ய கூடிய பல்வேறு வகையான பரிகாரங்களும் கூறப்பட்டுள்ளன. அப்பரிகாரங்களில் ஒன்றாக எத்தகைய தீராத கடன் பிரச்சினைகளும் தீர்வதற்கு பன்னீர் மற்றும் சந்தன தானம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. பன்னீர் மற்றும் சந்தனம் இரண்டுமே லக்ஷ்மி தேவிக்கு உரிய அம்சங்களாக விளங்குகின்றன. சுவாமி படங்களுக்கு வீட்டில் பன்னீர் மற்றும் சந்தனம் கலந்து பொட்டு வைத்தால் வீடு கோவிலாக மாறிவிடும். அந்த அளவிற்கு சுபீட்சத்தையும், வாசத்தையும் கொடுக்கும் பன்னீர் மற்றும் சந்தன தானம் செய்பவர்களுக்கு எத்தகைய கடன் பிரச்சினைகள் இருந்தாலும் எளிதில் தீரும் என்று நம்பப்படுகிறது.

santhanam

உங்கள் அருகில் இருக்கும் கோவில்களுக்கு சென்று அங்குள்ள அர்ச்சகரிடம் பன்னீர் அல்லது சந்தனம் எது உங்களால் முடியுமோ? அதனை வாங்கி தானம் செய்யுங்கள். நீங்கள் கொடுக்கும் பன்னீர் மற்றும் சந்தனத்தால் மூலவருக்கு அபிஷேகம் செய்யும் பொழுது உங்களை பிடித்த தரித்திரம் எல்லாம் நீங்கி, எல்லா தோஷங்களும் விலகி நன்மைகள் நடைபெறும். லட்சுமி நாராயணர் வழிபாடு செய்வது, குபேர வழிபாடு செய்வது, மகாலட்சுமிக்கு நெல்லிக்கனி, தாமரையை படைத்து வழிபாடு செய்வது போன்ற வழிபாடுகள் நம்முடைய செல்வ செழிப்பை மேலும் அதிகரிக்க செய்யும்.

- Advertisement -