கடன் தீர அமாவாசை பரிகாரம்

amavasai1
- Advertisement -

பங்குனி மாதத்தின் அமாவாசை திதி நாளை வரவிருக்கின்றது. 8-4-2024 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று அமாவாசை. இந்த நாளில் நம்முடைய முன்னோர்கள் வழிபாடு செய்வதை தவிர விடக்கூடாது. அதை முறையாக கடைப்பிடித்து விடுங்கள். இந்த பங்குனி மாதத்தின் அமாவாசையானது திங்கட்கிழமை அன்று வந்திருக்கிறது.

சனிக்கிழமை பிரதோஷம் வந்தால், அந்த சனி பிரதோஷத்திற்கு எத்தனை மகத்துவம் இருக்கிறது. அதேபோலத்தான் திங்கட்கிழமை அமாவாசை வரும் பட்சத்தில், அந்த அமாவாசைக்கும் பல மடங்கு சக்தி இருப்பதாக ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது. சிவபெருமானை வேண்டி நாளைய தினம் இந்த பரிகாரத்தை உங்களுடைய வீட்டில் செய்தால் இந்த வருடம் முழுவதும் நீங்க வாங்கிய கடனை எல்லாம் சீக்கிரமாக திருப்பிக் கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். கடன் தீர்க்கும் அமாவாசை பரிகாரம் என்ன இந்த பதிவினை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

அமாவாசை கல் உப்பு பரிகாரம்

நாளைய தினம் வீட்டில் இருக்கும் பெண்கள் முன்னோர்களுக்கு, சுத்தபத்தமாக சமையல் செய்து படையல் போட்டு முன்னோர்கள் வழிபாட்டை செய்ய தவறவே கூடாது. முன்னோர்களின் ஆசிர்வாதம் ஒரு குடும்பத்திற்கு ரொம்ப ரொம்ப முக்கியம். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கடன் தீர்க்கக் கூடிய இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருட்கள் சதுர வடிவில் இருக்கும் சிவப்பு நிற துணி, அல்லது மஞ்சள் நிற துணி ஏதாவது ஒன்றை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அது பயன்படுத்தி துணையாக இருக்கக் கூடாது. ஒரு புது லைனிங் துணி இருந்தால் கூட அதை இந்த பரிகாரத்திற்கு நீங்கள் பயன்படுத்தலாம். இந்த துணியின் நடுவே 1 கைப்பிடி அளவு கல் உப்பை வைத்து, ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, உங்களுடைய வீட்டில் ஒரு குண்டுமணி தங்கம் சின்ன மூக்குத்தி இருந்தாலும் அந்த கல் உப்பில் வைத்து முடிச்சாக கட்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த முடிச்சை உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு பூஜை அறையில் நின்று சிவபெருமானையும் குலதெய்வத்தையும் மனதார பிரார்த்தனை செய்து உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனை எல்லாம் சீக்கிரம் தீர வேண்டும் என்ற வேண்டுதலை வைக்க வேண்டும். பிறகு இதைக் கொண்டு போய் நிலை வாசலில் நடு பக்கத்தில் மாட்டி விடுங்கள்.

நிலைவாசல் சட்டத்தில் ஆணி அடிக்கக் கூடாது. முடிந்தால் சுவர் பகுதியில் ஆணி அடித்து மாட்டலாம். இல்லையென்றால் பிளாஸ்டிக்கில் ஒட்டுவது போல இப்போது கடைகளில் நிறைய பொருட்கள் விற்கிறது. ஆணிக்கு பதில் அது மாதிரி ஏதாவது ஒரு பொருளை வாங்கி ஒட்டி இந்த முடிச்சை அதில் மாட்டி விடுங்கள்.

- Advertisement -

நிலைவாசல் படியில் இந்த கல்லுப்பு முடிச்சை அமாவாசை அன்று மாட்டும் போது உங்களுடைய வீட்டிற்குள் மகாலட்சுமி அம்சம் நிறைவாக கிடைக்கும். பண வரவு அதிகமாக வரும். செல்வ வளம் அதிகரிக்கும் போது தானாக உங்களுடைய கடன் சுமை குறைய தொடங்கிவிடும்.

இந்த அமாவாசை அன்று இந்த முடிச்சை நிலை வாசலில் கட்டினால், அடுத்த அமாவாசை வரை அந்த முடிச்சு உங்கள் நிலைவாசலில் இருக்கட்டும். மீண்டும் அடுத்த அமாவாசை, பழைய உப்பை மாற்றினால் போதும். ஒரு சில சமயம் அந்த கல் உப்பு தண்ணீர் விட்டு கீழே ஒழுக தொடங்கும். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

அப்படியானால் அந்த முடிச்சை அவிழ்த்து உள்ளே இருக்கும் கல்லுப்பை மட்டும் தண்ணீரில் கொட்டி கரைத்து விட்டு புது கல் உப்பு வைத்துக் கொள்ளலாம். உப்பில் வைத்த ஒரு ரூபாய் நாணயத்தையும் தங்கத்தையும் பத்திரமாக நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்த பல பேர் பலனடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: பங்குனி அமாவாசை பரிகாரங்கள்

நாளையஸதினம் காலை 6:00 – 7:30, மதியம் 12:00 – 1:30, மாலை 6:00 – 7:30 இந்த குறிப்பிட்ட நல்ல நேரத்தில் மேல் சொன்ன உப்பு பரிகாரத்தை உங்களுடைய வீட்டில் செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பாருங்கள். தொடர்ந்து மூன்று அமாவாசை இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் உங்களுடைய குடும்பத்தில் நல்லது நடக்கும் என்பது மட்டும் உறுதி. நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -