கடல் அளவில் இருக்கும் கடனில் இருந்து கரையேற தேனை இந்த நாளில் வாங்கி வந்து இப்படி செய்தாலே போதும். விரைவில் கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள்.

honey pariharam
- Advertisement -

முன்பெல்லாம் யாராவது கடன் தர மாட்டார்களா என்று தேடித்தேடி அலைந்து கடன் வாங்கி கொண்டு இருந்தோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் நம்மை தேடி நாம் கேட்காமலேயே நாங்கள் கடன் தருகிறோம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று பலரும் வந்து நம்மை கடன் வாங்க தூண்டுகிறார்கள். இவ்வாறு தூண்டும் பொழுது நாம் விடாப்பிடியாக கடன் வாங்காமல் இருந்து விட்டால் அதிலிருந்து தப்பித்து விடுவோம். ஆனால் அந்த நேரத்தில் நமக்கு ஏற்படக்கூடிய ஏதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலையால் அவர்களிடம் கடனை வாங்கி விட்டோம் என்றால் அதோடு நம் வாழ்வின் நிலையே மாறிவிடும்‌. அப்படி வாங்கிய கடனை நாம் திருப்பித் தருவதற்குரிய எளிய பரிகாரமாக தேனை வைத்து எப்படி பரிகாரம் செய்தால் கடன் சுமையிலிருந்து மீள முடியும் என்று இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒருமுறை கடன் வாங்க ஆரம்பித்து அதை வெற்றிகரமாக கட்டி விட்டோம் என்றால் நம்மை அறியாமலேயே நமக்கு ஒரு வித தைரியம் பிறந்து அடிக்கடி கடன் வாங்கி விடுவோம். சிலரோ வாங்கிய கடனை திருப்பிக் கொடுப்பதற்காகவே திரும்பவும் பல பேரிடம் கடன் வாங்கி கடனிலேயே மூழ்கி விடுவார்கள். கடன் என்ற பெரிய கடலில் இருந்து கரை சேர்வது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. இந்த கடன் என்ற கடலில் இருந்து கரை சேர்வதற்கு சில பரிகாரங்கள் நமக்கு உதவி செய்கின்றன. அவற்றில் ஒன்றே தான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

சுவாதி நட்சத்திரம் வரும் நாள் அன்று அருகில் இருக்கும் கடைக்கு சென்று இரண்டு தேன் பாட்டில்களை வாங்கி வர வேண்டும். இந்த இரண்டில் ஒன்றை வீட்டு சமையல் அறையில் வைக்க வேண்டும். மற்றொன்றை பூஜை அறையில் வைக்க வேண்டும். இவ்வாறு பூஜை அறையில் வைத்த தேன் பாட்டிலுக்கு நாம் அன்றாடம் பூஜை செய்யும் பொழுது ஊதுபத்தி, கற்பூரம் காட்டி வழிபட வேண்டும்.

யார் கடன் பெற்றிருக்கிறார்களோ அவர்களுடைய ஜென்ம நட்சத்திரத்தில் இருந்து 27வது நட்சத்திரம் வரும் நாளன்று பூஜை அறையில் இருக்கும் தேன் பாட்டிலை அருகில் இருக்கும் சிவாலயத்தில் அபிஷேகத்திற்காக வழங்க வேண்டும். சமையலறையில் இருக்கும் தேனை நாம் சாப்பிட உபயோகப்படுத்திக் கொள்ளலாம். ஒரு வீட்டில் கண்டிப்பான முறையில் தேன் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் கடன் பிரச்சனை என்பதே வராது.

- Advertisement -

இவ்வாறு நாம் ஒவ்வொரு ஸ்வாதி நட்சத்திர நாளன்றும் தேனை வாங்கி வந்து வழிபட்டு அபிஷேகத்திற்காக வழங்கும் பொழுது நம்முடைய கடன் சுமை என்பது படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் நீங்கள் தொலைத்த எதுவாக இருந்தாலும் அதை மீண்டும் திரும்ப பெற இந்த தெய்வத்தை வழிபட்டாலே போதும். உங்கள் வாழ்க்கையே தொலைந்து போய் இருந்தாலும் அதை மீட்டு கொடுத்து விடுவார்.

நீச்சல் தெரியாமல் தத்தளிக்கும் நபருக்கு ஒரு சிறிய மரக்கட்டை உதவி செய்யுமோ அது போல் கடனில் இருந்து வெளியில் வருவதற்கு இந்த பரிகாரம் நமக்கு உதவி செய்து சிறிது சிறிதாக கடனில் இருந்து நாம் வெளிவருவோம்.

- Advertisement -