கடன் பிரச்சனை தீர செம்பருத்திப்பூ பரிகாரம்

sembaruthi vinayagar
- Advertisement -

கடனால் கஷ்டப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். பிறரிடம் இருந்து பணத்தை வாங்கிவிட்டு அதை திரும்ப கொடுக்க முடியாமல் வட்டியை மட்டுமே கட்டிக்கொண்டு கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள். அதேசமயம் நம்பி பணத்தை கொடுத்து அதை திரும்ப வாங்க முடியாமல் கஷ்டப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஆக மொத்தம் கடன் என்ற ஒன்று நம் வாழ்வில் இருக்கக்கூடிய நிம்மதியை குறைக்கக்கூடிய ஒன்றாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட கடன் பிரச்சினையை தீக்குவதற்கு விநாயகப் பெருமானுக்கு செம்பருத்தி பூவை வைத்து எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

முழு முதல் கடவுளாக திகழக் கூடியவர் விநாயகப் பெருமானை வழிப்பட்டு விட்டு எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அந்த காரியம் வெற்றி அடையும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அது மட்டுமல்லாமல் திரும்பும் திசை எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் விநாயகப் பெருமானை நம்முடைய வேண்டுதலுக்கு ஏற்ப வழிபடுவதன் மூலம் அந்த வேண்டுதலை அவர் நிறைவேற்றுவார் என்பதும் பலரும் அறிந்த உண்மையே.

- Advertisement -

விநாயகப் பெருமானுக்கு உகந்த பொருட்களை அவருக்கு வைத்து வழிபடுவதன் மூலம் நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் மிகவும் குறிப்பிடத்தக்க பொருளாக திகழ்வதுதான் செம்பருத்தி பூ. அதிலும் குறிப்பாக ஒற்றை சிவப்பு நிற செம்பருத்திப்பூ விநாயகப் பெருமானுக்கு மட்டுமல்லாமல் தெய்வங்கள் அனைவருக்கும் மிகவும் இஷ்டமான பூவாகவே திகழ்கிறது. இந்த பூவை வைத்து நாம் எந்த முறையில் வழிபாடு செய்தால் கடன் பிரச்சனை தீரும் என்று பார்ப்போம்.

வாங்கிய கடனை திருப்பித் தர வேண்டும் என்று நினைப்பவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று செம்பருத்தி பூவே பறித்து அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு விநாயகப் பெருமானுக்கு செம்பருத்தி பூவை வைத்து விட்டு ஒருமுறை சுற்றி வர வேண்டும். பிறகு நம்முடைய வேண்டுதலை விநாயகப் பெருமானிடம் கூறி வழிபட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நாம் வாங்கிய கடனை நம்மால் விரைவிலேயே திரும்ப கொடுப்பதற்குரிய வழிகளை விநாயகப் பெருமாள் அருள்வார்.

- Advertisement -

கொடுத்த பணத்தை திரும்ப வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை அன்று செம்பருத்தி பூவை எடுத்துக்கொண்டு அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று அவருக்கு வைத்துவிட்டு மூன்று முறை அவரை வலம் வந்து பிறகு யார் எவ்வளவு பணம் தர வேண்டும் என்பதை விநாயகப் பெருமானிடம் கூறி மனதார வழிபட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நாம் கொடுத்த பணம் நம்மிடம் விரைவிலேயே திரும்ப வந்து சேரும்.

அப்படி ஏதாவது ஒரு தொகை நம் கைக்கு வந்து விட்டால் உடனே நாம் எந்த விநாயகர் கோவிலில் சென்று வழிபட்டோமோ அந்த கோவிலுக்கு சென்று கையில் ஒரு தேங்காயை வைத்துக் கொண்டு விநாயகப் பெருமானை மூன்று முறை வலம் வந்து இவ்வளவு தொகை வந்துவிட்டது மீதம் இருக்கும் தொகையும் வரவேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு சிதர் தேங்காய் உடைத்து விட்டு வர வேண்டும்.

- Advertisement -

குறிப்பு: இப்படி நாம் எடுத்துச் செல்லும் செம்பருத்திப் பூவின் எண்ணிக்கை 27 இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: பணக்கஷ்டம் தீர ஏற்ற வேண்டிய விளக்கு

மிகவும் எளிமையாக கிடைக்கக்கூடிய செம்பருத்திப் பூவை வைத்து விநாயகரை முழு மனதுடன் நம்பி இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்கள் வாழ்வில் கடன் என்ற பிரச்சனைக்கு இடமே இல்லாமல் போய்விடும்.

- Advertisement -