27 செவ்வாய்க்கிழமை இதை செய்தால் ஆயிசுக்கும் கடன் இல்லாத வாழ்க்கையை வாழலாம். திருப்பிக் கொடுக்க முடியாத கடனை எல்லாம் கூட வட்டியோடு திருப்பிக் கொடுத்து விடுவீர்கள்.

murugan-vilakku
- Advertisement -

கடன் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும். இந்த சந்தோஷத்தை, இந்த உலகத்தில் வாழும் ஒரு மனிதர்கள் கூட தற்போது அனுபவிப்பது கிடையாது. கடன் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்று யாருக்குமே தெரியாது. ஏனென்றால் அவரவர் தகுதிக்கு ஏற்ப அவரவருக்கு கடன் இருக்கத்தான் செய்கிறது. கடன் நிம்மதியை கெடுக்கும். கடன் சந்தோஷத்தை கெடுக்கும். கடன் கஷ்டத்தை கொடுக்கும் என்று தெரிந்தும் அந்த தவறை நாம் செய்கின்றோம். என்ன செய்வது கலியுகத்தில் கடன் இல்லாத வாழ்க்கையை வாழ முடியாது என்பது விதி போல. இந்த கடன் தொல்லையில் இருந்து எப்படித்தான் வெளிவருவது. கடன் இல்லாத வாழ்க்கையை எப்படி வாழ்வது. ஆன்மீகம் சார்ந்த எளிமையான ஒரு பரிகாரம் இதோ உங்களுக்காக.

தொழிலில் முன்னேற, வருமானம் அதிகரிக்க, கடன் பிரச்சனை தீர, இழந்த செல்வங்களை எல்லாம் திரும்பவும் மீட்டெடுக்க, திருச்செந்தூர் முருகப் பெருமானின் பாதங்களை பற்றிக் கொண்டாலே போதும். எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு கிடைத்துவிடும். உங்களுக்கு தீராத பண கஷ்டம் இருந்தால் கஷ்டத்தோடு கஷ்டமாக கொஞ்சம் கடன் வாங்கியாவது நேராக திருச்செந்தூர் சென்று அந்த சமுத்திரத்தில் நீராடி, திருச்செந்தூர் முருகப்பெருமானை வணங்கி கஷ்டங்கள் தீர வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து கொண்டு வாருங்கள்.

- Advertisement -

திருச்செந்தூர் மண்ணை மிதித்து விட்டு வந்தாலே கஷ்டங்கள் நம்மை விட்டு விலகி விடும். மனிதராக பிறந்த ஒவ்வொருவரும் ஒரே ஒரு முறையாவது வாழ்நாளில் திருச்செந்தூர் முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டாலே போதும் மோட்சம் கிட்டும்.

கடன் தீர திருச்செந்தூர் முருகன் வழிபாடு:
சரி, கடன் தீர திருச்செந்தூர் முருகப்பெருமானை எப்படி வழிபாடு செய்ய வேண்டும். 27 செவ்வாய் கிழமைகள் இந்த வழிபாட்டை விடாமல் மேற்கொள்ள வேண்டும். வழிபாட்டிற்கு முக்கியமான பூ செவ்வரளிப்பு, பூக்களை வாங்கி உங்கள் கையாலேயே கட்டி செவ்வாய்க்கிழமை முருகனுக்கு மாலையாக போட வேண்டும். இந்த பூஜைக்கு உங்கள் வீட்டு பூஜை அறையில் திருச்செந்தூரின் முருகரின் திரு உருவப்படம் கட்டாயம் இருக்க வேண்டும்.

- Advertisement -

திருச்செந்தூர் முருகன் திருவுருவ படத்திற்கு செவ்வரளி பூ மாலை போட்டு, ஒரு மண் அகல் விளக்கில் நெய்திபம் ஏற்றி ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை 108 முறை சொல்லி உங்கள் கடன் சுமை குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.

27 செவ்வாய்க்கிழமையில் இடையில் ஒரு வாரம் கூட வழிபாட்டை நிறுத்தக்கூடாது. வீட்டு பெண்களால் இந்த வழிபாட்டை மேற்கொள்ள முடியவில்லை என்றால் கூட வீட்டில் இருக்கும் மற்றவர்களை இந்த பூஜை செய்ய சொல்லலாம். (வேறு வழியே இல்லை. வீட்டில் பூஜை செய்ய வேறு யாரும் சரி பட்டு வர மாட்டார்கள், எனும் பட்சத்தில் அந்த மாதவிடாய் வரக்கூடிய வாரத்தை மட்டும் தவிர்த்து விட்டு அடுத்த வாரத்தில் இருந்து பூஜையை தொடரலாம்.) 27 வாரம் பூஜை நிறைவடைந்த பின்பு நடக்கக்கூடிய அதிசயத்தை நீங்களே பாருங்கள். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் நீங்கள் கடன் இல்லாத வாழ்க்கையை நிச்சயம் வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே: பொங்கலுக்கு வாங்கிய மஞ்சள் கிழங்கில் இருந்து ஒரு துண்டை மட்டும் எடுத்து, வீட்டில் இந்த மூலையில் வையுங்கள். பொங்கல் அன்று வீட்டில் பொங்கிய சந்தோஷம் வருடம் முழுவதும் குடும்பத்தில் இருக்கும்.

இப்படி தொடர்ந்து திருச்செந்தூர் முருகர் வழிபாட்டை மேற்கொள்ளும் போது நம்முடைய குடும்பத்தில் இழந்த சந்தோஷத்தையும் மீட்டெடுத்து நிறைவான வாழ்க்கையை வாழலாம். முருகர் பாதங்களை பற்றி கொண்ட எந்த ஒரு பக்தனும் கைவிடப்பட்டது இல்லை என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -