கடன் என்ற வார்த்தை கூட உங்களை நெருங்காதிருக்க இன்று வளர்பிறை பஞ்சமி திதியில் வாராகி அம்மனுக்கு இந்த முடிச்சை கட்டி வைத்து விடுங்கள். துயரங்களை தூர துரத்தும் சக்தி வாய்ந்த வழிபாடு

varahi-cash
- Advertisement -

சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தெய்வம். இந்த வாராகி அம்மன் உருவத்தில் மாறுபட்டு இருந்தாலும் இவரின் உள்ளம் தாயுள்ளத்தை விடவே மேலானது. துயர் என்று தன் முன் வந்து நிற்பவர்கள் வேண்டி முடிப்பதற்குள்ளாகவே அவரின் துயரை காணாமல் செய்து விடக் கூடிய அற்புதமான தெய்வம் என்றால் அது வாராகி அம்மன் தான். இப்போது இந்த வாராகி அம்மனை நினைத்து பஞ்சமி திதியில் நாம் செய்யும் ஒரு வழிபாடு நம்முடைய துயர் அனைத்தையும் நீக்கி விடும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது அது என்ன வழிபாடு என்பதை குறித்து இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

துன்பம் தீர கடன் அடைய வாராகி அம்மன் வழிபாடு
பிரச்சனை இல்லாத மனிதர்களே இன்று கிடையாது ஆனால் ஒரு சிலர் வாழ்க்கையில் பிரச்சனையைத் தவிர வேறு ஒன்றுமே இருக்காது. நினைத்த காரியம் ஒன்று கூட நடக்காது. தொடர்ந்து பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சனையாக வந்து கொண்டே இருக்கும். கடன் தொல்லை என எந்த வகையிலும் நிம்மதி இல்லாமல் இருப்பார்கள். அப்படியானவர்கள் இன்றைய தினத்தில் இந்த ஒரு சிறிய மூட்டையை கட்டி வாராகி அம்மனுக்கு வைத்து வழிபடும் போது அவை அனைத்தும் நிவர்த்தி ஆகும் என்று சொல்லப்படுகிறது. அது எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இன்று வளர்பிறை பஞ்சமி திதி இந்த நாள் வாராகி அம்மனுக்கு மிக மிக உகந்த நாள். இந்த நாளில் அவரை வணங்கும் போது நமக்கு அதற்கான பலன் பல மடங்கு கிடைக்கும். இன்றைய தினத்தில் இவரை நினைத்து இந்த ஒரு முடிச்சை கட்டி வைக்க வேண்டும். இதற்கு வீட்டில் வாராகி அம்மன் படத்தை வைத்து வழிபடுபவர்கள் அங்கு வைத்துக் கொள்ளலாம். அல்லது ஒரே ஒரு அகல் விளக்கை தனியாக வாராகி அம்மனுக்காக ஏற்றி அந்த தீபத்தையே தாயாக நினைத்து அங்கும் இதை செய்யலாம்.

இவருக்கு நெய்வேத்தியமாக கிழங்கு வகைகளை படைக்கலாம். அல்லது கற்கண்டு சேர்த்து பாலை மட்டும் கூட நன்றாக காய்ச்சி வைத்து வழிபடலாம். அதே போல் இவருக்கு சிகப்பு நிறம் உள்ள பூக்கள் மிகவும் பிடிக்கும் எனவே செம்பருத்தி, செவ்வரளி போன்ற மலர்களால் இவர்களுக்கு மாலை தொடுத்து போடலாம் நீங்கள் வெறும் விளக்கு வைத்து ஏற்றும் போது விளக்கின் அருகில் பூவை வைத்து விடுங்கள்.

- Advertisement -

இந்த முடிச்சு கட்ட முதலில் ஒரு பச்சை நிற சிறிய துணி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 3 ஏலக்காய் , 3 கிராம்பு, 3 மிளகு, 1 விரலி மஞ்சள், 1வசம்பு என அனைத்தையும் வைத்த பிறகு பச்சை நிற நூலால் இந்த முடிச்சை கட்டி விடுங்கள். இந்த முடிச்சை கட்டும் போது உங்களுடைய எந்த துயரம் தீர வேண்டுமோ அதை நினைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

இப்படி வேண்டிய பிறகு தாயாரிடம் உங்கள் கோரிக்கையை சொல்லி கண்ணீர் மல்க வேண்டி அவரின் படத்தின் அருகே இந்த மூட்டையை வைத்து விடுங்கள். இவையெல்லாம் செய்த பிறகு உங்கள் வீட்டின் அருகில் வாராகி அம்மன் கோவில் இருந்தால் அங்கு சென்று ஒரு முறை வணங்கி விட்டு வாருங்கள். இந்த வழிபாடை ஒரே ஒரு முறை நீங்கள் செய்தாலே போதும். உங்கள் வாழ்க்கையில் துன்பம் என்ற வார்த்தைக்கு இனி இடமே இருக்காது.

இதையும் படிக்கலாமே: குலத்தை காக்கும் குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதை செய்யுங்க குலதெய்வமே உங்களுக்கு அருள் கொடுப்பார்!

கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து துயர் தீர்க்கும் வாராகி தாயாரை நினைத்து இந்த ஒரு வழிபாடு செய்து நம் வாழ்வில் இருக்கும் அனைத்து துன்பங்கள் துயரங்கள் கடன் பிரச்சனைகள் நீங்க நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -