இன்று பஞ்சமி திதி! வராஹி அம்மனை நினைத்து இந்த 1 வார்த்தையை சொன்னால் போதும். கண் திருஷ்டியோ, எதிரி தொல்லையோ, ஏவல் பில்லி சூனியமோ, உங்கள் குடும்பத்தை நெருங்காது.

Varahi-amman
- Advertisement -

வாராஹி அம்மன் வழிபாடு செய்பவர்கள் அனைவருக்கும் தெரியும். அந்த வாராஹி அம்மன் குழந்தை உள்ளம் படைத்தவள் என்று. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து எந்த ரூபத்தில் ஆவது உதவி செய்யக்கூடிய தாய் தான் அன்னை வாராஹி. வராகி அம்மனுக்கு உகந்த திதி என்றால் அது பஞ்சமி திதி. இன்று மார்ச் மாதம் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பஞ்சமி திதியானது இரவு 8:15 வரை இருக்கிறது. இன்றைய தினம் வாராஹி அம்மனை எந்த முறையில் வழிபாடு செய்தால் கஷ்டங்களில் இருந்து விடுபடலாம் என்பதை பற்றிய சுலபமான ஆன்மீகம் சார்ந்த ஒரு வழிபாட்டு முறையை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இன்று பஞ்சமி திதி வழிபாடு செய்வது எப்படி?
வழக்கம்போல வழிபாடு செய்ய வேண்டும் என்றால் எந்த அளவுக்கு சுத்தபத்தமாக இருப்பீர்களோ, அந்த அளவுக்கு சுத்தபத்தமாக இருந்து கொள்ளுங்கள். வாராகி வழிபாட்டிற்கு உகந்த நேரம் என்றால் அது இரவு நேரம் தான். ஆனால், இன்று இரவு 8:15 மணி வரை தான் பஞ்சமி திதி இருப்பதால், மாலை 6 மணிக்கு நீங்கள் இந்த வழிபாட்டை செய்துவிடலாம்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் வாராஹி அம்மனின் திருவுருவப்படம் இருந்தால் அதை துடைத்து அலங்காரம் செய்து விட்டு விளக்கு ஏற்றி வைத்து வாராகி அம்மனுக்கு உகந்த ஏதாவது ஒரு நெய்வேதியம் செய்து வைத்து வழிபாட்டை தொடங்க வேண்டும். வராகியின் திருவுருவப்படம் இல்லை என்றாலும் வாராகி மனதில் நிறுத்தி இந்த வழிபாட்டை செய்யலாம். சாதாரண வெள்ளிக்கிழமை பூஜை போல. (கிழங்கு வகைகள், மாதுளை பழம், சர்க்கரை பொங்கல், பானகம், கற்கண்டு என்று எதை வேண்டுமென்றாலும் விரும்பி நீங்கள் வாராகி தாய்க்கு நிவேதனம் வைக்கலாம்.)

வராகி அம்மனுக்கு முன்பாக அமர்ந்து குடும்ப கஷ்டங்கள் எல்லாம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வாராகியை மனதார வீட்டிற்குள் அழையுங்கள். மனம் உருகி பிரார்த்தனை செய்யுங்கள். பிறகு வாராகி தாயின் இந்த நாமத்தை சொல்ல வேண்டும். வாராகியின் பல சொரூபத்தில் இந்த ஸ்வரூபமும் ஒன்று. வாராகிக்கு இருக்கக்கூடிய பல பெயர்களில் இந்த பெயரும் உண்டு.

- Advertisement -

‘ஓம் ஆதி வாராஹி தாயே போற்றி போற்றி!’ என்ற இந்த நாமத்தை 108 முறை உச்சரித்தால் அனைத்து விதமான துன்பங்களும் விரட்டி அடைக்கப்படும். இறுதியாக கற்பூர ஆராதனை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுக்கு இருக்கும் தீராத துன்பம் துயரம் என்ற ஒன்று, கட்டாயம் இருக்கும். அந்த ஒரு கஷ்டம் தீர வேண்டும் என்று வாராகித் தாயிடம் மனம் உருகி வேண்டிக் கொள்ள வேண்டும்.

இப்படி மாதம் தோறும் வரக்கூடிய பஞ்சமி திதி அன்று வாராகியை வழிபாடு செய்து உங்கள் மனதில் இருக்கும் கோரிக்கையை வைத்து வந்தால், அது கூடிய சீக்கிரத்தில் நிச்சயம் நிறைவேறும். பல கோரிக்கைகளை ஒன்றாக வைக்க வேண்டாம். ஒரே ஒரு கோரிக்கையை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த கோரிக்கை நிறைவேறிய பின்பு அடுத்த கோரிக்கைக்கு வழிபாட்டை தொடரலாம்.

- Advertisement -

மற்ற படி நீங்கள் வாராகி தாயை மனதார நம்பி வராகி தாயின் பாதங்களில் சரணடைந்து விட்டாலே, உங்களுடைய குடும்பம் தாயின் பாதுகாப்பு வட்டத்திற்குள் வந்துவிடும். எதிரிகள் நினைத்தாலும் உங்கள் குடும்பத்தை வீழ்த்த முடியாது. கண் திருஷ்டியும் உங்கள் குடும்பத்தை எதுவும் செய்யாது.

இதையும் படிக்கலாமே: உங்க வீட்டு படுக்கை அறையில் சுவாமி படம் இருக்குதா? அப்போ நீங்க தான் முதல்ல இதை கட்டாயம் தெரிஞ்சுக்கணும்.

ஏவல் பில்லி சூனியம் போன்ற பெரிய பெரிய கெட்ட சக்திகளாலும் உங்கள் குடும்பத்தை ஆட்டிப் பார்க்க முடியாது. அந்த அளவிற்கு ஒரு பாதுகாப்பு உங்கள் குடும்பத்திற்கு கிடைக்க நிச்சயம் வராஹித்தாய் வழிபாடு கை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் வாராகி தாயை உங்கள் குடும்பத்தில் ஒருவராகவே பாருங்கள். நன்மையே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -