வாங்கி வச்ச கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்க ஒரே ஒரு வசம்பு இருந்தால் போதும். கழுத்தை நெரிக்கும் கடனும் காணாமல் போகும்.

vasambu
- Advertisement -

நமக்கான நேரம் சரியாக இருந்துவிட்டால், எந்த பிரச்சினையில் இருந்தும் சுலபமாக தப்பித்துக் கொள்ளலாம். அதுவே நேரம் கொஞ்சம் கெட்ட நேரமாக மாறும்போது, கோபுரத்தில் இருப்பவர்கள் கூட கீழே இறங்கி வந்து தான் ஆக வேண்டும்‌. இப்படி திடீரென்று பணப் பிரச்சனை, கடன் சுமையில் சிக்கிக் கொண்டவர்கள், செய்ய வேண்டிய ஒரு தாந்திரீக பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த பரிகாரம் உங்களை உடனடியாக பண பிரச்சனையிலிருந்து காப்பாற்றும், கடன் சுமையை குறைக்கும் எளிமையான பரிகாரம். இந்த பரிகாரத்திற்கு நமக்கு வசம்பு மட்டும் இருந்தால் போதும்.

கடன் தீர வசம்பு பரிகாரம்:
வசம்பு ஒரு மகத்துவமான வசிய தன்மை கொண்ட பொருள் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். இதற்கு மருத்துவ குணமும் அதிகம். மகத்துவ குணமும் அதிகம். வசம்பை வைத்து நீங்கள் என்ன வரம் கேட்டாலும் அந்த வரம் உடனடியாக வசியமாகும். வசம்பை வைத்து எந்த கடவுளை கூப்பிட்டு வழிபாடு செய்தாலும், அந்த கடவுள் உடனே வசியமாகி நம்முடைய வேண்டுதலுக்கு செவி சாய்ப்பார்.

- Advertisement -

இப்போது உங்களுக்கு பண பிரச்சனையா. உடனடியாக பதிவை படித்த உடனேயே கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். இதற்கு நேரம் காலம், நாள் நட்சத்திரம் எதுவுமே தேவையில்லை. நீங்கள் சுத்தபத்தமாக குளித்து இருக்க வேண்டும். வீடு சுத்த பத்தமாக இருக்க வேண்டும். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, ஒரு வெள்ளை காகிதத்தில் நீங்கள் யாரிடம் கடன் வாங்கி இருக்கிறீர்கள், அவருடைய பெயர், எவ்வளவு தொகையை வாங்கி இருக்கிறீர்கள், அந்த தொகையை எழுதி, அந்த கடனை சீக்கிரமாக திருப்பி தர வேண்டும் என்று எழுதி, அதன் நடுவே ஒரு வசம்பை வைத்து மடித்து அப்படியே பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.

11 நாட்கள் இந்த பேப்பரும் வசம்பும் அப்படியே இருக்கட்டும். 11வது நாள் முழுமையாக முடியட்டும். 12ஆவது நாள் காலை எழுந்து இந்த பேப்பரை எடுங்கள். வசம்பையும் எடுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் எரிகின்ற நெருப்பில் போட்டு பொசுக்கி விடுங்கள். கொட்டாங்குச்சியில் கற்பூரம் ஏற்றி போட்டு நெருப்பு மூட்டி இந்த இரண்டு பொருட்களையும் போட்டால் அது சுலபமாக எரிந்து சாம்பல் ஆகிவிடும். இந்த சாம்பலை எடுத்து தண்ணீரில் கரைத்து கால் படாத இடத்தில் மண்ணில் கொட்டி விடலாம் அவ்வளவுதான்.

- Advertisement -

உங்களுக்கு பாரமாக இருந்த பண கஷ்டத்திற்கு அந்த பதினோரு நாட்களில் விடிவு காலம் பிறப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லை என்றால் இதை நெருப்பில் பொசுக்கி தண்ணீரில் கரைத்தவுடன் கஷ்டங்களும் கரைந்து போவதற்கு வாய்ப்பு உள்ளது. இரண்டுமே சரியாகவில்லை. என்ன செய்வது. 11 நாட்களில் சரியாக கூடிய பிரச்சனையாக இருந்தால், நிச்சயம் அது சரியாகும்.

உங்களுடைய கடன் தொகை ரொம்பவும் அதிகமாக இருக்கிறது என்றால், மீண்டும் இப்படி ஒரு பேப்பரில் எழுதி வசம்பை வைத்து மடித்து, பூஜை அறையில் வையுங்கள். மீண்டும் 11 நாட்கள் கழித்து அதை எறியுங்கள். இப்படி தொடர்ந்து ஐந்து முறை செய்து வர நிச்சயமாக கடன் பிரச்சனை தீர்வதற்கு ஏதாவது ஒரு ரூபத்தில், ஏதாவது ஒரு வழியை இந்த பிரபஞ்சம் காட்டிக் கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: தொடர் வறுமையில் உள்ள குடும்பப்பெண்கள் இந்த வகை வளையலை அணிந்துவந்தால் போதும், வறுமையானது விலகி மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும்.

தாந்திரீக பரிகாரம் என்று சொன்னாலும், இந்த பரிகாரத்தை குலதெய்வத்தை வேண்டி தான் நீங்கள் செய்ய வேண்டும். குலதெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்கும்போது தான் பரிகாரம் உங்களுக்கு இரட்டிப்பு பலனை தரும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்து பலன் பெரலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -