இந்த படம் உங்கள் வீட்டிற்குள் வந்து விட்டால் கொடுத்த பணம் வீடு தேடி வருவதுடன், கை நீட்டி வாங்கிய கடனை யும் விரைவில் அடைத்து குபேர சம்பத்துடன் வாழ்வீர்கள்.

- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை நிச்சயம் இருக்கும் அதில் முதலாவதாக நம்முடைய குலதெய்வம், இஷ்ட தெய்வம் விநாயகர் போன்ற தெய்வங்களை வைத்து வழிபடுவது நம்முடைய வழக்கம். இதை தவிர்த்து வேறு சில படங்களையும் வைத்திருப்பார்கள். ஆனால் பூஜை அறையில் முக்கியமான ஒரு படத்தை வைப்பதன் மூலம் பணம் தொடர்பான உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன என்பதை மேற்கொண்டு இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கொடுத்த பணம் வாங்கிய கடன் அடைக்க வழிபாடு
காணும் இடமெல்லாம் நீக்க மற நிறைந்திருக்கும் தெய்வம் யாரெனில் அது விநாயகப் பெருமான் தான். இதில் எந்த வித மாற்றமும் இல்லை. வீதிக்கு வீதி அமர்ந்து பக்தர்களை அவரே தேடி வந்து அருள் பாலிப்பவர் என்றும் இவரை சொல்லலாம். அப்படியான விநாயகரில் அதில் சக்தி வாய்ந்தவராக விளங்குபவர் தோரண கணபதி. கடன் தீரவும், கொடுத்த பணத்தை திரும்பப் பெறவும் நல்ல செல்வ வளத்துடன் வாழவும் இந்த தோரண கணபதியை எப்படி வணங்குவது என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

முதலில் தோரண கணபதி புகைப்படத்தை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு முன் இருந்தால் அந்தப் படத்தையே சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அவருக்கு மலர்கள் சாற்றி வழிபடலாம். இல்லை என்றால் நிச்சயமாக இந்த வழிபாட்டிற்கு ஒரு படத்தை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த தோரண கணபதி வழிபாடு தொடங்க முதல் நாள் வெள்ளிக்கிழமையாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அன்று இவருடைய படத்துக்கு பூ போட்டு தீபாராதனை காட்டி எளிமையாக பூஜை செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு அதை தொடர்ந்து வரும் ஆறு ஞாயிற்றுக்கிழமையும் இவரை தவறாமல் வழிப்பட வேண்டும்.

அதற்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை காலையில் குளித்து முடித்த பிறகு உங்கள் பூஜை அறையில் இருக்கும் இந்த தோரண கணபதிக்கு இரண்டு அகல் விளக்ககில் நெய் ஊற்றி விளக்கு ஏற்றுக் கொள்ளுங்கள். அதன் பிறகு இவருக்கு பழங்களை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும். அதற்கு மாதுளை, ஆப்பிள், மா, திராட்சை, ஆரஞ்சு இந்த ஐந்து பழங்களை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை ஆறு வாரமும் தொடர்ந்து செய்ய வேண்டும் இடையில் ஒரு வாரம் கூட தவற கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு அந்த மாதவிலக்கு சமயங்கள் இதில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. அதன் பிறகு அவர்கள் தொடர்ந்து தீப வழிபாடு செய்து கொள்ளலாம். உங்கள் வீட்டில் அருகில் தோரண கணபதி ஆலயம் இருந்தாலும் அல்லது வேறு கோவிலில் தனியாக இவர் வீற்றிருந்தாலோ அங்கு சென்று வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த தீபம் ஏற்றும் கிழமைகளில் அசைவத்தை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: எந்த கெட்ட சக்தியும் உங்கள் வீட்டிற்குள் நுழையாமல் தெய்வ சக்தி தானாக தேடி வந்து வீடு சுபிட்சமாக நிலைவாசலில் இந்த மூன்று பொருளை ஒன்றாக சேர்த்து கட்டி விடுங்கள்.

இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது தோரண கணபதியின் பரிபூரண அருள் கிடைத்து பணம் தொடர்பான உங்களின் பல பிரச்சனைகள் தீர்த்து விடும். தோரணம் என்றாலே நல்ல தோரணையுடன் மிடுக்காக இருப்பது தான். இவரை வழிபடும் போது நம்மையும் அது போல அனைவர் முன்பும் நல்ல தோரணையுடன் வாழ வைப்பார். இந்த நம்பிக்கையுடன் இந்த தீப வழிபாட்டை செய்து உங்களின் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -