வட்டி கட்டியே வாழ்க்கை முழுவதும் நொந்து கொண்டு இருப்பவர்கள் செம்பருத்தி இலையை மட்டும் வைத்து இப்படி பூஜை செய்தால் போதும். உங்களின் மொத்த கடனும் தீர்த்து விடும்.

vinayakar cash sembaruthi
- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் தான் வாழ கடன் வாங்கி, மறுபடியும் அந்த கடனுக்கு வாழ்நாள் முழுவதும் உழைத்து வட்டி கட்டியே நொந்து போய் விடுகிறான். இந்த மாதிரியான வட்டிக் கடன் தொல்லை என்பது அனைவரும் அனுபவித்து வரும் ஒன்று தான். இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் உள்ள செம்பருத்தி இலை பரிகாரத்தை செய்யும் போது வட்டி கடன் முழுவதுமாக அடைந்து கடன் இல்ல நிம்மதியான வாழ்க்கை வாழ முடியும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு தேவையானது செம்பருத்தி இலையும், விநாயகர் படம், விக்ரகம் அல்லது மஞ்சளால் பிடித்து வைத்த விநாயகர் இவ்வளவு தான். இந்த பரிகாரத்தை செவ்வாய்க் கிழமை அல்லது சதுர்த்தி திதியில் தொடங்கலாம். இதை பரிகாரத்தை 21 செவ்வாய்க் கிழமை தொடர்ந்து செய்ய வேண்டும். இதை செய்ய முடியாதவர்கள் மாதத்தில் இரண்டு சதுர்த்தி வரும் அந்த நாளில் இந்த பரிகாரத்தை தொடங்கலாம். அந்த வகையில் இன்றைய சதுர்த்தி திதியிலும் இந்த பரிகாரத்தை தொடங்கலாம்.

- Advertisement -

கடன் தீர பரிகாரம்:
இப்போது பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை செவ்வாய்க் கிழமை அல்லது சதுர்த்தி இந்த இரண்டு நாளில் எப்போது செய்தாலும் காலை வேளையில் செய்து விடுங்கள். மாலை செய்வதாக இருந்தால் மறுபடியும் ஒரு முறை குளித்த பிறகு செய்யுங்கள். இதற்கு 9,21,54 இந்த எண்ணிக்கையில் செம்பருத்தி இலைகளை உங்களுக்கு எப்படி கிடைத்தாலும் எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் சௌகரியத்தை பொறுத்தது. அதை சுத்தமான துணி வைத்து துடைத்து ஒரு தட்டில் வைத்து பூஜை அறையில் வைத்து விடுங்கள். இதற்கு சில்வர் தட்டை பயன்படுத்த வேண்டாம்.

அடுத்து நீங்கள் பிடித்து வைத்திருக்கும் மஞ்சள் பிள்ளையாராக இருந்தாலும் சரி படம்,விக்ரகம் எதுவாக இருந்தாலும் அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து பூ வைத்து தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது பூஜை அறையில் விநாயகருக்கு முன்பாக அமர்ந்து இந்த செம்பருத்தி இலைகளை கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு இலைகளாலும் விநாயகருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். ஒவ்வொரு இலையை வைத்து அர்ச்சனை செய்யும் பொழுது இந்த ஒரு வரி மந்திரத்தை மட்டும் நீங்கள் ஜெபிக்க வேண்டும்.

- Advertisement -

ஸ்ரீ கணேச ருணம் சிந்தி சிந்தி
என்ற இந்த மந்திரத்தை குறைந்தது 21 முறை சொல்ல வேண்டும். அதற்கு மேலும் எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்லலாம். 21 வாரம் இந்த பரிகாரத்தை செய்து முடித்த பிறகு கடைசி வாரத்தில் விநாயகருக்கு கொழுக்கட்டையை நெய்வேத்தியமாக வைத்து அதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் வீட்டின் அருகில் உள்ள குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்கள்.

நெய்வேத்தியமாக வைத்த கொழுக்கட்டை குழந்தைகளுக்கு தான் கொடுக்க வேண்டும். விநாயகருக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே கொழுக்கட்டைகளை குழந்தைகளுக்கு கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியுடன் உண்டாலே உங்களின் கடன் பிரச்சனைகள் குறைந்து விட்டது என்று நினைத்துக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: இன்று பஞ்சமி திதி! வராஹி அம்மனை நினைத்து இந்த 1 வார்த்தையை சொன்னால் போதும். கண் திருஷ்டியோ, எதிரி தொல்லையோ, ஏவல் பில்லி சூனியமோ, உங்கள் குடும்பத்தை நெருங்காது.

இந்த எளிமையான பரிகாரத்தை சேர்த்து விநாயகரின் அருள் ஆசியுடன் உங்களின் முழு கடனையும் அடைத்து வட்டி கட்ட வேண்டும் என்ற கவலை இல்லாமல், சம்பாதிக்கும் பணத்தை நல்ல முறையில் சேமித்து, நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்வோம்.

- Advertisement -