சாமி கும்பிடனும், கோவிலுக்கு போகணும் என்றாலே ஏதாவது ஒரு தடை வருதா? சாமி கும்பிடாமல் உங்களை தடுத்து நிறுத்தும் அந்த அமானுஷ்ய சக்தியை உடம்பிலிருந்து வெளியேற்ற நீங்கள் கட்டாயம் இதை பண்ணனும்.

pillaiyar-prayer
- Advertisement -

சில பேருக்கு, வீட்டில் மங்களகரமாக எந்த ஒரு வேலையுமே செய்யவே முடியாது. கடந்து வந்த ஒரு சில நாட்களில் வீட்டில் சுப காரியத்தடை இருக்கும். அதை சரி செய்யலாம், சாமி கும்பிடலாம் என்றால், அந்த இறை வழிபாட்டையும் தடுக்கும் அளவிற்கு ஏதாவது அசுபகாரியங்கள் ஏற்பட்டு விடும். பங்காளிகள் இறந்திருப்பார்கள், அல்லது வேறு ஏதாவது தீட்டு பிரச்சனை வந்து வழிபாடு செய்வதை நிறுத்தி விடும்.

சில பேர் பூஜை செய்ய, ஹொமம் நடத்த, குலதெய்வ கோவிலுக்கு செல்ல அல்லது மற்ற ஏதாவது பரிகாரம் செய்ய, பரிகார கோவில்களுக்கு செல்ல, முயற்சி எடுப்பார்கள். அந்த முயற்சிகளிலும் தடை வந்து கொண்டே இருக்கும். சில பேர் சாமி கும்பிடலாம் என்று பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, கண்ணை மூடி இரு கைகளை கூப்பி, சாமி கும்பிடும்போது கொட்டாவி வரும். தூக்கம் வரும்.

- Advertisement -

இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் வந்து தொல்லை கொடுக்கும். இதற்கெல்லாம் என்ன காரணமாக இருக்கும். கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி நம்மை சாமி கும்பிட விடாமல் தடுக்கிறது. அதை சரி செய்ய என்ன செய்வது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு தான் இது.

சாமி கும்பிடுவதில் இருக்கும் தடை விலக பரிகாரம்:
அமானுஷ்ய சக்தி என்று சொன்னதுமே பேய் பிசாசாக இருக்குமோ என்று பயந்து விட வேண்டாம். கண்ணுக்குத் தெரியாமல் நம்மை சுற்றி இருக்கும் ஏதோ ஒரு கெட்ட சக்தி தான் சாமி கும்பிட விடாமல் தடுக்கிறது. இதை எளிமையாக சரி செய்ய ஒரு பரிகாரம் இருக்கிறது. இதற்கு நமக்கு பசுஞ்சாணத்தால் செய்யப்பட்ட வறட்டி தேவை. பசும்பால், பசுநெய் இந்த மூன்று பொருட்கள் தேவை.

- Advertisement -

பசு சாணம் கிடைத்தால் அதை லேசாக தட்டி வெயிலில் காய வைத்து வறட்டி கூட செய்து கொள்ளலாம் நம் வீட்டிலேயே. பசு வறட்டி மேலே, பசு நெய், பசும்பால் ஊற்றி அதன் மேலே ஒரு கற்பூரம் ஏற்றி நெருப்பில் அந்த வரட்டியை சாம்பலாக்கி விடுங்கள். அந்த சாம்பல் சூடு ஆறியதும் சேகரித்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். 48 நாட்களுக்கு ஒவ்வொரு ஸ்பூன் வீதம் நமக்கு தேவைப்படும். ஒரு மண்டலம் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

தினமும் குளிக்கின்ற தண்ணீரில் இந்த ஒரு ஸ்பூன், நாம் தயார் செய்து வைத்திருக்கும் பொடியை போட்டு கலந்து அப்படியே குளித்து விட வேண்டும். ஆனால் 48 நாள் ஐயப்பனுக்கு விரதம் இருப்பது போல நீங்கள் இந்த தண்ணீரை தலைக்கு ஊற்றித் தான் குளிக்க வேண்டும். எப்போதும் போல சோப்பு போட்டு உடம்புக்கு குளித்து கொள்ளுங்கள். ஷாம்பு போட்டு தலைக்கு குளித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: பெண்கள் முகத்தில் இருக்கும் தரித்திரம் நீங்கி, வசீகரத் தோட்டத்தையும், முக அழகையும், பௌர்ணமி நிலவு போல பெறுவதற்கு இந்த தண்ணீரில் குளித்தாலே போதும்.

இறுதியாக கால் பக்கெட் தண்ணீரில் இந்த பொடியை போட்டு கலந்து வெறுமனே தலைக்கு குளித்துவிட்டு அப்படியே வந்து விட வேண்டும். தொடர்ந்து இப்படி செய்தால் வழிபாட்டில் இருக்கும் தடையை இந்த பிரபஞ்சம் உடைத்து விடும். உங்கள் உடம்பில் இருக்கும் தரித்திரம் விலகிவிடும். பிறகு சாமி கும்பிடுவதற்கு இடையூறாக எந்த ஒரு தடைகளும் வரவே வராது. மன நிம்மதியோடு எந்த சங்கடங்களும் இல்லாமல் வீட்டில் பூஜை புணஸ்காரங்கள் செய்யலாம். கோவில் குளங்களுக்கு சென்று வரலாம். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -