தொடர் வறுமையில் உள்ள குடும்பப்பெண்கள் இந்த வகை வளையலை அணிந்துவந்தால் போதும், வறுமையானது விலகி மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும்.

Lakshmi valayal
- Advertisement -

சில வீடுகளில் துரதிஷ்டமானது எப்போதும் நிலைத்திருக்கும். எந்த தொழில் செய்தாலும் நஷ்டம் ஏற்படுவது அல்லது லாபம் இல்லாமல் இருப்பது, செய்யும் வேலைக்கு ஏற்ப வருவாய் இல்லாமல் இருப்பது, தேவையற்ற செலவுகள் ஏற்படுவது, இப்படி ஏதோ ஒரு வகையில் துன்பமானது இருந்து கொண்டே இருக்கும்.

இந்த துன்பங்களை போக்கக்கூடிய சக்தி கடவுளுக்கு மட்டுமே இருக்கிறது என்பதை தாண்டி அந்த வீட்டில் வசிக்கும் பெண்களிடமும் அந்த சக்தி இருக்கிறது என்பதுதான் உண்மை. பெண்களுக்கு பொதுவாக ஆடை ஆபரணங்கள் மீது இயற்கையாகவே அளப்பரிய பிரியம் உண்டு. அவர்கள் அணியும் ஆபரணங்கள் மூலம் கூட குடும்பத்தின் நிலையை மாற்ற முடியும் என்பது தான் ஆன்மீக ரீதியான உண்மை.

- Advertisement -

பெண்கள் பொதுவாகவே தங்கள் கைகளில் வளையல்களையும் காலில் கொலுசையும் அணிந்து கொள்வது உண்டு. இவை இரண்டிற்கும் மிகப்பெரிய மகத்துவம் இருக்கிறது என்பதுதான் உண்மை. பெண்கள் தங்கள் கையில் அணியும் வளையல்கள் அந்த வீட்டில் மிகப்பெரிய ஒரு நல்ல அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். அதே சமயம் ஒரு குறிப்பிட்ட வகை வளையல் அந்த வீட்டின் நிதி நிலையையே மாற்றக்கூடிய சக்தி வாய்ந்ததாகவும் இருக்கிறது. அப்படியான ஒரு வகை வளையல் தான் சங்கு வளையல்.

சங்கு வளையல் என்பது மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாக இருக்கிறது. இந்த வகையான வளையல்களை பெண்கள் அணிந்து ஒரு தொழிலை துவங்கி வைக்க குத்துவிளக்கு ஏற்றும் பொழுது அந்தத் தொழிலானது மிகப்பெரிய ஒரு லாபம் நிறைந்த தொழிலாக மாறும். அதே போல பெண்களிடம் ஆசிர்வாதம் வாங்கும் பொழுது அந்த வளையலை அணிந்து கொண்டிருக்கும் பெண்கள் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தும்போது அந்த வாழ்த்தை பெற்றவர்கள் நல்ல செல்வ செழிப்போடு நன்றாக வாழக்கூடியதான ஒரு நிலை ஏற்படும்.

- Advertisement -

இதே போல வறுமையில் வாழக்கூடிய வீட்டில் பெண்கள் இந்த சங்கு வளையலை அணிந்து கொண்டு தினமும் அரிசி பானையிலிருந்து அரிசியை எடுக்கும் பொழுது அந்தப் பானையில் அரிசி வற்றாமல் சேர்ந்து கொண்டே இருக்கும், அதற்கேற்றார் போல தொழில் அமைந்து வருமானம் பெருகிக்கொண்டே இருக்கும் என்பது தான் இதில் இருக்கும் ரகசிய உண்மை.

நாம் ஏற்கனவே கூறியது போல இந்த சங்கு வளையல் என்பது மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியதாக இருந்தாலும் இது குபேரர் மற்றும் விஷ்ணுவின் அம்சம் நிறைந்ததாகவும் இருக்கிறது. ஆகையால் குபேர சம்பத்துக்களுடன் நீடூடி வாழ இந்த சங்கு வளையலை பயன்படுத்தலாம்.

இதையும் படிக்கலாமே:வீட்டில் பூஜை செய்யும் பொழுது கண்டிப்பாக ஏதாவது நைவேத்தியம் செய்யணுமா? நைவேத்தியம் செய்வதின் பின்னணியில் இருக்கும் தத்துவம் என்ன?

தொடர் பணகஷ்டத்தில் உள்ளவர்கள் அல்லது தொடர் துன்பத்தில் உள்ளவர்களின் குடும்பப் பெண்கள் இந்த சங்கு வலைகளை அணிந்து வர துன்பமானது படிப்படியாக தூர விலகும், பணமானது படிப்படியாக சேரும் ஆகையால் இதை முயற்சித்துப் பாருங்கள் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -