கடன் தீர குபேர மந்திரம்

kuberar manthiram
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் பெருவாழ்வு வாழ்பவர்கள் யார் என்றால் ஒரு ரூபாய் கூட கடன் இல்லாமல் வாழும் மனிதர்கள் என்று உடனே சொல்லி விடலாம். கடன் தீர்க்க முடியாத பெரு வியாதியை போன்றது என்றுமே சொல்லலாம். அந்தக் கடன் பிரச்சனைகளை தீர்க்க ஒவ்வொரு நாளும் மனிதர்கள் படும் போராட்டங்களை சொல்லி மாளாது.

இந்த பிரச்சனையில் இருந்து வெளிவரக் கூடிய எளிய ஒரு மந்திர வழிபாட்டு முறை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

கடன் தீர மந்திர வழிபாடு

பொதுவாக கடன் வாங்குவதற்கு முன்பாக பலமுறை யோசிப்பது தான் கடன் பிரச்சனையிலிருந்து தப்பிக்க எளிய முறை என்றே சொல்லலாம். தேவைக்கு கடன் வாங்குவதாக இருந்தாலும் அதை வாங்கினால் அடைக்க முடியுமா? என்பதை எல்லாம் பலமுறை யோசிக்க வேண்டும்.

கடன் வாங்குவதை தவிர்த்து விடலாம் என்ற சூழ்நிலை வந்தால் யோசிக்காமல் தவிர்த்து இருப்பதைக் கொண்டு வாழ பழக வேண்டும்.சரி எப்படியோ கடன் என்னும் அரக்கனின் பிடியில் நாம் சிக்கி விட்டோம். இப்போது தப்பித்தாக வேண்டும் என்ன செய்வது என்று நினைப்பதும் புரிகிறது. அதற்கான ஒரு வழியை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

கடன் அதிகரிப்பதற்கு நம்முடைய ஜாதகத்தில் நிலைக்கும் நிறைய தொடர்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஒரு ஜாதகத்தில் ஐந்தாம் ஆறாம் நிலை பொறுத்து தான் நம்முடைய கடன் சூழ்நிலை அமையும் என்றும் சொல்லப்படுகிறது.

முதலில் ஜாதகத்தை கணிப்பவர்களிடம் ஜாதகத்தை கொடுத்து ஐந்தாம் ஆறாம் லக்கினத்தில் எந்த கிரகங்கள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின் அவற்றிற்கான வழிமுறைகளையும் வழிபாடுகளையும் சரியாக செய்தால் இந்த கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர முடியும் என்று சொல்லப்படுகிறது அத்துடன் சேர்த்து இந்த ஒரு மந்திர வழிபாட்டையும் தினமும் செய்யுங்கள்.

- Advertisement -

வீட்டில் குபேரர் படத்தை கட்டாயமாக வாங்கி வைத்து விடுங்கள். இந்த படத்தை தினமும் பார்ப்பதே நம்முடைய கடன் தீர்ந்து செல்வம் பெருகுவதற்கான வழியாக கருதப்படுகிறது. தினமும் காலை குளித்து முடித்த பிறகு பூஜை அறையில் தீபம் ஏற்றி குபேரர் படத்திற்கு முன்பாக அமர்ந்து இந்த இரண்டு மந்திரங்களையும் சொல்ல வேண்டும்.

ஓம் குபேராய நமக
ஓம் யக்ஷராஜாய நமக

என்ற இந்த இரண்டு நாமங்களையும் தினமும் 16 முறை காலை மாலை என இரண்டு வேலையும் தவறாது சொல்ல வேண்டும். இந்த மந்திரங்களின் ஒலியானது நம் வீட்டில் கேட்க கேட்க வீட்டில் உள்ள கெட்ட அதிர்வலைகள் மாறி பண வரவுகள் அதிகரிக்கும். அத்துடன் பணம் வருவதற்கான வாய்ப்புகளும் பெருகும்.

பணவரவு அதிகரித்தாலே கடன் இல்லாத வாழ்க்கை வாழலாம். சிலருக்கு பணம் இருந்தும் கடனை கொடுத்து அதிலிருந்து மீள முடியாத சூழ்நிலைகள் இருக்கும். அது போன்ற பிரச்சனைகளையும் கூட இந்த மந்திர வழிபாடு நிவர்த்தி செய்யும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க 48 நாள் பிரம்ம முகூர்த்த வழிபாடு

ஆகையால் கடன் என்னும் பிடியில் சிக்கி தவிப்பார்கள் இந்த ஒரு மந்திர வழிபாட்டு முறையை முறையாக செய்து கடனில்லா பெருவாழ்வு வாழ்லாம். இந்த மந்திர வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -