கடன் தொல்லை நீங்க செல்ல வேண்டிய ஆலயம்

sivan cash
- Advertisement -

இந்த கடன் என்பது அனைவருக்கும் கடன் தொல்லை என்பது தீராத தொல்லையாகும். எவ்வளவு கட்டினாலும் கடன் குறையவில்லை என்று பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகுவர். எனவே கடன் தொல்லை நீங்கி மனம் புத்துணர்ச்சியுடன் கடன் இல்லாத வாழ்வில் குடும்பத்திற்கு மட்டும் சம்பாரித்து, செலவு செய்ய பரிகாரங்கள் மற்றும் கோவில்களும் பல உள்ளன.இதில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு ஸ்தளத்தை பற்றி தான் இன்று இந்த ஆன்மீகம் பற்றிய தொகுப்பில் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள உள்ளோம்.

கடன் தீர ஆலய தரிசனம்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருசேறை எனும் ஊரில் அமைந்துள்ள அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் தான் கடன் தொல்லை தீர அனைவரும் ஒரே நம்பிக்கையாக நாடும் திருக்கோயில். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் உள்ள லிங்கம் சுயம்பாக உருவாக்கப்பட்டது என அந்த ஊர் பொதுமக்களால் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்தக் கோவிலில் அமைந்துள்ள இறைவியானவள் அனைத்து ஞானத்தையும் வழங்கும் ஞானாம்பிகை ஆவாள் . இந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறந்த சக்தி வாய்ந்த ரின விமோசன லிங்கமானது மார்க்கண்டேய முனிவரால் பிரதிஷ்டை செய்து சக்தி வாய்ந்த முறையில் இந்த கோவிலில் அமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சக்தி மற்றும் சிறப்பு வாய்ந்த லிங்கமே வரும் பக்தர்களின் வேண்டுதலைக்கு உகந்து அவர்களின் துன்பமான கடன் தொல்லையிலிருந்து விடுபட மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் அதிசயம் வாங்க பல விஷயங்கள் உள்ளன. அதில் சில இந்த ஆலயத்தில் தலவிருட்சமாக மாவிலங்கை என்னும் மரம் இருக்கிறது.

- Advertisement -

அதுமட்டுமின்றி இந்த கோவிலில் எங்கேயும் காண முடியாத அளவிற்கு ஸ்ரீ சிவ துர்க்கை,ஸ்ரீ வைஷ்ணவ துர்க்கை, ஸ்ரீ விஷ்ணு துர்க்கை ஆகிய மூவரும் ஒன்றாக சேர்ந்து அருள் பாவிக்கிறார்கள்.

இந்த ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வந்தால் மட்டும் கடன் தொல்லை தீராது. அதை தொடர்ந்து மூன்று வாரம் சாரபரமேஸ்வரர் உருவப் படத்திற்கு நம்மளால் முடிந்த அளவிற்கு பூஜை செய்து நமது கடன், பாரம் அனைத்தையும் அவரிடம் கொட்டி அவரை முழுமனதுடன் நம்பி கடன் தொல்லை அனைத்தும் தீர்ந்து விடும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் வழிபட வேண்டும்.

- Advertisement -

இந்த முறையில் பூஜை செய்து வரும் போது நாம் நம்புவதற்கு ஏற்றவாறு சாரபரமேஸ்வரர் நமது துன்பம் கடன் ஆகிய அனைத்து கடினங்களையும் நீக்கி வாழ்வில் மகிழ்ச்சியூட்டுவார். இத்தகைய சிறப்பு வாய்ந்த சாரபரமேஸ்வரராள் பலரும் கடன் தொல்லை நீங்கி நல்ல நிலையுடன், அவரின் முழு அருளுடன் வாழ்ந்தனர் என்று நம்பிக்கையுடன் சொல்லபடுகிறது.

இதையும் படிக்கலாமே: தீய சக்திகளை அழிக்கும் அஷ்டபைரவர் வழிபாடு

அதுமட்டுமல்லாமல் இன்றும் பலர் அவரை முழு மனதுடன் நம்பி நல்ல நிலையை அடைந்துள்ளனர். எனவே முழு ஆற்றலுடன் நாமும் அதை நம்பி ஒருமுறை அவரை நாடி சென்று வாழ்வில் வெற்றி காணுவோம்.

- Advertisement -