எந்த கெட்ட சக்தியும் உங்கள் வீட்டிற்குள் நுழையாமல் தெய்வ சக்தி தானாக தேடி வந்து வீடு சுபிட்சமாக நிலைவாசலில் இந்த மூன்று பொருளை ஒன்றாக சேர்த்து கட்டி விடுங்கள்.

mari-amman-vasal-kathavu
- Advertisement -

ஒவ்வொரு வீட்டிலும் அதி முக்கியத்துவம் வாய்ந்தது நிலை வாசல் தான். நிலை வாசல் சரியான முறையில் அமைந்திருந்தாலே பிரச்சனைகள் நம்மை நெருங்காது. ஆகையால் தான் வீட்டிற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு முக்கியத்துவம் நிலை வாசலை வைக்கும் பொழுதும் அதற்கு நவதானியங்கள் நவ மணிகள் என அனைத்தையும் சேர்த்து வைத்து இதை ஒரு பெரிய பூஜையாகவே செய்து வருகிறோம். அத்தகைய நிலை வாசலை தாண்டித் தான் நம் வீட்டினுள் நல்லதும் கெட்டதும் வரும். அந்த நிலை வாசலில் நாம் ஒரு சில பொருள்களை கட்டி வைத்தால் வீட்டிற்குள் தீயது வராமல் நல்லது மட்டுமே வரும் என்று சொல்லப்படுகிறது. அதைப் பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கெட்ட சக்தி வீட்டிற்குள் நுழையாமல் இருக்க நிலை வாசல் பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையானது ஒரு பச்சை நிற துணி அது ஒரு கட்சீப் போல கட்டமாக இருக்க வேண்டும். இதற்கு காட்டன் பட்டு துணி என உங்களிடம் எது இருக்கிறதோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து மூன்று துண்டு வசம்பு, மூன்று துண்டு வேப்பங்கட்டை, மூன்று சிறிய துண்டு படிகாரம் இவைகளையெல்லாம் ஒரு தட்டில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் பிரம்ம முகூர்த்த வேலையில் தான் செய்ய வேண்டும். ஆகையால் முதல் நாளே இதையெல்லாம் வாங்கி தயாராக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த நாள் காலையில் எழுந்து குளித்து முடித்த பிறகு முதலில் உங்கள் வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி உங்கள் குலதெய்வம், இஷ்ட தெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு நீங்கள் தயாராக வைத்திருக்கும் தட்டை சுவாமி படத்திற்கு முன்பாக வைத்து வசம்பு கட்டை வேப்பங்கட்டை பரிகாரம் மூன்றையும் ஒன்றாக அந்த பச்சை துணியில் வைத்து பச்சை நிற நூலல் இறுக்கமாக கட்டி விடுங்கள். இப்போது இந்த முடிச்சை உங்கள் வீட்டில் நிலை வாசலுக்கு கொண்டு வாருங்கள். நிலைவாசலில் இரண்டு புறமும் மண் அகல் எடுத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி நிலை வாசலில் வைத்து தீபம் ஏற்றி வழிபட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

நிலை வாசலை வணங்கும் போது இந்த முடிச்சை நிலை வாசலில் கட்டுவதற்கான அனுமதியும் இதன் பிறகு எந்த கெட்டதும் வராமல் நல்லவை தெய்வ சக்தி அனைத்தும் எங்கள் வீடு தேடி வந்து நாங்கள் சுபிட்சமாக வாழ வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்ட பிறகு இந்த முடிச்சை உங்கள் நிலை வாசலில் கட்டி விடுங்கள். இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்வது மட்டும் தான் முக்கியம்.

இந்த முடிச்சில் சேர்த்திருக்கும் பொருட்கள் அனைத்துமே தீய சக்தியை நம்மிடம் இருந்து விரட்டி அடிக்க கூடிய தன்மை உடையவை. வசம்பும் சிறுபிள்ளையிலிருந்து கெட்டவை நம்மிடம் நெருங்காமல் இருக்க நம் முன்னோர்கள் பயன்படுத்துவது, அதே போலத் தான் வேம்பும் தீயவற்றை அழித்து தெய்வ சக்தியை வீட்டிற்குள் கொண்டு வரும் அற்புதமான சக்தி. அடுத்து படிகாரம் இது பணவரவையும் ஏற்படுத்தும், தெய்வ சக்தியும் கொண்டு வரும், தீயதையும் அண்ட விடாமல் தடுக்கும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் பூஜை செய்பவரா நீங்கள்? அப்படி என்றால் இந்த குறிப்புகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பூஜையின் முழு பலனையும் விரைவில் பெற்று மகிழ்வீர்கள்.

இவை அனைத்தும் சேர்த்து கட்டி இருக்கும் போது உங்கள் வீடும் நீங்களும் நல்ல சுபிட்சமாக இருப்பீர்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்யலாம் என்ற கருத்துடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -