அரச மரத்தடியில் இந்த விளக்கை ஏற்றி வைத்தால், அசுர வேகத்தில் உங்கள் கடன் குறையும். அசுர வேகத்தில் உங்கள் கையில் பணம் சேர தொடங்கிவிடும்.

arasa-maram-vinayagar
- Advertisement -

தீராத கடன் தீருவதற்கு ஆன்மீகம் சார்ந்த ஒரு எளிய வழிபாட்டு முறையைத்தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். அதற்கு முன்பு தீராத கடனில் சிக்கி கொள்வதற்கு என்ன காரணம் என்பதை பற்றிய சில பொதுப்படையான விஷயங்களையும் முதலில் தெரிந்து கொள்வோம். பொதுவாகவே கடன் பிரச்சனையில் சிக்கி இருப்பவர்கள் எல்லோரும் இந்த வார்த்தையை சொல்லுவார்கள். ‘என்னுடைய கெட்ட நேரம், நான் இந்த கடன் பிரச்சனையில் சிக்கிக்கொண்டேன். என்னால் இப்போது வாங்கிய கடனை திருப்பித் தர முடியவில்லை. கடன் பிரச்சனை கழுத்தை நிற்கிறது.’ என்று பழியை ஜாதக கட்டத்தில் மீது போட்டு விடுவார்கள். எல்லா சூழ்நிலையிலும் நாம் கிரகங்களை குறை சொல்லி விட முடியாது.

கிரகங்களால் மட்டும் தான் நமக்கு கடன் பிரச்சினை வருகிறதா. கர்ம வினையால் மட்டும்தான் நமக்கு கடன் பிரச்சினை வருகிறதா. இல்லை. நம்முடைய கவனக்குறைவு, நம்முடைய பேராசையின் மூலமாகவும் கடன் பிரச்சனை வரும். நம்முடைய ஜாதகத்தை கொண்டு போய் ஜோதிடரிடம் காண்பித்திருப்போம். அவர் சொல்லுவார் இந்த நேரத்தில் நீங்கள் கடன் வாங்கலாம். இந்த நேரத்தில் கடன் வாங்கி வீடு கட்டலாம் என்று. உடனே நாம் என்ன செய்வோம். இஷ்டத்துக்கு கடனை வாங்கி தொழில் செய்வோம் அல்லது வீட்டையும் கட்டுவோம். ஆனால் நாம் கைநீட்டி வாங்கக்கூடிய கடன் நம் தகுதிக்கு உரியதா என்பதை பார்ப்பதே கிடையாது.

- Advertisement -

இந்த நேரத்தில் கடன் வாங்கி வீடு கட்டலாம் என்று தான் ஜோதிடர் சொல்லி இருப்பார். ஆனால் நம்முடைய தகுதிக்கு எவ்வளவு பட்ஜெட்டில் வீடு கட்ட வேண்டும் என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும். அதை விடுத்து ஒரு பெரிய பங்களாவை கட்டுவதற்கு கடன் வாங்கி விட்டால், நமக்கு வரும் வருமானத்தில் அதற்கான இஎம்ஐ தொகையை கட்ட முடியுமா என்று நிறைய பேர் சிந்திப்பதே கிடையாது. இதனால் தான் தீராத கடன் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். ஆகவே சிந்தித்து செயல்படுங்கள். கடன் பிரச்சனையில் மூழ்கி போக மாட்டீர்கள்.

கடன் பிரச்சனை தீர அரச மர தீப வழிபாடு
சரி, இப்போது பரிகாரத்திற்கு வருவோம். எங்கேயாவது அரசமரம் இருக்கக்கூடிய இடமாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அரச மரத்தடியில் பிள்ளையார் இருந்தாலும் இந்த விளக்கை ஏற்றலாம். பிள்ளையார் இல்லை என்றாலும் இந்த விளக்கை ஏற்றலாம். ஆறு அரச இலைகளை எடுத்து வரிசையில் வைத்து, அந்த இலைகளுக்கு மேலே கிழக்கு பார்த்தவாறு, ஆறு மண் அகல் விளக்குகளை வைத்து, நல்லெண்ணெய் ஊற்றி, இரண்டு டைமண்ட் கல்கண்டு போட்டு, திரி போட்டு விலக்கு ஏற்றி வைத்துவிட்டு, அந்த அரச மரத்தை 27 முறை சுற்றி வந்து மனதார உங்களுடைய கடன் பிரச்சனை தீர வேண்டும். வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

வாரம் தோறும் வரக்கூடிய வெள்ளிக்கிழமை அன்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் சனிக்கிழமை அன்றும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். இது தவிர வேறு மற்ற கிழமைகளில் உங்களால் இந்த பரிகாரத்தை செய்ய முடியும் என்றாலும் தாராளமாக செய்யலாம். தவறு கிடையாது. (கஷ்டங்கள் தீரும் வரை பரிகாரம் செய்ய வேண்டும் இத்தனை வாரம் என்ற கணக்கெல்லாம் கிடையாது.)

இதையும் படிக்கலாமே: நீங்க இப்ப வாங்குற சம்பளம் அப்படியே டபுள் ஆயிடும். பசு மாட்டிற்கு தவறாமல் இந்த 1 பொருளை மட்டும் உங்கள் கையால் சாப்பிட கொடுத்துக் கொண்டே வாருங்கள்.

சூரிய உதயத்திற்கு முன்பு இந்த விளக்கை அரச மரத்துக்கு அடியில் ஏற்றி வைத்து, அரச மரத்தை வலம் வந்திருக்க வேண்டும். அதிகபட்சம் காலை 6:30 மணிக்கு முன்பு இந்த வழிபாட்டை முடித்திருக்க வேண்டும். அரச மரத்தை வளம் வந்துவிட்டு, அந்த இடத்தில் பத்து நிமிடம் அமர்ந்து மனதை அமைதிப்படுத்தி உங்கள் பிரச்சனையை எல்லாம் இந்த பிரபஞ்சத்திடம் சொல்லி, அந்த பிரச்சனை சரியாக வரங்களை கேட்டால் நீங்கள் கேட்ட வரமும், வேண்டுதலும் உடனே பலிக்கும் என்பது நம்பிக்கை.

- Advertisement -