வேண்டிய வரங்களை தரும் பங்குனி உத்திரம்

panguni uththiram
- Advertisement -

முருகப்பெருமானுக்கு உகந்த தினங்களாக சில தினங்கள் கருதப்படுகின்றன. அந்த தினத்தில் முருகப்பெருமானை நாம் வழிபடும் பொழுது நமக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தினங்களில் ஒன்றாக கருதப்படுவது தான் பங்குனி உத்திரம். பொதுவாக பங்குனி உத்திரத்தன்று முருகப் பெருமானை தான் வழிபட வேண்டும் என்று இல்லை.

அன்றைய தினம் எந்த தெய்வத்தை நாம் வழிபட்டாலும் நமக்கு அபரிவிதமான பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் அன்றைய தினத்தில் பல ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெறும். இந்த பங்குனி உத்திரமானது பங்குனி மாதம் வரக்கூடிய உத்திர நட்சத்திரத்தன்று அனுஷ்டிக்க கூடிய வழிபாடாக கருதப்படுகிறது. மேலும் அன்றைய தினம் பௌர்ணமியும் சேர்ந்து வரும் என்பதால் அது கூடுதல் பலனை தரும்.

- Advertisement -

பங்குனி உத்திரமானது இந்த வருடம் ஞாயிற்றுக்கிழமையும், திங்கட்கிழமையும் அதாவது 20 மார்ச் 24ஆம் தேதியும் மார்ச் 25ஆம் தேதியும் சேர்ந்து வருகிறது. அருகில் இருக்கக்கூடிய ஆலயங்களில் எந்த நாளில் இந்த பங்குனி உத்திர திருவிழா நடைபெறுகிறது என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்றவாறு செயல்படுவது மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கும். பல சிறப்புகள் மிகுந்த பங்குனி உத்திர நாளன்று முருகப்பெருமானுக்கு எந்த பொருளை வாங்கி கொடுத்தால் நம் வாழ்வில் நன்மைகள் நம்மை தேடி வரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக ஒவ்வொரு விசேஷமான நாட்களிலும் ஒரு சில பொருட்களை நாம் வாங்கி தருவதன் மூலம் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். அபிஷேகத்திற்காக இருந்தாலும் சரி பிரசாதமாக இருந்தாலும் சரி வேறு ஏதாவது பொருட்களை தானமாக தருவதாக இருந்தாலும் சரி. அந்த வகையில் பங்குனி உத்திர நாள் அன்று வீட்டிலும் சில பொருட்களை வாங்கி வைத்து வழிபட நமக்கு பல அற்புதமான பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

பங்குனி உத்திர நாளன்று இரண்டு விரலி மஞ்சள் வாங்கி வைத்து வழிபாடு செய்ய வீட்டில் இருக்கக்கூடிய சுபகாரிய தடைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. இதே போல் முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்தமான வெல்லத்தை வாங்கி வைத்து வழிபட்டுவிட்டு அதில் ஏதாவது ஒரு பிரசாதத்தை செய்து அவருக்கு வைக்க பண வரவு என்பது அதிகரிக்கும். செல்வ செழிப்பு மேலோங்கும்.

திங்கட்கிழமையும் பௌர்ணமியும் பங்குனி உத்திரமும் சேர்ந்து வரும் அந்த நேரத்தில் அதாவது திங்கட்கிழமை விடியற்காலையில் கடையிலிருந்து பச்சரிசியை வாங்கி வந்து வீட்டில் வைத்து வழிபட அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். இதேபோல் விபூதியை வாங்கி வந்து வைத்து வழிபட சகல ஐஸ்வர்யமும் கிடைக்கும்.

- Advertisement -

இதைவிட மிகவும் முக்கியமான ஒரு பொருளாக கருதப்படுவது தான் தாமரைப்பூ. ஆறு தாமரை பூக்களை வாங்கி அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று அவருக்கு நாம் கொடுக்க அவர் மனம் மகிழ்ந்து நாம் வேண்டிய வரத்தை நமக்கு அருள்வார். கண்டிப்பான முறையில் கோவிலில் இருக்கக்கூடிய முருகப்பெருமானுக்கு தான் இந்த மலர்களை தர வேண்டும். ஆறு என்ற எண்ணிக்கையில் தான் தர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி கெட்ட சக்தி விலக அம்பாள் வழிபாடு

இந்த பொருட்களை முழு நம்பிக்கையுடன் வாங்கி வைத்து வழிபாடு செய்ய முருகனின் அருளால் நாம் வேண்டிய வரத்தை நம்மால் பெற முடியும்.

- Advertisement -