நினைத்தது நடக்க 48 நாள் பிரம்ம முகூர்த்த வழிபாடு

vilakku1
- Advertisement -

ஒவ்வொரு மனிதனுடைய மனதிலும் நிச்சயமாக நிறைவேறாத ஆசைகள் என்று ஒன்று இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வதற்கு பிரம்ம முகூர்த்தத்தில் செய்ய வேண்டிய பிரார்த்தனை முறையைத்தான் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். ஆனால் எல்லோரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அவரவர் மனதில் இருக்கக்கூடிய ஆசை நியாயமான ஆசையாக இருக்க வேண்டும். நியாயமான கோரிக்கையாக இருக்க வேண்டும். எனக்கு ஒரு கோடி வேணும். நான் அம்பானியாக வேண்டும் என்றெல்லாம் அளவுக்கு மீறி தகுதியையும் தாண்டி ஆசைப்படக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நல்ல வேலை கிடைக்க, கை நிறைய சம்பாதிக்கணும். கடன் இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டும். என் குழந்தைக்கு நல்ல இடத்தில் வரன் அமைய வேண்டும். நோய் நொடி இல்லாத வாழ்க்கை வேண்டும் என்று இப்படி நமக்கு தேவையான வரங்களை மட்டுமே கேட்போம். சரி இப்போது அந்த வழிபாட்டை எப்படி செய்வது, பிரார்த்தனையை எப்படி வைப்பது என்று விரிவாக பார்த்து விடலாம்.

பிரம்ம முகூர்த்த வழிபாடு

பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது அதிகாலை 3:00 மணியிலிருந்து 5:30 மணிக்குள் இந்த வேண்டுதலை வைக்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் 15 லிருந்து 20 நிமிடங்கள் இந்த வேண்டுதலை வைத்தால் போதும். இந்த வேண்டுதலுக்கு நமக்கு முக்கியமாக தேவைப்பட போகும் பொருள் 1 எலுமிச்சம்பழம். இடது உள்ளங்கைக்கு மேலே வலது உள்ளங்கை இருக்க வேண்டும். வலது உள்ளங்கைக்கு மேலே ஒரு எலுமிச்சம் பழம் இருக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி வைத்துக்கொண்டு உங்களுடைய ஒரே ஒரு கோரிக்கை என்னவோ அதை மனதில் நினைத்து இந்த பிரபஞ்சத்திடம், குல தெய்வத்திடம் வேண்டுதல் வையுங்கள். அந்த வேண்டுதல் சீக்கிரம் பலிக்க வேண்டும் என்று பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால், அந்த எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக்கொண்டு ‘இறைவா எனக்கு கை நிறைய சம்பளத்தோடு ஒரு நல்ல வேலையை கொடு’ அப்படி என்று 108 முறை சொல்லுங்கள்.

அவ்வளவுதான். எலுமிச்சம் பழத்தை அப்படியே ஒரு பேப்பரில் வைத்து மடித்து அலமாரியில் வைத்து விட்டு, பிரம்ம முகூர்த்த வேண்டுதலை நிறைவு செய்து கொள்ளுங்கள். வழக்கம்போல உங்களுடைய வேலையை தொடங்குங்கள். இரவு தூங்கும் போது, இந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து உங்களுடைய தலையணைக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பரிகாரத்தை செய்யும் போது நீங்கள் தனியா தான் படுக்கணும். பாய் தலையணை போட்டு படுத்துக்கலாம்.

- Advertisement -

ஆண்கள் பெண்கள் யார் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். தவறு கிடையாது. பெண்கள் மாதவிடாய் நாட்களிலும் இதை செய்யலாம் தவறு கிடையாது. தொடர்ந்து 48 நாட்கள் இதை செய்ய வேண்டும். தினமும் ஒவ்வொரு புது எலுமிச்சம் பழத்தை எடுத்து வேண்டுதல் வைத்து, தலையணைக்கடியில் வைத்து தூங்கி மறுநாள் காலை அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு ஓரமாக வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: சுக்கிரனை வசியம் செய்யும் பரிகாரம்

யார் கைக்கும் எட்டாமல். ஒரு வாரம் ஆகிவிட்டது. ஏழு எலுமிச்சம் பழம் சேர்ந்து விட்டது எனும் பட்சத்தில், அதை அப்படியே கொண்டு போய் கால் படாத இடத்தில் ஊருக்கு ஒதுக்கப்புறமாக போட்டுவிட்டு வாருங்கள். இந்த மாதிரி தினமும் இந்த பரிகாரத்தை செய்துவர, 48 நாட்களில் நீங்கள் கையில் எலுமிச்சம் பழத்தை வைத்து என்ன வேண்டுதல் வைத்தீர்களோ, அது நிச்சயம் நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -