கடன் தீர எளிய பரிகாரம்

uppu pariharam
- Advertisement -

கடனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த கடனை திருப்பி அடைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும் சூழ்நிலை இன்றைய காலத்தில் வந்துவிட்டது. வட்டிக்காக கடன் வாங்கி வட்டியை கட்டியே தன்னுடைய காலத்தை கடந்த பலரும் இருக்கிறார்கள். சமுதாயத்தில் நல்ல நிலையில் இருப்பவராக இருந்தாலும் கடன் வாங்கி விட்டால் அந்த கடனால் மிகப்பெரிய அவமானத்திற்கு ஆளாக வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். கடன் நம்முடைய வாழ்க்கையில் வந்துவிட்டால் நம்மிடமிருந்து இருக்கக்கூடிய அனைத்து விதமான நன்மைகளும் சென்று விடும். அப்படிப்பட்ட கடன் பிரச்சினை தீர செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவருடைய வாழ்க்கையில் கடன் ஏற்படுவதற்கு காரணம் அவருடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு பணவரவு இல்லாதது மட்டும்தான். பணவரவை தருவதற்குரிய அற்புதமான கடவுளாக திகழ்பவர் மகாலட்சுமி தாயார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். அதனால் கடன் சுமையை தீர்ப்பதற்கு மகாலட்சுமி தாயாரின் அருள் நமக்கு வேண்டும். அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளைப் பெற வேண்டும் என்றால் மகாலட்சுமி தாயாருக்கு பிடித்தமான செயல்களை நாம் செய்ய வேண்டும். இந்த பதிவில் மிகவும் எளிமையான ஒரு பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருள்தான் மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் உகந்த பொருளான கல் உப்பு. ஒரு பரிகாரத்தை நாம் செய்வதற்கு தேவையான பொருட்கள் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவிற்கு அந்த பரிகாரத்தை எந்த நாளில் நாம் செய்கிறோம் எந்த நேரத்தில் செய்கிறோம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. பொதுவாக ஒருவர் கடன் வாங்குகிறார் என்றால் அவருடைய மனநிலை சீராக இருக்காது இந்த மனநிலையை சீர் செய்வதற்கு நமக்கு சந்திர பகவானின் அருள் என்பது வேண்டும்.

மேலும் சனிபகவானின் ஆதிக்கம் பெற்றவர்கள் கண்டிப்பான முறையில் கடன் வாங்கும் நிலைக்கு ஆளாவார்கள் என்பதால் சனிபகவானின் அருளை பெற்றாலும் நாம் கடன் பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். இந்த எளிமையான தாத்ரியத்தை உள்ளடக்கிய ஒரு பரிகாரமாக தான் இந்த பரிகாரம் திகழப் போகிறது. சந்திர பகவானுக்குரிய கிழமையான திங்கட்கிழமை அன்று சனி ஹோரை வரும் அந்த நேரத்திலும், சனிபகவானுக்குரிய கிழமையான சனிக்கிழமை அன்று சந்திர ஹோரை வரும் அந்த நேரத்தையும் நாம் இந்த பரிகாரம் செய்வதற்காக பயன்படுத்திக் கொண்டோம் என்றால் கண்டிப்பான முறையில் நம்முடைய கடன் பிரச்சனை தீரும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நீர் நிலைகள் இருக்கும் இடத்தில் தான் செய்ய வேண்டும். வேறு எங்கும் செய்யக்கூடாது. மாதத்திற்கு ஒருமுறை மட்டும் செய்தால் போதும் மாதத்தின் முதல் திங்கட்கிழமையோ அல்லது முதல் சனிக்கிழமையோ நாம் இந்த பரிகாரத்தை செய்தோம் என்றால் அடுத்த மாதமும் அதே நாளில் தான் செய்ய வேண்டும். அதாவது மாதத்தின் முதல் திங்கள் கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்தால் அடுத்த மாதமும் முதல் திங்கள் கிழமை அன்று தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

புதிதாக கல்லுப்பை வாங்கிக் கொள்ளுங்கள். அருகில் இருக்கக்கூடிய நீர் நிலைக்கு செல்ல வேண்டும். இவ்வாறு நீர் நிலைக்கு அருகில் சென்ற பிறகு ஒவ்வொரு கையிலும் தனித்தனியாக கல்லுப்பை நிறைய அளவு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மனதார உங்களுடைய கடன் பிரச்சனை அனைத்தும் தீர வேண்டும் என்றும் இந்த உப்பு எப்படி கரைகிறதோ அதே போல் என்னுடைய கடன் பிரச்சனையும் கரைய வேண்டும் என்றும் மனதார வேண்டிக் கொண்டு அந்த நீர் நிலையை உப்பை கரைத்து விட வேண்டும்.

- Advertisement -

அவ்வளவுதான் பரிகாரம். இப்படி நாம் மாதத்திற்கு ஒருமுறை மட்டுமாவது இந்த பரிகாரத்தை செய்து வந்தோம் என்றால் கண்டிப்பான முறையில் எவ்வளவு பெரிய கடன் சுமையாக இருந்தாலும் அது படிப்படியாக குறையும். அந்த கடன் சுமை குறைவதற்குரிய வருமானமும் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: எளிமையான அஷ்டலட்சுமி வழிபாடு

மிகவும் எளிமையான இந்த கல்லுப்பு பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்து கடனற்ற நிம்மதியான வாழ்க்கையை வாழலாம்.

- Advertisement -