கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர செய்ய வேண்டிய சித்தர் வழிபாடு

sidder
- Advertisement -

மனிதர்களாக பிறந்தவர்கள் இறைவழிபாடு செய்வது எந்த அளவுக்கு அவசியமோ, அதேபோல சித்தர்கள் வழிபாடும் மிக மிக அவசியம்தான். ஞானிகள், சித்தர்கள், குருமார்கள் இப்படிப்பட்டவர்களை எல்லாம் மறக்காமல் தினமும் நினைத்து வழிபாடு செய்து வருவதன் மூலம் அவர்கள் நம்முடனே வாழ்க்கையில் சேர்ந்து பயணிப்பார்கள் என்பது ஒரு நம்பிக்கை. இறைவழிபாடு முதன்மையானது.

அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. அதேபோல இந்த சித்தர்கள் வழிபாடும் நமக்கு நன்மை தரக்கூடிய வழிபாடாக ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. தொடர்ந்து சித்தர் சமாதிகளுக்கு அல்லது குருமார்களின் சமாதிகளுக்கு சென்று வழிபாடு செய்யக் கூடியவர்களை கேட்டால் அந்த அனுபவம் நிச்சயம் உங்களுக்கு தெரியும்.

- Advertisement -

நீங்களும் தொடர்ந்து வியாழக்கிழமைகளில் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு சித்தர் சமாதிக்கு சென்று வரக்கூடிய வழக்கத்தை கொண்டு வாருங்கள். நிச்சயமாக வாழ்க்கையில் நல்ல மாற்றம் தெரியும். சரி, தீராத கடன் பிரச்சனை, தீராத ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை, மனது சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கிறது எனும் பட்சத்தில் எந்த சித்தரை எந்த நாளில் எப்படி வழிபாடு செய்வது ஆன்மீகம் சார்ந்த தகவல் இந்த பதிவில் உங்களுக்காக.

கடன் பிரச்சனை தீர சித்தர் வழிபாடு

வியாழக்கிழமை இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். பொதுவாகவே சித்தர்கள் வழிபாடு என்றால் அதற்கு உரிய கிழமை வியாழக்கிழமை. வியாழக்கிழமை வீட்டிலேயே விளக்கேற்றி அமர்ந்து குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொண்டு, இந்த சித்தரின் நாமத்தை சொல்ல வேண்டும். ‘ஸ்ரீ போகர் ஐயாவே வர வர ஸ்வாகா’ இந்த ஒரு வரி மந்திரத்தை மனதார 108 முறை சொன்னாலே போதும்.

- Advertisement -

உங்கள் கடன் பிரச்சனையிலிருந்து சீக்கிரம் விடுபட்டு விடலாம். அது மட்டுமல்லாமல் சில பேர் உடல் சார்ந்த பிரச்சனையில் மிகவும் கஷ்டப்பட்டு வருவார்கள். அதாவது ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையில் இருந்தும் விடுபடுவதற்கு இந்த வழிபாட்டை நீங்கள் மேற்கொள்ளலாம். தொடர்ந்து வியாழக்கிழமை போகரை மனதில் நிறுத்தி வழிபாடு செய்து வர அவர் உங்களுடனே வாழ்க்கையில் பயணிக்க தொடங்கி விடுவார்.

இந்த லோகத்தில் மனிதர்களாகப் பிறந்து ஞானிகள் ஆக மாறி, குருமார்களாக சித்தர்கள் ஆக உருவெடுத்து, மறைந்த இந்த மகான்கள் இன்னும் பூலோகத்தில் நடமாடிக் கொண்டிருப்பதாக நமக்கு இந்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சித்தர்களை நம் வாழ்க்கையில் உடன் இணைத்துக் கொண்டால் எந்த சிரமமும் இல்லாமல் இந்த ஜென்மத்தை கடந்து விடலாம்.

- Advertisement -

கடனை அடைக்க எவ்வளவு தான் பெரிய பெரிய பரிகாரங்கள் வழிபாட்டு முறைகளை மேற்கொண்டாலும் கடனை திருப்பித் தருவதற்கு உண்டான முயற்சிகளை நாம் தான் எடுக்க வேண்டும். கைநீட்டி கடன் வாங்கியது நாம் தானே. திருப்பி தர வேண்டிய கடமை நம்மிடத்தில் தான் உள்ளது.

இதையும் படிக்கலாமே: வீடு செல்வ செழிப்புடன் இருக்க இன்று இரவுக்குள் நிலை வாசலில் இதை வைத்தால் போதும்.

அயராது உழைத்து செலவை குறைத்து எப்படியாவது கடனை திருப்பிக் கொடுக்கக்கூடிய வழியை பாருங்கள். கூடவே சேர்த்து மேல் சொன்ன வழிபாட்டினை பின்பற்றும்போது நிச்சயம் பலன் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -