கோடிக்கணக்கில் கடன் இருந்தாலும் அதை கொஞ்ச நாளில் திருப்பித் தர கோதுமை பரிகாரம்.

kulam
- Advertisement -

நிறைய பேருக்கு கடன் பிரச்சனையால் இன்று நிம்மதி இல்லாத வாழ்க்கை நிலவி வருகிறது. கடன் பிரச்சனையை தீர்க்க நிறைய பரிகாரங்கள் ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், சில பரிகாரங்களை சில பேர் செய்யலாம். சில பரிகாரங்களை சில பேரால் செய்ய முடியாமல் போகலாம். அந்த வரிசையில் கடன் தீர்க்கும் ஒரு பரிகாரத்தை இன்று நாம் பார்க்கப் போகின்றோம்.

இந்த பரிகாரத்தை செய்ய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்தால் தவறவிடாமல் செய்து பாருங்கள். உங்களை நிம்மதியாக வாழ விடாமல் பிரச்சனைக்கு உள்ளாக்கும் கடன் பிரச்சனையிலிருந்து கூட சீக்கிரம் வெளி வர வாய்ப்புகள் கிடைக்கும். கடன் தீர்க்கும் கோதுமை பரிகாரம் செய்வது எப்படி ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

கடன் தீர்க்கும் கோதுமை பரிகாரம்

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமை அன்று செய்ய வேண்டும். காலையில் எழுந்து சுத்த பத்தமாக குளித்து விடுங்கள். அரைத்த கோதுமை மாவு தான் தேவை. ஆசீர்வாத் ஆட்டமாவை எல்லாம் இதற்கு பயன்படுத்தக் கூடாது. கோதுமை வாங்கி ரைஸ்மிலில் கொடுத்து அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

அந்த கோதுமை மாவில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி பிசைந்து சின்ன சின்ன கோலிகுண்டு சைஸில் உருண்டைகளாக பிசைந்து கொள்ள வேண்டும். 108 உருண்டைகள் இப்படி தயார் செய்து கொள்ளுங்கள். உங்கள் மனதிற்குள் உங்கள் கடன் பிரச்சனை தீர வேண்டும் என்ற வேண்டுதலை ஆழ்மனதில் வைத்து குல தெய்வத்தை நினைத்து இந்த உருண்டைகளை தயார் செய்து கொள்ளவும்.

- Advertisement -

குளம் இருக்கும் கோவில்தான் நிச்சயம் நமக்கு இந்த பரிகாரம் செய்ய தேவை. குளம் இருக்கும் கோவிலாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அந்த குளத்தில் நிச்சயம் மீன் இருக்கும். முதலில் அந்த கோவிலுக்கு சென்று அந்த கோவிலில் இருக்கும் இறைவனை வழிபாடு செய்யுங்கள். அப்போது ஒரு டப்பாவில் இந்த கோதுமை உருண்டைகள் உங்கள் கையில் இருக்க வேண்டும்.

கோவிலை மூன்று முறை வலம் வருங்கள். பிறகு நமஸ்காரம் செய்து கொண்டு ‘இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் என் கடன் பிரச்சனை எல்லாம் தீர வேண்டும்’ என்று பிரார்த்தனையும் வைத்துவிட்டு நேராக அந்த கோவில் குளத்தங்கரைக்கு வந்து இந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து குளத்தில் போட வேண்டும். ஜாக்கிரதை உடன் குழந்தைகளை அழைத்துச் சென்றால் கவனம் தேவை.

- Advertisement -

இந்த கோதுமை உருண்டைகளை மொத்தமாக கொட்ட கூடாது. ஒவ்வொன்றாக தான் உங்கள் கையில் எடுத்து குளத்தில் போட வேண்டும். ஒவ்வொரு உருண்டைகளை போடும்போதும் ‘ஓம் ஹ்ரீம் நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லி அந்த உருண்டைகளை மீனுக்கு போட வேண்டும். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்யும் போதே உங்கள் பணப்பிரச்சனைக்கு ஒரு விடிவு காலம் பிறக்கும்.

இதையும் படிக்கலாமே: சுக்கிரன் அருள் பெற்று பணவரவை அதிகரிக்க பரிகாரம்

உங்கள் பண பிரச்சினை ரொம்பவும் பெருசு. கைக்கு பணம் வந்து கடனை திருப்பித் தருவதில் நிறைய சிக்கல் இருக்கிறது என்றால் தொடர்ந்து மூன்று வாரம் ஞாயிற்றுக்கிழமை, 5 வாரம் ஞாயிற்றுக்கிழமை கூட இந்த பரிகாரத்தை செய்யலாம். பரிகாரம் செய்ய செய்ய பண சிக்கல்கள் படிப்படியாக குறையும். உங்கள் கடன் பிரச்சனை தீரும் என்பது நம்பிக்கை. ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டில் நம்பிக்கை இருந்தால் மட்டும் பின்பற்றி பலன் பெறுங்கள்.

- Advertisement -