எப்படியாவது கடன் அடைந்துவிட வேண்டும் என்று நினைப்பவர்கள் சனிக்கிழமைகளில் இந்த எண்ணெயில் தீபம் போட்டு பாருங்கள், எத்தகைய கடனும் உடனே தீரும்.

cash-deepam-vilakku
- Advertisement -

கடன் பிரச்சனை என்பது எல்லா பிரச்சனைகளை விடவும் நம்மை மனதளவில் மிகுந்த சோர்வை ஏற்படுத்தும். எப்படியாவது கடனை கட்டி விடுவோம் என்கிற நம்பிக்கையில் தான் ஒவ்வொருவரும் கடனை வாங்குகிறார்கள். ஆனால் ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் அந்த கடனை கட்ட முடியாமல் தவிக்கும் நேரங்களில் எல்லாம் நிம்மதியான தூக்கம் கூட பலருக்கும் வருவது இல்லை. எப்படியாவது கடனை அடைத்துவிட வேண்டும் என்று போராடுபவர்கள் சனிக்கிழமைகளில் இந்த எண்ணெயில் தீபம் போட்டால் நிச்சயம் உங்கள் பிரச்சனைகள் தீரும் என்கிறது சாஸ்திரம். அது என்ன எண்ணெய்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

el deepam

பொதுவாகவே சனிக்கிழமைகளில் தீபம் ஏற்றுபவர்கள் பல்வேறு தோஷங்களிலிருந்து நிவர்த்தி பெறுகிறார்கள். சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய் தீபம், எள் தீபம் போன்றவற்றை கோவில்களில் போடும் பொழுது சனி தோஷம் நீங்கி நன்மைகளை பெறலாம். அது போல நமக்கு இருக்கும் தோஷங்கள் எல்லாம் நீங்க மற்றும் கடன் பிரச்சனைகள் தீர இந்த எண்ணெய்க்கு அதீத ஆற்றல் உண்டு. கடுகு விதையில் இருந்து எடுக்கப்படும் இந்த கடுகு எண்ணெய் ஆன்மீக ரீதியாக பல்வேறு நன்மைகளை பயக்கக் கூடியது.

- Advertisement -

கடுகு எண்ணெய் சனிக்கிழமைகளில் நல்லெண்ணெயுடன் சேர்த்து உச்சந்தலையில் தடவி தலைக்கு குளித்தால் நம்மைப் பிடித்திருக்கும் பீடைகள் அனைத்தும் விலகும். பித்து பிடித்தவர் போல் இருப்பது, சதா எதையாவது சிந்தித்துக் கொண்டே நிகழ் கால வாழ்க்கையை தொலைத்து கொண்டிருப்பது போன்றவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். தொடர்ந்து இதனை செய்து வர மெல்லமெல்ல அவர்களிடம் நல்ல மாற்றங்கள் தெரியும்.

kadugu 4-compressed

அத்தகைய அதீத சக்தியுள்ள இந்த கடுகு எண்ணெய் கொண்டு சனிக்கிழமைகளில் தீபம் ஏற்ற தீராத எத்தகைய கடனும் விரைவில் தீர்வதாக ஐதீகம் உண்டு. கடுகு எண்ணெய் செவ்வாய் கிரகத்திற்கு உகந்த எண்ணெய் என்று கூறப்படுகிறது. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாயினால் பாதிக்கப்படுபவர்கள் சனிக்கிழமைகளில் அல்லது செவ்வாய்க் கிழமைகளில் கடுகு எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வரலாம். இந்த தீபத்தை கோவிலுக்கு சென்று ஏற்றினாலும் வீட்டிலிருந்து ஏற்றினாலும் சரிதான்.

- Advertisement -

கோவிலுக்கு சென்று அங்கு உள்ள நவக்கிரக சன்னதியில் கடுகு எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வர சனி பகவானுடைய அருளும், செவ்வாய் பகவான் அருளும் கிடைக்கும். கடுகு எண்ணெயை உணவில் கூட பயன்படுத்துவது உண்டு. ஆனால் எல்லாருக்கும் அந்த எண்ணெய் ஒத்துப் போவது இல்லை. சிலருக்கு உணவில் அலர்ஜி ஏற்பட வாய்ப்புகள் உண்டு. எனவே உங்களுக்கு ஏற்றுக் கொள்கிறதா? இல்லையா? என்பதை கவனித்து பின் அதனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இந்த எண்ணெயை உணவில் சேர்ப்பதன் மூலமும் நம்முடைய கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீரும்.

கடுகில் போலேட்ஸ், நியாசின், தயாமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின் ஆகிய விட்டமின்களும், ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 போன்ற அமிலங்களும், தாதுக்களும், கடுகு எண்ணெயின் மூலமாக நமக்குக் கிடைக்கின்றன. எனவே கடுகு எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்த முடியாவிட்டாலும் நம் உடல் மற்றும் தலை பகுதியில் தடவி குளித்து வர பல்வேறு நோய்களையும் குணப்படுத்தி கொடுக்கும். மேலும் சனிக்கிழமைகளில் எல்லா கடவுள்களையும் நினைத்து கடுகு எண்ணெய் ஊற்றி அகல் தீபம் ஏற்றி வர உங்களுடைய எல்லா வகையான கடன் பிரச்சினையும் நிச்சயம் நிவர்த்தி அடையும். நம்பிக்கையுடன் செய்து பலன் பெறுங்கள்.

- Advertisement -